Showing posts with label ESSAY. Show all posts
Showing posts with label ESSAY. Show all posts

The Art of Translation Enriching Classical Tamil - Essay நெடுவினா: செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் எளிதாகப் படித்து, அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில், கடினமான வரிகளை நீக்கி, முக்கிய வார்த்தைகள் (Key words) மற்றும் தலைப்புகளை உள்ளடக்கி எளிமைப்படுத்தப்பட்ட விடை இதோ:

நெடுவினா: 'புயலிலே ஒரு தோணி' கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும் பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • மங்கலான இருட்டு
  • இடிமுழக்கம், மழை
  • மீண்டும் இடி, மழை, காற்று
  • எங்கும் வெள்ளம், இருட்டு
  • சூரிய வெளிச்சம்
  • பாண்டியனின் மலைப்பு
  • கரையை நோக்கி
  • முடிவுரை

முன்னுரை:

'புயலிலே ஒரு தோணி' என்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம். இதன் ஆசிரியர் ப.சிங்காரம். இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த சூழலில், மலேசியா, இந்தோனேசியப் பகுதிகளில் நடப்பதாக அமைந்த கற்பனைப் படைப்பே இப்புதினம். இதன் 'கடற்கூத்து' பகுதியைக் காண்போம்.

மங்கலான இருட்டு:

வெயில் இமை நேரத்தில் மறைந்து கும்மிருட்டு சூழ்ந்தது. புழுக்கம் அதிகரித்தது. அலைகள் எண்ணெய் பூசியது போல் மொழுமொழுவென (ஒலிக்குறிப்பு) நெளிந்தன. காற்றே இல்லாமல் ஒரே இறுக்கமாக இருந்தது.

இடிமுழக்கம், மழை:

கிடுகிடுக்கும் இடியுடன் மின்னல் வானைப் பிளந்தது. வானம் உடைந்து கொட்டுகொட்டென்று (அடுக்குத்தொடர்) மழை கொட்டியது. சூறாவளிக்காற்றும் மழையும் சேர்ந்து ஆடிக் குதித்தன.

மீண்டும் இடி, மழை, காற்று:

தொங்கான் (கப்பல்) தள்ளாடியது. மலை போன்ற அலைகள் கப்பலைத் தாக்கின. வான், கடல், காற்று, மழை ஆகிய நான்கும் சேர்ந்து கப்பலை நொறுநொறுவென (அடுக்குத்தொடர்) நொறுக்கும்படி கடல் வெறிக் கூத்தாடியது.

எங்கும் வெள்ளம், இருட்டு:

உடலெங்கும் வெள்ளம். ஈர உடை உடலை ரம்பமாய் அறுத்தது. கப்பல் மூழ்கியும் தாவியும் நீந்தியது. எங்கும் இருட்டிருட்டு, கும்மிருட்டு, குருட்டிருட்டு (அடுக்குத்தொடர்). உடம்பில் சிலுசிலுப்பான மரமரப்பு ஏற்பட்டது.

சூரிய வெளிச்சம்:

லேசான சூரிய வெளிச்சம் தெரிந்ததும், மாலுமிகள் கப்பலில் இருந்த நீரை இறைத்து வெளியே ஊற்றினர். மரத்தை வெட்டி, கப்பலின் ஓட்டையை அடைத்து ஆப்பு அடித்தனர்.

பாண்டியனின் மலைப்பு:

புயல் எவ்வளவு நேரம் நீடித்தது என்று பாண்டியனுக்குத் தெரியவில்லை. புயலின் போது மாலுமிகளால் கடலில் வீசப்பட்ட பெட்டிகளும் மூட்டைகளும் கப்பலோடு மிதந்து வந்தன.

கரையை நோக்கி:

இனிமேல் பயமில்லை, இரண்டு நாளில் கரையை அடையலாம் என நம்பினர். மறுநாள் சூரியன் உதித்தது; கடல் அலைகள் இயல்பாக வீசின. கப்பல் சீராக மிதந்து சென்றது.

முடிவுரை:

புயலில் சிக்கிய கப்பலின் போராட்டம், அழகான வருணனைகள், அடுக்குத் தொடர்கள் மற்றும் ஒலிக்குறிப்புச் சொற்களால் இக்கதையில் மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பு (தேர்வில் அதிக மதிப்பெண் பெற):

விடைத்தாளினைத் திருத்தும் ஆசிரியர்கள் 'மொழுமொழுவென', 'கொட்டுகொட்டென்று', 'நொறுநொறுவென', 'இருட்டிருட்டு' போன்ற முக்கிய வார்த்தைகளை (Keywords) எதிர்பார்த்து தான் மதிப்பெண் வழங்குவார்கள். எனவே, தேர்வில் அவற்றை அடிக்கோடிட்டோ அல்லது தனித்துக் காட்டியோ எழுதுவது முழு மதிப்பெண் (8/8) பெற உதவும்.

