- முன்னுரை
- தமிழின் இலக்கிய வளம்
- கல்வி மொழி
- பிறமொழி இலக்கியங்கள்
- அறிவியல் கருத்துக்கள்
- தமிழுக்குச் செழுமை
- முடிவுரை
ஒரு மொழியின் படைப்புகள் எந்தளவுக்குப் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றனவோ, அந்தளவுக்கு அம்மொழி வளர்ச்சியடையும். உலகளவில் விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும்.
தமிழின் சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்வியல் சூழலையும் பண்பாட்டையும் விளக்குகின்றன.
தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் உலக இலக்கணங்களையே மிஞ்சி நிற்கின்றன.
"பரிதிமாற் கலைஞர்" கூற்றுப்படி, திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் ஆகும்.
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகவே கற்பிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம் மொழிபெயர்ப்பு மூலம் தமிழ் நூல்கள் அந்த நாட்டு மொழிகளிலும் மக்களிடமும் சென்றடைந்ததுதான்.
மொழிபெயர்ப்பு இல்லையென்றால் ஷேக்ஸ்பியர் போன்ற சிறந்த படைப்பாளிகளை நாம் அறிந்திருக்க முடியாது.
இரவீந்திரநாத் தாகூரின் 'கீதாஞ்சலி' நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னரே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
சங்க இலக்கியங்களில் விண்வெளியியல், மண்ணியல், மருத்துவவியல் போன்ற அறிவியல் சிந்தனைகள் புதைந்துள்ளன.
அணுக்கோட்பாடு, வானூர்தி செலுத்துதல் போன்ற கருத்துக்கள் தமிழிலேயே உள்ளன. இவற்றை உலகறியச் செய்ய மொழிபெயர்ப்பு அவசியம்.
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, உலக அறிவை தமிழுக்குக் கொண்டு வர வேண்டும்.
புதிய ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழ்ப்படுத்தி விளக்கப் படங்களுடன் நூல்களாக்க வேண்டும்.
காலத்தால் அழியாத செம்மொழியாக விளங்கும் தமிழுக்கு வளம் சேர்க்கும் முதன்மையான கருவி மொழிபெயர்ப்புக் கலை. இக்கலையை நாம் அனைவரும் போற்றி வளர்ப்பது இன்றைய அவசியமாகும்.
No comments:
Post a Comment