3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்
சமக் குழுவாக்கம்
அறிமுகம்: சமக் குழுவாக்கம்
சமக் குழுவாக்கம் வழியாகவும் வகுத்தலைச் செய்யலாம்.
இது இரங்கம்மாவின் கடை.
அவள் காய்கறிகளை விற்பனை செய்வதற்குக் 'கூறு' எனப்படும் சமக் குழுக்களாகப் பிரித்து அடுக்கினார்.
பயிற்சி 1
1. இரங்கம்மா 40 எலுமிச்சைகளை வைத்திருந்தார். ஒரு கூறில் 5 எலுமிச்சைகள் வீதம் என அடுக்கி வைத்தார். எலுமிச்சைகளைக் குழுக்களாக அடுக்கிக் குழுக்களின் எண்ணிக்கையைக் காண்போம்.
கொடுக்கப்பட்டுள்ள எண்கோட்டில் இதனைக் குறிப்போம்.
எண் கூற்று முறையில் இதனை 40 ÷ 5 = 8 என எழுதலாம்.
பயிற்சி 2
2. இரங்கம்மாவிடம் 36 தேங்காய்கள் இருந்தன. அவற்றை ஒரு கூறில் 4 தேங்காய்கள் என இருக்குமாறு அடுக்கினார் எனில் அவர் எத்தனை கூறுகள் அடுக்கியிருப்பார்?
எண்கோட்டை வரைக.
எண் கூற்று முறையில் இதனை 36 ÷ 4 = 9 என எழுதலாம்.
பயிற்சி 3
3. இரங்கம்மாவிடம் 48 நெல்லிகனிகள் இருந்தன. அதனை ஒரு கூறில் 6 கனிகள் என இருக்குமாறு அடுக்கினார். எனில் கூறுகளின் எண்ணிக்கையைக் காண்க.
எண்கோட்டை வரைக
எண் கூற்று முறையில் இதனை 48 ÷ 6 = 8 என எழுதலாம்.
பயிற்சி 4
4. இரங்கம்மா அந்த 48 நெல்லிக்கனிகளைக் கூறுகளாக அடுக்கக்கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அதன் எண் கூற்றுகளை எழுதுக.
(i) 48 ÷ 1 = 48
(ii) 48 ÷ 2 = 24
(iii) 48 ÷ 3 = 16
(iv) 48 ÷ 4 = 12
(v) 48 ÷ 6 = 8
(vi) 48 ÷ 8 = 6
(vii) 48 ÷ 12 = 4
(viii) 48 ÷ 16 = 3
(ix) 48 ÷ 24 = 2
(x) 48 ÷ 48 = 1