பாய்ச்சல் - சா. கந்தசாமி சிறுகதை கட்டுரை (Paaychal Short Story Essay)

குறிப்புச் சட்டகம்


​முன்னுரை

​வேடிக்கை

​அனுமன் ஆட்டம்

​அழகின் ஆர்வம்

​புதுக்கலைஞன்

​முடிவுரை



​முன்னுரை


​உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டித் தனித்தன்மையுடன் விளங்குவான். தன் கலையைப் பின்பற்ற ஒரு தகுந்த வாரிசு உருவாகும்போது அவன் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறான். இதனைச் சா. கந்தசாமி 'பாய்ச்சல்' கதையின் மூலம் விளக்குகிறார்.



​வேடிக்கை


​நாதசுரமும் மேளமும் கொட்டும் ஒலியைக் கேட்டவுடன் சிறுவர்கள் அங்கே ஓடினர். அழகும் அவர்களுடன் ஓடினான். அங்கே மரத்திலிருந்து ஒரு குரங்கு இறங்குவதைக் கண்டான். அனுமன் வேடமிட்ட கலைஞர் தன் வாலைச் சுழற்றி ஆடியபோது எங்கும் புழுதி பறந்தது. மக்கள் கூட்டமே அங்கே திரண்டிருந்தது.


​அனுமன் ஆட்டம்


​அனுமன் வேடமிட்டவர் 'கீச் கீச்' என்று கத்திக்கொண்டே பந்தல் காலைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி மறைந்தார். பின்னர் எரியும் வாலோடு கீழே குதித்து கரணமடித்து ஆடினார். தீயின் வெப்பம் தணிந்ததும், அழகு அவரிடம் சென்றான். அனுமன் ஆட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மேளக்காரர்களே திணறினர். இறுதியில் ஆட்டம் ஓய்ந்தது.


​அழகின் ஆர்வம்


​ஆட்டம் முடிந்ததும் அழகு கலைஞரைப் பின்தொடர்ந்து கோவிலுக்குச் சென்றார். கலைஞர் தன் அலங்காரங்களை நீக்கினார். அழகு அவரிடம் சென்று, "எனக்கும் உங்களைப் போல் ஆட வேண்டும்" என்று தன் விருப்பத்தைக் கூறினான். கலைஞர் சம்மதிக்க, அழகு அங்கிருந்த அனுமன் வாலைக் கட்டிக்கொண்டு, முகமூடியை மாட்டிக்கொண்டு தனக்குத் தெரிந்தபடி ஆடிப் பார்த்தான்.


​புதுக்கலைஞன்


​அழகு ஆடுவதைக் கண்ட அந்தப் பழைய கலைஞர், உற்சாகமடைந்து அவனுக்கு மீண்டும் ஆடிக் காட்டினார். அழகும் அவரைப் போலவே துள்ளிக் குதித்து (பாய்ச்சல்) ஆடினான். இதைப் பார்த்த கலைஞர், "தனக்குப் பின் இக்கலை அழிந்துவிடாது, வளர்க்க ஆள் கிடைத்துவிட்டான்" என்ற பெருமிதத்தில் நெகிழ்ந்து போனார்.


​முடிவுரை


​கலை என்பது ஒருவருடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. அது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் போதே அதன் பெருமை நிலைக்கும். அழகு எனும் புதுக்கலைஞனின் பாய்ச்சல், அத்தெருக்கூத்துக் கலை வாழும் என்பதை உறுதிப்படுத்தியது.


"சாலை பாதுகாப்பு" குறித்து கட்டுரை எழுதுக. Essay on Road Safety in Tamil | சாலை பாதுகாப்பு கட்டுரை

"சாலை பாதுகாப்பு" குறித்து கட்டுரை எழுதுக.

முன்னுரை:

அறிவியல் வளர்ச்சியால் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட இக்காலத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது. இக்கட்டுரையில் சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் காண்போம்.

விபத்துக்கான காரணங்கள்:

சாலை விபத்துகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது அருந்திவிட்டு ஓட்டுதல், கைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல் செல்லுதல், முறையான பயிற்சி இன்றி வாகனங்களை இயக்குதல் போன்றவை முக்கியக் காரணங்களாகும். மேலும், தரமற்ற சாலைகளும், போதிய வெளிச்சமின்மையும் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

* இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

* மகிழுந்து ஓட்டுநர்கள் இருக்கைப் பட்டை (Seat belt) அணிய வேண்டும்.

* பாதசாரிகள் நடைபாதையைப் பயன்படுத்த வேண்டும்; சாலையைக் கடக்க மேம்பாலங்களைப் பயன்படுத்த வேண்டும்.

* போக்குவரத்து சைகைகளுக்கு (Traffic Signals) மதிப்பளித்துச் செல்ல வேண்டும்.

* வாகனங்களை உரிய காலத்தில் பராமரித்து, நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அரசின் பங்கு:

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசுக்கு முக்கியப் பங்குண்டு. தரமான சாலைகளை அமைத்தல், சாலை விதிகளை மீறுவோருக்குக் கடுமையான அபராதம் விதித்தல், பள்ளிப் பாடத்திட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடங்களைச் சேர்த்தல், விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல் போன்றவற்றின் மூலம் விபத்துகளைக் குறைக்கலாம்.

முடிவுரை:

'வேகம் விவேகமல்ல, ஆபத்து', 'பயணம் தொடரட்டும், பாதுகாப்பாக'. நமது உயிர் விலைமதிப்பற்றது. சாலை விதிகளை மதிப்போம், விபத்துகளைத் தவிர்ப்போம். பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு, வளமான இந்தியாவை உருவாக்குவோம்.

