2. இப்பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பின் பெயர் யாது?
அ) மலரும் மாலையும்
ஆ) பாஞ்சாலி சபதம்
இ) கனிச்சாறு ✓ Correct
ஈ) கொடி முல்லை
3. 'தென்னன் மகள்' என்பதன் பொருள் யாது?
அ) சேரன் மகள்
ஆ) சோழன் மகள்
இ) பல்லவன் மகள்
ஈ) பாண்டியன் மகள் ✓ Correct
4. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை குறிப்பிடுக.
அ) தென்னன், இன்னறும் ✓ Correct
ஆ) மன்னுஞ், மணிமேகலை
இ) முன்னும், முடிதாழ
ஈ) தென்னன், திருக்குறளின்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்பதறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்!
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!
1. இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
அ) வாணிதாசன்
ஆ) கண்ணதாசன் ✓ Correct
இ) வண்ணதாசன்
ஈ) முடியரசன்
2. இப்பாடலின் தலைப்பு யாது?
அ) இயேசு காவியம்
ஆ) சேரமான் காதலி
இ) தைப்பாவை
ஈ) காலக்கணிதம் ✓ Correct
3. மானிடத்துவம் என்று எதனை ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
அ) வளர்ச்சி
ஆ) ஏற்றத்தாழ்வு
இ) புகழ்
ஈ) மாற்றம் ✓ Correct
4. பாடலில் அமைந்துள்ள அடி மோனைச் சொற்களை எழுதுக.
அ) மாற்றம், மாறும் ✓ Correct
ஆ) மானிடம், மகத்துவம்
இ) எவ்வெவை, ஏகுமென்
ஈ) மாறுவர், மாறும்
மேகங்கள் ரொம்ப அற்புதமானவை
தண்ணீரும் இல்லாமல்
தன்னுயிரும் போகாமல்
வான் வெளியில்
மிதந்து செல்லும் போது
மேகங்கள் மிகவும் மென்மையானவை.
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்ற கவிதைத் தலைப்பு
அ) சித்தாளு
ஆ) தேம்பாவணி
இ) அக்கறை
ஈ) மேகம் ✓ Correct
2. இப்பாடலின் ஆசிரியர் யார்?
அ) வீரமாமுனிவர்
ஆ) பாரதியார்
இ) நாகூர்ரூமி ✓ Correct
ஈ) கல்யாண்ஜி
3. இப்பாடலின் அடிமோனைச் சொற்கள்
அ) தண்ணீரும், தன்னுயிரும் ✓ Correct
ஆ) வான்வெளி, மிதந்து
இ) மேகங்கள், தண்ணீரும்
ஈ) மிதந்து, மேகங்கள்
4. தண்ணீரும் தன்னுயிரும் - இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) எண்ணும்மை ✓ Correct
இ) உவமைத்தொகை
ஈ) பண்புத்தொகை
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்.......
