பாய்ச்சல் - சா. கந்தசாமி சிறுகதை கட்டுரை (Paaychal Short Story Essay)

குறிப்புச் சட்டகம்


​முன்னுரை

​வேடிக்கை

​அனுமன் ஆட்டம்

​அழகின் ஆர்வம்

​புதுக்கலைஞன்

​முடிவுரை



​முன்னுரை


​உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டித் தனித்தன்மையுடன் விளங்குவான். தன் கலையைப் பின்பற்ற ஒரு தகுந்த வாரிசு உருவாகும்போது அவன் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறான். இதனைச் சா. கந்தசாமி 'பாய்ச்சல்' கதையின் மூலம் விளக்குகிறார்.



​வேடிக்கை


​நாதசுரமும் மேளமும் கொட்டும் ஒலியைக் கேட்டவுடன் சிறுவர்கள் அங்கே ஓடினர். அழகும் அவர்களுடன் ஓடினான். அங்கே மரத்திலிருந்து ஒரு குரங்கு இறங்குவதைக் கண்டான். அனுமன் வேடமிட்ட கலைஞர் தன் வாலைச் சுழற்றி ஆடியபோது எங்கும் புழுதி பறந்தது. மக்கள் கூட்டமே அங்கே திரண்டிருந்தது.


​அனுமன் ஆட்டம்


​அனுமன் வேடமிட்டவர் 'கீச் கீச்' என்று கத்திக்கொண்டே பந்தல் காலைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி மறைந்தார். பின்னர் எரியும் வாலோடு கீழே குதித்து கரணமடித்து ஆடினார். தீயின் வெப்பம் தணிந்ததும், அழகு அவரிடம் சென்றான். அனுமன் ஆட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மேளக்காரர்களே திணறினர். இறுதியில் ஆட்டம் ஓய்ந்தது.


​அழகின் ஆர்வம்


​ஆட்டம் முடிந்ததும் அழகு கலைஞரைப் பின்தொடர்ந்து கோவிலுக்குச் சென்றார். கலைஞர் தன் அலங்காரங்களை நீக்கினார். அழகு அவரிடம் சென்று, "எனக்கும் உங்களைப் போல் ஆட வேண்டும்" என்று தன் விருப்பத்தைக் கூறினான். கலைஞர் சம்மதிக்க, அழகு அங்கிருந்த அனுமன் வாலைக் கட்டிக்கொண்டு, முகமூடியை மாட்டிக்கொண்டு தனக்குத் தெரிந்தபடி ஆடிப் பார்த்தான்.


​புதுக்கலைஞன்


​அழகு ஆடுவதைக் கண்ட அந்தப் பழைய கலைஞர், உற்சாகமடைந்து அவனுக்கு மீண்டும் ஆடிக் காட்டினார். அழகும் அவரைப் போலவே துள்ளிக் குதித்து (பாய்ச்சல்) ஆடினான். இதைப் பார்த்த கலைஞர், "தனக்குப் பின் இக்கலை அழிந்துவிடாது, வளர்க்க ஆள் கிடைத்துவிட்டான்" என்ற பெருமிதத்தில் நெகிழ்ந்து போனார்.


​முடிவுரை


​கலை என்பது ஒருவருடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. அது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் போதே அதன் பெருமை நிலைக்கும். அழகு எனும் புதுக்கலைஞனின் பாய்ச்சல், அத்தெருக்கூத்துக் கலை வாழும் என்பதை உறுதிப்படுத்தியது.