The Future of Artificial Intelligence: An In-depth Essay | AI in Various Sectors

8 மதிப்பெண் வினா: செயற்கை நுண்ணறிவு

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேநீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துக்களை ஒட்டிச் 'செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்

முன்னுரை

ஒரு மனிதனைப் போன்றே உணர்வுப் பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், தர்க்கரீதியிலும், தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஆற்றலை ஒரு இயந்திரம் பெறுவது என்ற வளர்ச்சிப் போக்கு சிக்கலான பல கேள்விகளை எழுப்புகின்றது. செயற்கை நுண்ணறிவு வணிகத்தோடு நின்று விடுமா? அல்லது சமூக நலனில் அக்கறை கொள்ளுமா? என்பதைப் பற்றி விவாதிப்போம், வாருங்கள்.

பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு

முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள் இந்த உலகில் மனிதனின் தேவையை வெகுவாகக் குறைத்து வருகிறது. மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்களில் - வேலைகளில் புகுந்து மனிதர்களை வெளியேற்றி வருகின்றன.

ஆசிரியராக...

செப்டம்பர் 2016-இல் நுழைந்துள்ள இங்கிலாந்தின் முதல் வகுப்பறை ரோபோ ஆசிரியர் பெப்பர் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

சமையல் கலைஞராக...

மோலி ரோபாட்டிக்ஸ் நிறுவனம் 100 சதவீதம் தானாக இயங்கும் புத்திசாலித்தனமான ரோபோ சமையல்காரரை உருவாக்கியுள்ளது.

அறுவை சிகிச்சை நிபுணராக...

மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சையில் ரோபோக்கள் முன்னரே இருந்தாலும், தற்போது மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, கண் அறுவைச் சிகிச்சை வரை முன்னேறியுள்ளன.

சில்லறை விற்பனையாளராக...

நெஸ்லே நிறுவனம் ஜப்பான் நாடு முழுக்க சுமார் 1000 மளிகை மற்றும் காபி கடைகளில் பெப்பர் ரோபோக்களை சில்லறை விற்பனையாளர் பணியில் பயன்படுத்தி வருகிறது.

பாதுகாவலராக...

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் பாதுகாவலர் பணியில் ரோபோக்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கால்நடைப் பராமரிப்பாளராக...

ஆஸ்திரேலிய நிறுவனம் கால்நடைகளை மேய்க்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது.

உலகின் முதல் ரோபோ பண்ணை ஜப்பானில் உருவாகி வருகிறது. இங்குள்ள ரோபோக்கள் பயிர் நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்கின்றன.

மருந்தாளுநராக...

மருந்தாளுநர் பணியிலும் சமீபத்திய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மனிதத் தவறுகளால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மின் வணிகத்தில்...

புதிய வணிக வாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு நல்குகிறது. பெருநிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. வணிகத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை இவை பறைசாற்றுகின்றன.


எதிர்கால வெளிப்பாடுகள்

உள்ளீடு செய்யப்பட்ட மற்றும் திரட்டப்பட்ட மின்தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவது, இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வது போன்ற தொழில்நுட்ப உத்திகளின் மூலம் செயற்கை நுண்ணறிவு சுயேச்சையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்து வருகிறது.

உயிரியல் துறையிலும் கணினித் துறையிலும் நடக்கும் ஆராய்ச்சிகள் ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் எட்டப்படும் மைல்கல்கள் ஒவ்வொன்றும் மனித மூளையைக் குறித்த புதிய புரிதல்களை ஏற்படுத்துவதோடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அடைய வேண்டிய புதிய இலக்கையும் நிர்ணயிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் மிக விரைவில் உணர்வு கொண்ட மனித இயந்திரங்களின் பயன்பாடு சாத்தியமே என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.

செயற்கை நுண்ணறிதிறன் தன் வளர்ச்சியின் ஊடாக உணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலை மெல்ல மெல்ல அடைந்து வருகின்றது. அத்தகைய உணர்வு சார்ந்த முடிவெடுக்கும் ஆற்றலால், ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த தேனீர் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளும் என்று நம்பலாம்.


முடிவுரை

செயற்கை நுண்ணறிவு நமது வாழ்க்கையையும் வணிகத்தையும் நம்மை அறியாமலேயே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள நாம் அணியமாக இருக்க வேண்டும்.

Kalpana Chawla Essay: Life, Education, and Achievements in Space

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

கல்பனா சாவ்லா நாசா விண்வெளி வீரர்

முன்னுரை

                "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 

                 பேணி வளர்த்திடும் ஈசன் "

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள், வீரமங்கை. நிலவைப் பார்த்து  உணவுண்ட காலத்திலேயே, நிலவில் சோறு உண்ணக் கனாக் கண்டவள், கல்பனா.  வானில் நட்சத்திரங்களை எண்ணி, அவள் வானத்து நட்சத்திரமான வரலாறு காண்போம், வாரீர்!