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) கலித்தொகை
ஆ) பெரியபுராணம்
இ) பரிபாடல் ✓ Correct
ஈ) முல்லைப்பாட்டு
2. 'செந்தீ' என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பண்புத் தொகை ✓ Correct
ஆ) உவமைத் தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) வேற்றுமைத் தொகை
3. 'தண்பெயல்' என்பதன் பொருள்
அ) இனிய ஓசை
ஆ) வறண்ட வயல்
இ) குளிர்ந்த மழை ✓ Correct
ஈ) தணிந்த குடை
4. இப்பாடலின் ஆசிரியர்
அ) ஓதலாந்தையார்
ஆ) அம்மூவனார்
இ) கபிலர்
ஈ) கீரந்தையார் ✓ Correct
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
1. 'ஊழ் ஊழ்' என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) இரட்டைக்கிளவி
ஆ) பண்புத்தொகை
இ) அடுக்குத்தொடர் ✓ Correct
ஈ) வினைத்தொகை
2. இப்பாடலின் ஆசிரியர்
அ) ஓதலாந்தையார்
ஆ) அம்மூவனார்
இ) கபிலர்
ஈ) கீரந்தையார் ✓ Correct
3. பாடலில் உணர்த்தப்படும் கருத்து
அ) தத்துவக்கருத்து
ஆ) அறிவியல் செய்தி ✓ Correct
இ) நிலையாமை
ஈ) அரசியல் அறம்
4. விசும்பு, இசை, ஊழி - பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் குதிரையில் சென்று வாணிகம் செய்து வந்தான். ஒருநாள் அன்றைய வேலையை முடித்துவிட்டுக் களைப்புடன் வந்த அவன், சற்றுநேரம் ஓய்வு எடுக்க நினைத்தான். தனது குதிரையை அங்கிருந்த மரத்தடியில் கட்டி வைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்
அச்சமயம் வீரன் ஒருவன், தனது குதிரையுடன் அதே மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தான். வணிகன் அந்த வீரனிடம், "உங்கள் குதிரையை சற்றுத் தள்ளி கட்டுங்கள். ஏனெனில், எனது குதிரை முரட்டுத்தனமானது" என்றான். அதற்கு வீரன், "முடியாது நான் இங்குத்தான் கட்டுவேன் என்று சொல்லிக் குதிரையைக் கட்டிவிட்டு உணவு உண்ணச் சென்றான்.
வணிகன் கண் அயர்ந்துவிட்டான். வீரன் உணவு உண்ணும் இடைவேளையில் வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டது. அதனால், வீரனுடைய குதிரையின் கால் உடைந்துவிட்டது. வீரன் உடனே வணிகனை எழுப்பினான். "என் குதிரையின் கால் உன் குதிரையினால் உடைந்துவிட்டதால், எனக்கு நஷ்டஈடு கொடு" என்று வணிகனிடம் கேட்டான் . அதனை வணிகன் ஏற்றுக் கொள்ளவில்லை. "நான் கட்டும்போதே என் குதிரையை முரட்டுக் குதிரை என்றேன். நீ தானே நான் சொன்னதை கேட்காமல் கட்டினாய்?" என்று வணிகன் மறுத்துவிட்டான்.
வணிகனே வா! நீதிபதியிடம் செல்லலாம்," என்றான் வீரன். இருவரும் நீதிபதியிடம் சென்றனர். வீரன் அவரிடம் நடந்ததைச் சொன்னான். நீதிபதி, வீரன் சொன்னதைக் கேட்டுவிட்டு, வணிகனிடம் "என்ன நடந்தது?" எனக் கேட்டார். வணிகனோ, பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். உடனே நீதிபதி, "வணிகன் ஊமை போலிருக்கிறதே, காதும் கேட்கவில்லையோ, பலமுறை கேட்டும் பதில் சொல்லாமல் இருக்கிறானே" என்றார்.
அதற்கு வீரன், "அவன் பேசுவான், ஐயா. அவன்தான் எனது குதிரை முரட்டுத்தனமானது உனது குதிரையை அருகில் கட்டாமல் தூரத்தில் கட்டு எனக் கூறினான். நான்தான், எனது குதிரை வீரக்குதிரை என்று சொல்லிக் கட்டி வைத்தேன்” எனக் கூறி முடித்தான்.
வீரன் கூறியதைக் கேட்ட நீதிபதி. "வீரனே!" வணிகன் எதுவும் கூறத் தேவையில்லை. நீயே உனது குற்றத்தை ஒப்புக் கொண்டாய். "வீம்புக் குணம் படைத்த உனக்கு, வணிகன் எந்த வகையிலும் நஷ்ட ஈடு தரத் தேவையில்லை" என்று தீர்ப்பு கூறினார்.
நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும், வீம்புக் குணம் படைத்த வீரன் முகத்தில் அசடு வழிந்தது. அதைக்கேட்ட வணிகன், "ஐயா நீதிபதி அவர்களே! நான் மௌனமாய் இருந்ததற்கு மன்னித்துவிடுங்கள்; உண்மையைப் புரிந்துகொண்டு நல்ல தீர்ப்பளித்தீர்கள்; மிகவும் நன்றி!" என்று கூறினான்.