குழந்தைப் பருவம்

             அரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் பனாரஸ் லால் சாவ்லா - சன்யோகிதா தேவி இணையருக்கு மகளாக மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தார், கல்பனா.   கல்பனா என்ற பெயருக்கு 'கற்பனை' என்று பொருள்.  கல்பனாவுக்கு, விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜே. ஆர். டி. டாடா (ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அவர்களைப் பார்த்தது முதல் விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி

        கல்பனா பள்ளிக்கல்வியைத் தாகூர் அரசுப் பள்ளியிலும், இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பைப் பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையிலும், முனைவர்பட்ட விண்வெளிப் பொறியியல் படிப்பைக் கொலராடோ பல்கலையிலும் படித்தார்.

பணி

           நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தோடு இணைக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட முறைகள் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரை இறங்குதல் பற்றிக்  திரவ இயக்கவியல் கணக்கீடு ஆராய்ச்சி மேற்கொண்டார்.  விமானம் மற்றும் மிதவை வானூர்திகளை (கிளைடர்களை) ஓட்டக் கற்றுக் கொடுக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு, ஓட்ட அனுமதியும் பெற்றார்.

          1995ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.  

சாதனைகள்

            1997ஆம் ஆண்டு விண்வெளி விண்கலப் பணி ஊர்தி 87 இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார்.  பின்னர், தொழில் நுட்ப வல்லுநராக விண்வெளி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார்.

             ஜனவரி 16, 2003 விண்வெளி விண்கலப்பணி ஊர்தி 107 இல் விண்வெளிக்குச் சென்றார்.  கல்பனா சாவ்லாவின் பொறுப்புகளாக 'மைக்ரோ ஈர்ப்பு' (கிராவிட்டி) சோதனைகள் அமைந்திருந்தன. கல்பனாவின் குழு எண்பது பரிசோதனைகளை மேற்கொண்டது.

விபத்து

         பிப்ரவரி 1, 2003 இல் தனது பதினாறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானார்கள்.  இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

விருதுகள்

            அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசாவின் விண்ணோட்டப் பதக்கம் மற்றும் சிறப்பு சமூக சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டது.  இளம்பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு 2004 முதல் 'கல்பனா சாவ்லா விருது' வழங்கி வருகிறது.  இஸ்ரோ 'கல்பனா சாவ்லா' பெயரில் ஒரு விண்கலத்தை ஏவியது. அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் தனது விண்கலத்திற்கு 'எஸ்எஸ் கல்பனா' என்று பெயரிட்டுள்ளது.  

முடிவுரை

             விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  அவரது தியாகம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டு, கனவுகளை நனவாக்கிச், சாதனை படைத்த சாவ்லாவின் வழியைப் பின்பற்றுவோம், வாரீர்!

An Essay on a Visit to the Government Exhibition

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

அரசுப்பொருட்காட்சி

முன்னுரை

கண்ணால் காண்பவை மனத்தில் ஆழமாகப் பதிந்து, நெடுங்காலம் நிலைத்திருக்கும். அதனால்தான், பள்ளிகளில் சில இடங்களைக் குறிப்பிட்டு சுற்றுலாவாக அழைத்துச் செல்கின்றனர். அந்த வகையில் பொருட்காட்சிகள் கூட மக்கள் அறிவை வளர்க்க பெருந்துணை புரிகின்றன. நான் அண்மையில் என் நண்பர்களுடன் மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அது குறித்துச் சில செய்திகளைக் கூறுகிறேன், கேளுங்கள்.

தமுக்கம் மைதானம்

தமுக்கம் மைதானம் மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மைதானமாக பதினான்காம் நூற்றாண்டில் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டு, மதுரை நாயக்கர் வம்சத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம், மாட்டு சண்டைகள் போன்ற விளையாட்டுகளும் சிலம்பு சண்டை, கத்திச் சண்டை போன்ற கலைகளும் இங்கு நடத்தப்பட்டன.

அரசுப் பொருட்காட்சி

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரைத் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெறும். மாலை வேளையில் பல வண்ண விளக்குகளால் மைதானமே ஜொலிக்கும். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

பல்துறை அரங்குகள்

அரசு ஏற்பாடு செய்திருந்த பொருட்காட்சி ஆதலால், உள்ளே நுழைந்ததும் அரசு சார்புடைய காவல்துறை, சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறை, அற நிலையத் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, விளம்பரத் துறை, போக்குவரத்துத் துறை, மின்துறை, அறிவியல் துறை எனப் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயம், கைத்தறி, மீன் வளர்ப்பு முதலான துறை சார்ந்த அரங்குகளும் இருந்தன. அவற்றில் நமக்குத் தேவையான விளக்கமளிக்கப் பொறுப்புடைய பலர் காத்திருந்தது சிறப்பாக இருந்தது. நான் பல வினாக்களை வினவி, என் ஐயங்களைப் போக்கிக் கொண்டேன்.

பல்வேறு கடைகள்

சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்கும் கடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல்வேறு கடைகள் அங்கே காணப்பட்டன.

கேளிக்கை அரங்குகள்

பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன. மீன் கண்காட்சிக் கூடம் கண்களைக் கவர்வதாக இருந்தது. பல்வேறு வகையான இராட்டினங்களில் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என அனைவரும் சுற்றி மகிழ்ந்தனர்.

உணவு அரங்குகள்

குடும்பம் குடும்பமாக வந்திருந்த சிலர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு உணவு அரங்கங்களில் கூடிநின்று, பல்வேறு வகையான தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். அங்குக் குடிப்பதற்குப் பல்வேறு வகையான சாறுகள் வழங்கப்பட்டன. பனிக்கூழ் வகைகள் எல்லோரையும் கவர்ந்தன. 'ஆவின்' பால் நிறுவனம் அமைத்திருந்த அரங்கில் எண்ணற்ற மக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுவையுடைய பண்டங்களை வாங்கிச் சுவைத்தனர்.

முடிவுரை

பொருட்காட்சி என்பது வெறும் பொருள்களை மட்டும் காண உதவவில்லை. அது பல்வேறு துறை அறிவையும் பெற உதவுவதாக அமைந்துள்ளது. எனவே, அடுத்த முறை நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.

His First Flight by Liam O'Flaherty: Complete Q&A and Essay Analysis

Answer the following questions - His First Flight | Prose by Liam O'Flaherty

A. Answer the following questions in a sentence or two.

1. How was the young seagull’s first attempt to fly? (or) Why did the seagull fail to fly?

The young seagull’s first attempt to fly was a failure, because he was afraid to fly. He failed to muster up courage to fly. Instead of flapping his wings and flying away, he ran back to the little hole.

2. How did the parents support and encourage the young seagull’s brothers and sister?

The parents supported and encouraged the young seagull’s brothers and sister, by perfecting them in the art of flight, teaching them how to skim and surf the waves and how to dive for fish.

3. Give an instance that shows the pathetic condition of the young bird.

The young seagull failed to muster up courage to fly. So he had to stay in his nest. He had no food. He could not find anything but the dried pieces of eggshell to eat.

4. How did the bird try to reach its parents without having to fly?

The bird walked back and forth from one end of the ledge to the other. Without trying to fly and stepping daintily, he tried to find some means of reaching his parents. There was a deep wide crack between him and his parents.

5. Do you think that the young seagull’s parents were harsh to him? Why?

No. I don’t think that the parents were harsh to him. Here the young seagull’s parents trained him to fly. The mother seagull showed a piece of fish to the hungry young seagull. Maddened by hunger, he dived at the fish and began to fly.

6. What prompted the young seagull to fly finally?

The mother seagull showed a piece of fish to the hungry young seagull. But he couldn’t reach the food as it was out of reach. Maddened by hunger, he dived at the fish. Thus the parental care, its natural bird instinct to fly and its urge for survival prompted the young seagull to fly, finally.

7. What happened to the young seagull when it landed on the green sea?

The young seagull landed on the green sea and sank into it. His belly touched the water and he sank no farther. He was floating on it.

B. Answer each of the following questions in a paragraph of about 100-150 words.

1. Describe the struggles underwent by the young seagull to overcome its fear of flying.

Lesson: HIS FIRST FLIGHT
Author: Liam O’Flaherty
Theme: Parenting
Characters: The young seagull and its family
Outlook: The young seagull’s fear – hungry – mother seagull’s training – his first flight

The young seagull was alone on his ledge. Unlike his brothers and sister, he was afraid to fly. He failed to muster up courage to fly. His parents had come around calling to him shrilly, scolding him, threatening to let him starve on his ledge. He had no food. He could not find anything but the dried pieces of eggshell to eat. His parents wanted to teach him fly. So the mother seagull showed a piece of fish to the hungry young seagull. But he couldn’t reach the food as it was out of reach. Maddened by hunger, he dived at the fish. In order to grab it, he had no other choice other than to flap his wings and fly towards his meal. He landed on the green sea and sank into it. He was floating on the water. The young birds’ family was very happy and they offered him scraps of dog-fish for his first flight. Thus the parental care, his natural bird instinct to fly and his urge for survival prompted him to fly, finally.

2. Your parents sometimes behave like the young bird’s parents. They may seem cruel and unrelenting. Does it mean that they do not care for you? Explain your views about it with reference from the story.
  • Parents are our first teachers. Guiding their ward/children at every stage is their primary responsibility. If they fail to do this, the children cannot attain perfection.
  • It is said that children start learning and responding even when they are in the womb of the mother. A child which grows, without the guidance of the parents, lack in the art of speech, walking, holding things, eating and even doing their everyday basic activity. They even need toilet training.
  • Some children can learn easily. But few hesitate or struggle while learning new things. To them, the parents have to be harsh for the betterment of their life as we see the young seagull in this lesson. As the old proverb says “bend the twig bend the tree”. They may seem cruel and unrelenting but it is for the good of their children. It is the duty of every parent to educate and teach their young ones the art of life.

ESSAY

Introduction

Liam O’Flaherty was a famous Irish novelist and short story writer. One of his great work is ‘His First Flight’. A story that proves the saying ‘To master any art, one should overcome fear.’

The young seagull

The young seagull was one among the four offsprings of the father and the mother seagulls. He was very timid. He was alone on the ledge. Unlike his two brothers and sister, he was afraid to fly. He failed to muster up courage to fly. Instead of flapping his wings and flying away, he ran back to the little hole.

The reaction of the parents

His parents had come around calling him shrilly, scolding him, threatening to let him starve on the ledge. He had no food. He could find nothing but the dried pieces of eggshell to eat. His parents wanted to teach him to fly.