நீதிக் கருத்து
வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.
இலக்கணம்: உயர்திணையும் அஃறிணையும்
எழிலி: "அப்பா, அப்பா, இங்கே வாங்க, இந்தப் பூனையைப் பாருங்க. காலெல்லாம் ஒரே சேறு. அந்தச் சேற்றுக் காலோட நம்ம வீட்டுக்குள்ளும் வந்திருக்கு".
அப்பா: போதும்....போதும். உனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கன்னு எனக்குத் தெரியும். உன்னைச் சுற்றி இருக்கிறவங்கன்னு நீ இப்ப சொன்னேல, இவங்க எல்லாருக்கும் உயிரிருக்கு. அதுமட்டுமா? நல்லது எது? தீயது எதுன்னு பகுத்துப் பார்க்கும் பண்பும் இருக்கு. இவங்க மட்டுமில்லாம நம்மைப்போலவே பண்புகள் இருக்கிற மக்கள், தேவர், நரகர் இவங்களையெல்லாம் உயர்திணைன்னுதான் சொல்றாங்க. அதுசரி, எழிலி. நீ இன்னும் வேறெ என்னல்லாம் உன்னைச் சுற்றி இருக்குன்னு சொல்லலியே?
எழிலி: வேறே என்னப்பா இருக்கு?
அப்பா: இதோ இந்த நாற்காலி, மேசை, குடம், மின்விசிறி, புத்தகம் இதுமட்டுமல்லாம பூனை, நாய், மாடு, ஆடு முதலான விலங்குகள், கோழி, காகம், குயில், மயில், கிளி முதலான பறவைகள் அப்படின்னு நிறைய பார்க்கிறாய் அல்லவா! இவற்றில் பறவை, விலங்குகளுக்கு எல்லாம் உயிர் இருக்கு. ஆனால் நாற்காலி, மின்விசிறி இவை போன்றவற்றிற்கு உயிரில்லை. அதனால, இந்த மாதிரி உயிருள்ள, உயிரற்ற பொருள்களெல்லாம் உயர்திணைல சேர்க்க முடியாது. இவையெல்லாம் உயர்திணை அல்லாத திணை. அதனாலதான் அஃறிணைன்னு சொல்றோம். நிலம், நீர், மலை, மரம், கடல் இவையெல்லாம்கூட அஃறிணைதான்.
எழிலி: ஆனா நான் பார்க்கிற பொருள்ல இதுதான் உயர்திணை, இதுதான் அஃறிணைன்னு எப்படிப்பா கண்டுபிடிக்கறது?
அப்பா: அடடே, நீ நல்லாவே யோசிக்கிற எழிலி. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பேரு இருக்குல்லே, அதை வைத்து நீ எளிதாக் கண்டுபிடிக்கலாம். அந்தப் பெயரை வைத்தே அதற்கு உயிரிருக்கா, நம்மைப்போல அது சிந்திக்குமா? வேலை செய்யுமான்னு கண்டுபிடிக்கலாம்ல. பெயரை வைத்தே என்ன திணை, பால், எண், இடம்னு எல்லாத்தையும் கண்டுபிடிக்கலாம். இதைப்பற்றி இன்னும் விரிவா நாளைக்குச் சொல்றேன். இதுவரைக்கும் சொன்னதில என்ன புரிஞ்சுக்கிட்டன்னு எனக்கும் தெரியணும்ல தென்னை மரம் உயர்திணையா, அஃறிணையா, எங்கே சொல்லு பார்க்கலாம்.
காட்டின் ராஜாவான சிங்கம் சில நாள்கள் வெளியூர் சென்றபோது புலிக்குத் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றது. புலியும் சில நாள்கள் ராஜாவாகப் பதவி ஏற்று கொண்டது. படைத்தளபதியாகச் சிங்கக் குட்டி பொறுப்பேற்றது.