The young one’s first flight

So the mother seagull showed a piece of fish to the hungry young seagull. But he couldn’t reach the food as it was out of reach. Maddened by hunger, he dived at the fish. In order to grab it, he had no choice other than to flap his wings and fly towards his meal.

Landing on the water

He landed on the green sea and sank into it. His belly touched the water and he sank no farther. He was floating on the water.

The reaction of the family

The young birds’ family was very happy. His mother swooped past him, his father flew over him, and his brothers and sister were flying around him, high and low out of joy. They offered him scraps of dog-fish for the success of his first flight. Thus, his natural bird instinct and his urge for survival prompted him to fly finally.

Conclusion

These are the struggles underwent by the young seagull to overcome its fear of flying.

Moral: Necessity is the mother of action.

HELP TO THE POOR | THE UPLIFTMENT OF THE DOWNTRODDEN

Outline: Tyranny of injustice in the world champions of the downtrodden • Mahatma Gandhi Dr. Ambedkar social workers and philanthropists Martin Luther king; conclusion.

All over the world there are people who are miserable and unhappy because they are oppressed. Some are ground down by poverty and others by tyrants and oppressors or by an unjust social system. They find themselves quite helpless because of the tyranny of injustice.


From time to time there have arisen great and noble souls who have championed the cause of the downtrodden. Among these noble souls are Mahatma Gandhi, Doctor Ambedkar and Martin Luther King.


Mahatma Gandhi gave up all he had to identify himself with the poor, starving millions of Indians. Gandhi asserted that cottage industries should be encouraged to enable the poor to earn a livelihood. He believed in the worth and dignity of the human personality irrespective of birth or wealth. He fought to abolish untouchability and the caste system.


Doctor Ambedkar, having been born in the ranks of the downtrodden or scheduled castes, knew what disadvantages and disabilities they suffered from. He did his best to make the scheduled castes gain social acceptability. 


Many social workers and philanthropists are also constantly striving to uphold human dignity and to give man the importance that is due to him as a rational and spiritual being.


Martin Luther King was a great humanist. Being an American Negro he was rightly placed to understand the problems of his own people. The main disadvantages they suffered from were segregation and lack of opportunity to come up in life. Discrimination was practised by the whites against the blacks. Martin Luther King fought by nonviolent and peaceful methods to do with discrimination and segregation. He roused the social conscience against the injustice done to the Negro. He suffered imprisonment several times because he had the courage of his convictions.


Thus we note that all those who work for the upliftment of the downtrodden are blessed with courage, unselfishness and a high sense of human dignity. 


Difficult Words: 

Oppressed - caused to feel ill or sad, ruled in a hard and cruel way. 

tyranny - cruel rule. 

downtrodden - oppressed or treated badly by people in power, not getting just treatment, pushed down by a stronger power. 

scheduled castes - considered as low status because of the caste system. 

philanthropists -  those who love their fellow men and give them money to bring comfort. 

humanist - one who has kindness and mercy for his fellow beings, and who tries to reduce their pain and suffering. 

segregation - separateness. 

discrimination - partiality. 

conviction - what one believes to be true or right.


.


ESSAYS


DIALOGUE


EXPANSION


SPEECH


LETTERS


GRAMMAR


WRITING SKILLS


INFORMATION-TRANSFER


LEAFLET


REPORT


APPEAL


INTERVIEW


.


Essay: On Catching the Train

Essay: On Catching the Train

Outline: Introduction - Some people catch trains with ease - an example - I am nervous about catching trains - this train-fever is a symptom. 

Thank heaven! I have caught it.... I am in a corner seat, the compartment is not crowded, the train is about to start, and for an hour and half, while I travel towards my destination, I can read, or think or write, or sleep, or talk, as I choose. 


There are some people who make nothing by catching trains. They can catch trains with miraculous ease. They are never too early and never too late. They leave home or office with a quiet certainty of doing the thing that is simply stupefying. Whether they walk, or take a bus, or call a taxi, it is the same: they do not hurry, they do not worry, and when they find they are in time and that there's plenty of room they manifest no surprise.



I am reminded of a man who was enormously particular about trains and arrangement the day or the week before he needed them, and he was wonderfully efficient at the job. But as the time approached for catching a train he became exasperatingly calm and leisured. He began to take his time over everything and to concern himself with the arrangements of the next day or the next week, as though he had forgotten all about the train that was imminent, or was careless whether he caught it or not. And when at last he had got to the train, he began to remember things. He would stroll off to get a time - table or to buy a book, or to look at the engine. The nearer the minute for starting, the more absorbed he became in the mechanism of the engine. He was always given up as lost, and yet always stepped in as the train was on the move, his manner perfectly unruffled. 


Now I am different. I have been catching trains all my life, and all my life have been afraid I shouldn't catch them. Familiarity with the habits of trains cannot rid me of a secret conviction that their aim is to give me the slip if it can be done. No faith in my own watch can affect my doubts as to the reliability of the watch of the guard or the station clock or whatever deceitful signal the engine - driver obeys. Moreover, I am oppressed with the possibilities of delay on the road to the station. There may be a block in the streets, the bus may break down, the taxi - driver may be drunk or not know the way, or think I don't know the way, and take me round and round the squares, or in fact anything may happen, and it is never until I am safely inside (as I am now) that I feel really happy. 