சிங்கக் குட்டிதான் நமது படைத்தளபதி.
சிங்கக்குட்டியே..... பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி மன்னா ! உடனே பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆந்தையாரே நீங்கள் தாம் இரவுக்காவல் அமைச்சர்.
சரிங்க அரசே! நான் என் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.
கழுதையாரே ....... உமக்கு உரிய ...... பதவி
ராஜாவே..! ராஜாவே..! இந்தக் கழுதை ஒரு முட்டாள். கழுதையால் எந்த ஒரு பயனும் இல்லை.
அப்படியா....!
இதே போல் முயல், ஆமை இரண்டும் எதற்கும் பயன்படாது.
ஆமை ஒரு சோம்பேறி. அது எப்போதும் மிக மெதுவாகச் செல்லும். முயல் எதைப் பார்த்தாலும் மிரண்டு , மிரண்டு ஓடும்.
கரடியாரே, வாயை மூடும். ஆமை பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிக்கும். அதனால் சமையல் வேலை செய்யட்டும்.
முயல் அதிவேகமாக ஓடும் எனவே, தேவையான பொருள்களைச் சேகரித்து, விரைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையைச் செய்யட்டும்.
கழுதை, பகைவர்கள் வரும்போது தனது உரத்த குரலில் எச்சரிக்கும் பணியைக் கவனிக்கட்டும், என்று கூறினார், புலி ராஜா.
"யாரையும் குறைவாக எடைபோடக் கூடாது. அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணவேண்டும்".
நீங்க சொல்வது சரிதான் அரசே, இப்போது நான் தெரிந்து கொண்டேன்.
நீதிக் கருத்து:
ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. அதை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும்.
மொழியோடு விளையாடு
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவேண்டும் முதல் குழுவினருக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர் எழுதப்பட்ட அட்டையினை ஒவ்வொரு மாணவனுக்கும் ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். ஆசிரியர் ஒலிப்பான் மூலம் ஒலி எழுப்பியவுடன் முதல் குழுவில் இருந்து ஒரு மாணவன் தனது அட்டையில் எழுதப்பட்டு உள்ள விலங்கு (அ) பறவை போல நடித்து (அ) ஒலி எழுப்பிக் காட்ட வேண்டும். நடிக்கும் விதத்தை (அ) ஒலியைக் கேட்டு அது என்ன விலங்கு? (அ) பறவை? என்பதனை இரண்டாவது குழுவினர் கண்டறிந்து கூறவேண்டும். இவ்வாறே அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
எழுத்துகளின் வகைகள் அறிவோமா?
குழந்தைகளே! நமக்கெல்லாம் பெயர் இருக்கிறது அல்லவா... அதுபோல எழுத்துகளுக்கும் பெயர் வைக்கலாமா..
தமிழில் உள்ள உயிரெழுத்துகள் மொத்தம் - 12
குறில் / குற்றெழுத்துகள்
இந்த ஐந்து எழுத்துகளும் ஓசையில் குறுகி ஒலிக்கின்றன எனவே இவற்றிற்குக் குறில் அல்லது குற்றெழுத்துகள் என்று பெயரிடுவோம்.
நெடில் / நெட்டெழுத்துகள்
இந்த ஏழு எழுத்துகளும் ஓசையில் நீண்டு ஒலிக்கின்றன இவற்றிற்கு நெடில் அல்லது நெட்டெழுத்துகள் என்று பெயரிடுவோம்..
மெய்யெழுத்துகள்
இப்பொழுது மெய்யெழுத்துகளுக்குப் பெயரிடுவோமா... தமிழில் உள்ள மெய்யெழுத்துகள் மொத்தம் - 18.
இவை ஒலிக்கும் தன்மையை வைத்து மூன்று வகைகளாகப் பிரித்துப் பெயரிடுவோம்.
வல்லினம்
யானைகள் எப்படி வலிமையாக இருக்கின்றனவோ அப்படியே க், ச், ட், த், ப், ற் - என்ற எழுத்துகளும் வலிய ஓசை உடையவை, எனவே இவற்றுக்கு வல்லினம் என்று பெயரிடுவோம்.
மெல்லினம்
முயல்கள் எப்படி மென்மையாக இருக்கின்றனவோ அப்படியே ங், ஞ், ண், ந், ம், ன் - என்ற எழுத்துகளும் மெல்லிய ஓசை உடையவை. எனவே இவற்றுக்கு மெல்லினம் என்று பெயரிடுவோம்.
இடையினம்
மான்கள் யானையைப் போன்று வலிமையாகவும் இல்லை, முயலைப் போன்று மென்மையாகவும் இல்லை, இடைப்பட்ட நிலையில் இருக்கின்றன.
அது போல ய், ர், ல், வ், ழ், ள் - என்ற எழுத்துகளும், வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஓசை உடையதால் இவற்றுக்கு இடையினம் என்று பெயரிடுவோம்.
ஆய்த எழுத்து
ஃ என்பது ஆய்த எழுத்து அல்லது தனிநிலை எனப்படும். எழுத்துகளின் பெயர்கள் இனிமையாக இருக்கின்றன அப்படித்தானே.
பயிற்சி
உங்கள் பெயரிலும் உங்கள் நண்பர்களின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள மெய்யெழுத்துக்களை வட்டமிட்டுக் காட்டுக
கனவு மெய்ப்பட வேண்டும்
கல்வி வசப்பட வேண்டும்
கற்க நினைப்பதெல்லாம் -நாம்
கற்று நிறைவுற வேண்டும்
அறிவிற்கு வெளிச்சம் வசிக்கும் நூலே!
அறிவாகிய பூட்டைத் திறக்க
நல்ல புத்தகம் என்னும் சாவி தேவை
பூட்டிய அறிவின் திறவுகோல் கல்வியே!
படி; படி படிப்படியாய்ப் படி
எழுது; எழுது எண்ணி எண்ணி எழுது
காலத்தை வெல்லலாம் -கல்வி பயிலு
உலகத்தை வெல்லலாம் -கல்வி பயிலு
அறிவை பூட்டி வைக்காதே
அறியாமை இருளில் தலைகுணியாதே...!
சலைக்காமல் நூல் படித்தால்
மூளைக்கும் சிறகு முளைக்கும்
மூவுலகும் இட்டுச் செல்லும்.......
OMTEX CLASSES| பக்கம்-1
இயல்-2
உயிரின் ஓசை (காற்றே வா)
அடிமை நீங்க
அகிம்சை
அறியாமை அகல
புத்தகப்பை
சுமப்போம்-இன்று
நோய் நீங்கிட
இயற்கை காற்றைச் சுமப்போம்-நாளை
மானிடா.
OMTEX CLASSES | பக்கம்-2
இயல்-3
பண்பாட்டின் விருந்தோம்பல்
வறுமையில் வாடிய எனக்கு
ஒரு நாள் கிடைத்தது நல்லுணவு....
உண்ணும் வேளையில் நீ! வந்தாய்
பசியால் இணைந்தோம்
பகிர்ந்து உண்ணலாம்
கனிவான பார்வை
கை நிறைய சோறு
சரியான நோக்கம்
தெளிவான முடிவு
நெறியான வாழ்க்கை
அழியாத மகிழ்ச்சி
அதுவே நல்வாழ்க்கை!