This train - fever is, of course, only a symptom. It proceeds from that imaginative fear that is so common and incurable an affliction. The complaint has been very well satirized by one who suffered from it. "I have had many severe troubles in my life," he said. "but most of them never happened". That is it. We people who worry about the trains and similar things live in a world of imaginative disaster. The heavens are always going to fall on us. We look ahead, like Christians during ancient Roman days and see the lions waiting to devour us, and when they find they are only poor imitation lions, our timorous imagination is not set at rest, but invents other lions to scare us out of our wits. 


Difficult Words: Stupefying - baffling. imminent - about to happen. unruffled - undisturbed, calm. Give me the slip - escape from me. symptom - outward sign. satirized -  ridiculed. 


REFLECTIVE ESSAYS: A HAPPY HOME

REFLECTIVE ESSAYS: A HAPPY HOME

Outline

Any concept of a happy home is personal and not material – the house, the physical aspect of home, should be decent and pleasing - the head of the family should have an adequate income; the lady of the house should not go out for work - love and harmony are the soul of a happy home.

REFLECTIVE ESSAYS: A HAPPY HOME

There are different ideas of happiness, and corresponding to them, there are different kinds of happy homes. Some associate happy homes with skyscrapers and palatial bungalows, while others believe that happiness can dwell in humble cottages and one-room tenements in cities. Opinions differ on whether articles of luxury and prestige value are essential in a happy home. Any concept of a happy home is bound to be personal and my ideas on the subject are no exception to this truth.

Home in its physical aspect is a house, a structure of walls and a roof situated amidst certain surroundings. Though the physical aspect of a home is not very important, it should be, if possible, decent and pleasing. A fairly spacious and good house is one of the elements that constitute a happy home. Thinking of an ideal home, I conjure up a vision of a house where every adult member of the family has a room of his own, and which is situated either in a quiet suburb of a city or amidst the beauties of nature in a village or small town.

From this it follows that the head of the family living in a happy home - in my opinion, it is not a large family - should have an adequate income. Poverty and happiness do not go hand in hand. To adapt a line from Gray, "chill penury freezes the genial current of the soul”. I have said that the head of the family should have an adequate income. In the happy home of my conception, the lady of the house does not supplement the family income by going out for work. A working wife neglects her primary duty of attending to her husband and children and spreading that atmosphere of sweetness and tenderness which transforms a house into a home. My opinions are I admit very archaic but old is gold it is said and as far as building a perfect and happy home I believe the lady of the house ought to be a house-wife.

Today while we are already into the twenty first century with the cost of living so very high most wives are forced to go out to work owing to circumstantial pressures. Under such conditions, both husband and wife must work hand in hand, share the chores of the house equally among them. To help build a happy home, both the husband and wife ought to be free from ego problems, in fact they should be humble and open to accept each other's ideas and strive towards a common goal together.

Difficult Words:

Skyscrapers - very tall buildings. concept - idea, conception. conjure up - call up a picture or vision in one's mind. penury - poverty. genial - happy. perforce - of necessity. bickerings - petty quarrels. archaic - very old-fashioned; no longer used.

THE INDEPENDENCE DAY

THE INDEPENDENCE DAY 


The fifteenth of August 1947 is a great day in the history of India. On this day India achieved her independence after centuries of slavery. It was an historic event. India became free after a long struggle and countless sacrifices. The National Tricolour Flag was hoisted on the Red Fort. Pandit Jawaharlal Nehru, the first Prime Minister of India, hoisted the National Flag in 1947. Since then, the fifteenth of August has been celebrated as Independence Day every year.


THE INDEPENDENCE DAY

Independence Day is celebrated all over the country with great joy and pride. This day has a special significance for Delhi, the capital of India. In Delhi it is celebrated in a big way. The Red Fort is the centre of attraction. Elaborate arrangements are made for the flag hoisting ceremony. The main function starts at 7.30 a.m.


People in the Red Fort to witness the event of the year not only from Delhi but from outside as well. School children gather in big numbers. Ministers, ambassadors and other foreign dignitaries also arrive. A running commentary of the programme is broadcast on All India Radio. The programme is also telecast for the convenience of T.V. viewers.


The Prime Minister unfurls the National Flag and as he does so, the National Anthem is sung by the school children. Twenty-one gun shots are fired in honour of the solemn occasion. The Prime Minister then addresses the Nation reminding the people of the great sacrifices made by the countless men and women to help win India her freedom. He exhorts the people to protect freedom at all costs appealing to them to be united all the time.


It is my sincere belief that we the people of India should pledge to preserve our hard-won freedom every year on this auspicious day. We should also make up our minds to remain united and do everything within our power to make the country prosperous in all directions.


School Essay for Students.

GROWING UP

GROWING UP

It is a dirty orange pouch with hand embroidered flowers. It is very small and, according to my mother, extremely gaudy. The tattered threads emerging from its insides tell a story of their own. This little object was given to me by my friend Manali, when I had just turned eleven years old. It was my first "purse"! I don't know why, but I always felt that a purse made you "grown up" I was so pleased when I got it that everything precious I had went into it. In the end it felt like a rock stuffed with petty objects, but for me it was my own little world.


Since both my parents work, I had to go often to my grandmother's house which was four bus stops away from my house. Since they were at times too busy to drop me off, my mother decided that it was finally alright to let me travel to grandma's place by the local bus service. Hearing this great "verdict” gave me a great sense of inexpressible pride. It was for me a sign that I had grown up and was capable of making my own decisions.


My first ticket was bought from the money in my "purse". I felt so grown up. "Purse” in hand I proudly asked for a ticket and got out my one rupee coin from the tiny world in my hand. This pouch has given me a great sense of responsibility and the feeling that I am finally a "big girl”. Its been a source of security for me. Whenever I have held it in my hand, I have felt on top of the world. Now of course my purse has been put away because it has finally reached its twilight years. I'd hate it, if something happened to it. I now have a leather purse but it hasn't given me that feeling I got when I received that little pouch.


Difficult Words: gaudy - Something that's gaudy is showy, bright and definitely tacky. So think twice about that gaudy rainbow-colored suit and shiny gold shoes ensemble. tattered - torn into shreds. twilight years - the last years of someone's life.


School Essay for Students.

A COVETED PRIZE WON BY THE OMTEX SCHOOL, DHARAVI.

A COVETED PRIZE WON BY THE OMTEX SCHOOL, DHARAVI.


Ours was a school known for academic excellence. We had never done well in any inter-school sports. But in 2021, we decided that we were going to win a prize. We were not going to train for all the events. We would put all our efforts into the 200 meters X 4 relay. Accordingly, I trained hard with the other four runners including Vishal the reserve.


On the day of the run our confidence collapsed completely. Our last and best runner Ashutosh was down with the flu. We were shaken, we had trained Vishal for all the positions except the position of the last runner. Vishal himself set about to console us and assured us that he would run as the last runner and would not disappoint the rest of us.


All eyes were on him as he received the baton without a flaw from Ronny who was the third man. The whole school began to chant, Go Vishal Go! And he went. We had never seen anything like it. He seemed to be seized by a demon, a good one of course, and dashed all the way to the tape leaving the other teams far behind. He made such a gallant effort that even the other schools cheered for him. When he touched the tape we went wild. The General School, Dharavi, had made a mark for itself in the sports arena.



When our team was invited to receive the winner's trophy, we pushed Vishal for reward even though I was the team captain. Vishal marched up to the stage and received the trophy. After the event we all gathered around Vishal and congratulated him and each other. Next, our own principal came followed by some teachers and parents to congratulate us. Before going home that day, the four of us went to visit Ashutosh at his home to show him the trophy. After all the victory was his as well.


Difficult Words: covet - to want to have something very much (especially something that belongs to somebody else). reserve - to keep something for a special reason or to use at a later time. baton - a stick which a runner in a race (a relay race) passes to the next person in the team. chant - to recite something in a monotonous repetitive tone, encourage one who is participating in the game. seized - to take hold of suddenly or forcibly. demon - an evil spirit. tape - a line indicating the location of the finish of a race. gallant - spirited, brave. arena - an area with seats around it where public entertainments (sporting events, concerts, etc.) are held. an area of activity that concerns the public.


School Essay for Students.

IN THE EXAMINATION HALL

IN THE EXAMINATION HALL 

Outline: The atmosphere in the examination hall - I started writing an essay on 'examination reforms' – the spirit of the subject possessed me – I walked out of the examination hall.


It was the first day of the 10th Examination. There was an atmosphere of suspense and tension in the examination hall. As the last bell rang, the perfect silence was broken by the rustle of the question papers in English which were being handed to the candidates, and the tense atmosphere gave place to one of excitement.


I was considered to be a bright student, a promising scholar. I used to study regularly throughout the year and was not at all scared of examinations. On this particular day I was unruffled and confident, and placidly read the question paper, as though it was a newspaper.


I always made it a point to attempt the essay first. While the other questions could be disposed of quickly, the essay demanded leisure, imagination and freshness of mind. One of the essay topics happened to be 'Examination' Reforms,' and in a fateful moment I plumped for it. After arranging my ideas on the subject, I started writing on the defects of the examination system. Can the work done by a student throughout the year be judged by a single final examination ? Aren't our examinations a test of memory rather than of intelligence and understanding ? Do they not put a premium on cramming? As I went on writing, I was possessed by the spirit of the subject. I lost myself in exposing the defects of the examination system and wrote with a fervour and sincerity quite unusual in an essay of this kind. An invigilator looked at me curiously, as if I was a poet composing a poem in a state of inspiration.

I finished the essay in an hour, an unusually long time. But the arguments against examinations which I had so sincerely put forward continued to trouble me. I looked at the pale faces of some of my companions, and something within me cried for action. I had not merely written an academic essay on examination reforms; I felt that I was engaged in a crusade against an evil. I felt that I must express protest against examinations in a concrete, practical form. To the inexpressible astonishment of my fellow-candidates and the invigilators, I surrendered my answer book two hours before the end of the examination and walked out of the hall !


Difficult Words: Unruffled - undisturbed. placidly- calmly. plumped for - chose. to put a premium on – make advantageous. possessed -dominated or controlled as by a spirit. to lose oneself in - to be engrossed in. fervour - deep feeling. crusade - struggle or movement against something bad.