வெட்டிய மரத்தின் மீதமர்ந்து
மரம் வளர்க்கும் கல்வி
இருக்கும்போது அறியாமையில் இருந்தோர்
இனிமேல் கிடைக்க வரம் கேட்கிறார்கள்
கண்கெட்ட பிறகு
சூரிய வணக்கம் இதுதான்
நடு மரம் நடு
மண்ணுக்கும் மனிதனுக்கும்
வான்புனலையும் தென்றல் காற்றையும் தரும்
மரம்-இல்லையேல்
மனிதனுமில்லை
நிலைப்பெற்ற எவ்வுயிருமில்லை
உலகமே இங்கு சுடுகாடாச்சு
வெட்ட வெளியில் அமர்ந்து படிக்கும்
அவல நிலைக்கும் காரணமா போச்சு
நடு மரம் நடு...
OMTEX CLASSES| பக்கம்-5
இயல்-6
ஒயிலாட்டம்
ஒய்யாரமாய் ஆடும் கலை
ஒயிலாட்டம் ஆன கலை
சீருடைப்போல் போடும் உடை
வீரமாக ஆடும் கலை
தமிழர்களால் போற்றும் கலை
மாறுமோ எங்கள் நிலை
அழகாய் ஆடுவோம்;
அன்பாய் பாடுவோம்;
ஒயிலாட்டம் என்று கூறுவோம்;
ஒற்றுமையாய் ஆடுவோம்;
துன்பம் தீர்க்கும் கலை
துள்ளித் துள்ளி ஆடும் கலை
ஆண்கள் ஆடும் கலை
அழகாய் ஆடும் கலை. (ஒயிலாட்டம்)
OMTEX CLASSES| பக்கம்-6
இயல்-7
விவசாய நாடு
விண்ணையும் மண்ணையும்
நன்கு உணர்ந்த
காலத்தையும் நேரத்தையும்
கண்டுபிடித்த
மானுடப் பிறப்பின் முதல் விஞ்ஞானி
நீரின் மேன்மையை அறிந்தவன்
நிலத்தின் வளம் அறிந்தவன்
மண்ணின் மகிமை அறிந்தவன்
விதையின் விதையைக் கண்டறிந்தவன்
காடுமேடுகளையும் கழனியாக்கி
இயற்கையோடு பின்னிப்பிணைந்து
தன்னிலை மாறாத தங்கமகன்
மண்ணை வைரமாகவும் விதையை வீரியமாகவும்
உழவை உயிராக கருதி
கதிர்களை கடவுளாக போற்றுபவன் (விவசாயி)
OMTEX CLASSES | பக்கம்-7
இயல்-8
அறம் செய விரும்பு
மனிதா ! உன் உழைப்பை நீ நம்பு
யார்? கொடுப்பார்கள் என்று
ஏங்கி தவிக்ககாதே
அவர், இவர், கடவுள் கொடுப்பார் என்று
ஏங்கி தவிக்காதே
உன்னையே! நீ நம்பு
உடலையும் மனதையும் வலிமையாக்கு
பிறர் மனம் புண்பட்டால்
நம் மனம் தளராமல்
வாழும் வாழ்வே !
உழைப்பால் உயர்ந்திடு
உழைத்திடு
அறம் செய விரும்பு அறம் செய விரும்பு.....
சுசீலா, அவளுடைய தோழி கமீலாவின் வீட்டுக்குப் போனாள். கமீலாவும் சுல்தானும் தொலைக்காட்சி பச் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுல்தானைவிடக் கமீலா இரண்டு ஆண்டுகள் பெரியவள். ஆனால் உருவத்தில் சுல்தான்தான் அண்ணனைப் போல இருப்பான். சுசீலாவைக் கண்டவுடன் கமீலா மகிழ்ச்சியடைந்தாள்.
மேற்கண்ட பகுதியில் இடைச் சொற்களை இனம் காண முடிகிறதா?
இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள்.
பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் ஆகியவற்றைப்போல இடைச்சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை. ஆயினும், இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.
இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.
இடைச்சொல் பலவகையாக அமையும்.
இடைச்சொற்களின் வகைகள்
வேற்றுமை உருபுகள் - ஐ, ஆல், கு, இன், அது, கண்
பன்மை விகுதிகள் - கள், மார்
திணை, பால் விகுதிகள் - ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், து, அ
கால இடைநிலைகள் - கிறு, கின்று,...
பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் - அ, உ, இ, மல்,...
எதிர்மறை இடைநிலைகள் - ஆ, அல், இல்
தொழிற்பெயர் விகுதிகள் - தல், அம், மை
வியங்கோள் விகுதிகள் - க, இய
சாரியைகள் - அத்து, அற்று, அம்,...
உவம உருபுகள் - போல, மாதிரி
இணைப்பிடைச் சொற்கள் - உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,...
தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் - உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்
சொல்லுருபுகள் - மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை
வினா உருபுகள் – ஆ, ஓ
இவற்றுள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச்சொற்கள் தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உம்
'உம்' என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.
மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை. (எதிர்மறை உம்மை )
பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)
ஓ
ஓகார இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது.
தற்காலத்தில் ஓகார இடைச்சொல் பிரிநிலைப் பொருளில் அதிகமாக வருகின்றது. அதைத் தவிர ஐயம், உறுதியாகக் கூறமுடியாமை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை - அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன.
● இன்றைக்கு மழை பெய்யுமோ? (ஐயம்)
● பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது)
● பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள். (இதுவும் இல்லை - அதுவும் இல்லை )
ஏ
ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.
தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் அழுத்தம்) மட்டுமே வருகிறது.
அண்ணல் காந்தி அன்றே சொன்னார்.
நடந்தே வந்தான்.
தான்
'தான்' என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில்தான் வருகின்றது. சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது. ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வருகிறது.
● அவனுக்கு வரையக்கூடத் தெரியும். (எச்சம் தழுவிய கூற்று)
ஆ
வினாப் பொருளில் வரும் இடைச் சொல்லாகும்.
ஆ என்னும் இடைச் சொல், சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ, அச்சொல் வினாவாகிறது.
புகழேந்தி நேற்று உன்னுடன் பேசினானா?
புகழேந்தி நேற்று உன்னுடனா பேசினான்?
ஆம்
சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கும் பயன்படுகிறது.
உள்ளே வரலாம். (இசைவு)
இனியன் தலைநகர் போகிறானாம். (தகவல்)/செய்தி
பறக்கும் தட்டு நேற்றுப் பறந்ததாம். (வதந்தி)/பொய்மொழி
தெரிந்து தெளிவோம்
அன்று என்பது ஒருமைக்கும்
அல்ல என்பது பன்மைக்கும் உரியன.
(எ.கா.) இது பழம் அன்று . இவை பழங்கள் அல்ல.
எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்
எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்
(எ.கா.) எத்தனை நூல்கள் வேண்டும்? எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழைமையானது.
உரிச்சொற்கள்
உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன. உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும். உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை. ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை. உரிச் சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.
கடி மலர் - மணம் மிக்க மலர்
கடி நகர் - காவல் மிக்க நகர்
கடி விடுதும் - விரைவாக விடுவோம்
கடி நுனி - கூர்மையான நுனி
- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வருகின்றன.
உறு பசி; தவச் சிறிது; நனி நன்று - பல சொல் ஒரு பொருள்
உரிச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து பொருள் உணர்த்துகின்றன. மேலும் அவை
1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும் உண்டு
2) பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு
மழ, குழ என்பவற்றிலிருந்து உருவானவை மழலை, குழந்தை போன்ற சொற்கள். உவப்பு (உவகை), பசப்பு (நிறம் மங்குதல்), பயப்பு (பயன்) போன்றவை அப்படியே பயன்படுகின்றன. செழுமை என்பது செழிப்பு, செழித்த, செழிக்கும் எனப் பெயராகவும், வினையாகவும் பயன்படுகிறது. விழுமம் என்பது விழுப்பம், விழுமுதல், விழுமிய எனப் பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது. பிற உரிச் சொற்களும் அவ்வாறே தற்காலத்தில் பயன்படுகின்றன.