Class 10 Tamil One Mark Questions and Answers | Ilakkanam & Literature

பத்தாம் வகுப்பு தமிழ் - ஒரு மதிப்பெண் வினா விடை

பத்தாம் வகுப்பு தமிழ்

ஒரு மதிப்பெண் வினா விடை

  1. 1) வித்துவக்கோடு எங்கு உள்ளது? கேரள மாநிலம் பாலக்காடு
  2. 2) வித்துவக்கோட்டில் உள்ள இறைவன் யார்? உய்யவந்த பெருமாள்
  3. 3) பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்? குலசேகர ஆழ்வார்
  4. 4) பெருமாள் திருமொழி, நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் எத்தனையாவது திருமொழியாக உள்ளது? ஐந்தாம் திருமொழி
  5. 5) பெருமாள் திருமொழியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை? 105
  6. 6) குலசேகர ஆழ்வாரின் காலம் என்ன? எட்டாம் நூற்றாண்டு
  7. 7) ஆறறிவுடைய மக்களை எவ்வாறு அழைப்பர்? உயர்திணை
  8. 8) மக்கள் தவிர மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் எவ்வாறு அழைப்பர்? அஃறிணை
  9. 9) திணையின் உட்பிரிவு யாது? பால்
  10. 10) உயர்திணை எத்தனை பால் பிரிவுகளை உடையது? 3
  11. 11) அஃறிணை எத்தனை பால் பிரிவுகளை உடையது? 2
  12. 12) இடம் எத்தனை வகைப்படும்? 3
  13. 13) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவதும் பேசுவதும் வழாநிலை எனப்படும்
  14. 14) இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
  15. 15) இலக்கணப் பிழைகள் இல்லாது இருப்பின் அவை______ எனப்படும்(வழாநிலை)
  16. 16) கண்ணகி உண்டான் என்பது______வழு(பால்வழு)
  17. 17) செழியன் வந்தது என்பது______வழு(திணை வழு)
  18. 18) நீ வந்தேன் என்பது_____வழு(இட வழு)
  19. 19) நேற்று வருவான் என்பது________வழு(கால வழு)
  20. 20) ஒரு விரலைக் காட்டி ‘சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்பது_______வழு(வினா வழு)
  21. 21) “ எங்கே இருக்கிறார்?” என்ற வினாவிற்குக் “கண்ணாடி பைக்குள் இருக்கிறது” என்று விடை அளித்தல்________வழு(விடை வழு)
  22. 22) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்_______(மரபு வழு)
  23. 23) இலக்கண முறைப்படி பிழை உடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது_________(வழுவமைதி)
  24. 24) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது_________வழுவமைதி(திணை வழுவமைதி)
  25. 25) “வாடா ராஜா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது______வழுவமைதி(பால் வழுவமைதி)
  26. 26) மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது_______வழுவமைதி(இட)
  27. 27) ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' என்பது____வழுவமைதி(கால)
  28. 28) “கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும்” என்று பாரதியார் பாடுவது________வழுவமைதி(மரபு)
  29. 29) ‘அமைச்சர் நாளை விழாவிற்கு வரு கிறார்' என்பது_____வழுவமைதி(கால)
  30. 30) ‘அவனும் நீயும் அலுவலரை பார்க்க ஆயத்தமாகுங்கள்' என்பது________வழுவமைதி(இட)
  31. 31) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்-என்பது_________வழுவமைதி(இட)
  32. 32) “செல்வன் இளவேலன் இந்தச் சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்” என்பது _______வழுவமைதி(இட)
  33. 33) “சிறுவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்” என்பது_______வழுவமைதி(கால)
  34. 34) “அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது” என்பது_____வழு(திணை)
  35. 35) “அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை' என்பது_____வழுவமைதி(இட)
  36. 36) “குழந்தை அழுகிறான், பார்” என்பது_______வழு(திணை)
  37. 37) ‘உனதருளே பார்ப்பன் அடியேனே' யார் யாரிடம் கூறியது_______,_______(குலசேகர ஆழ்வார், இறைவனிடம்)
  38. 38) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.இது _______வழுவமைதி(பால்)
  39. 39) பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். இது___________வழுவமைதி(திணை)
  40. 40) வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.இது____________வழுவமைதி(கால)
  41. 41) “சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்பான்” என்று இறமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயை பற்றிக் கூறினார்.இது_________வழு(திணை)
  42. 42) ‘பெய்த மழை' என்பதன் வினைத்தொகை_______(பெய்மழை)
  43. 43) மீளாத்துயர் என்பதன் எதிர்மறை________(மீண்ட துயர்)
  44. 44) அவிர்தல் பொருள் தருக(ஒளிர்தல்)
  45. 45) அழல் பொருள் தருக(நெருப்பு)
  46. 46) உவா பொருள் தருக(முழு நிலவு)
  47. 47) கங்குல் பொருள் தருக(இரவு)
  48. 48) கனலி பொருள் தருக(சூரியன்)
  49. 49) புயலுக்குப் பின்- எதிர்மறையாக எழுதுக(புயலுக்கு முன்)
  50. 50) பெரியவரின் அமைதி-எதிர்மறையாக எழுதுக(சிறுவனின் அமைதி)
  51. 51) அருகில் அமர்க- எதிர்மறையாக எழுதுக(தொலைவில் அமர்க)
  52. 52) மறைத்து காட்டு- எதிர்மறையாக எழுதுக(வெளிப்படையாகக் காட்டு)
  53. 53) கொடுத்துச் சிவந்த- எதிர்மறையாக எழுதுக(கொடுக்காமல் சிவந்த)
  54. 54) Nanotechnology-கலைச்சொல் தருக(மீநுண் தொழில்நுட்பம்)
  55. 55) Biotechnology-கலைச்சொல் தருக(உயிரித் தொழில்நுட்பம்)
  56. 56) Ultraviolet rays-கலைச்சொல் தருக(புற ஊதாக் கதிர்கள்)
  57. 57) Space technology-கலைச்சொல் தருக(விண்வெளி தொழில்நுட்பம்)
  58. 58) Cosmic rays-கலைச்சொல் தருக(விண்வெளிக் கதிர்கள்)
  59. 59) Infrared red-கலைச்சொல் தருக(அகச்சிவப்பு கதிர்)
  60. 60) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்_________(செய்குத்தம்பி பாவலர்)
  61. 61) செய்குத்தம்பி பாவலரின் ஊர்________(கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி)
  62. 62) செய்குத்தம்பிப் பாவலர் _____ வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றார்(15)
  63. 63) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்________(செய்குத்தம்பி பாவலர்)
  64. 64) _____________அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்துகாட்டி சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர்.(சென்னை விக்டோரியா)
  65. 65) _______நாளில் செய்குத்தம்பிப் பாவலர் சதாவதானி பட்டம் பெற்றார்(1907 மார்ச் 10)
  66. 66) செய்குத்தம்பி பாவலர் மணிமண்டபம் ________ல் உள்ளது(இடலாக்குடி)
  67. 67) சதம் என்றால் ______ என்பது பொருள்(நூறு)
  68. 68) கற்றவர் வழி அரசு செல்லும் என்று கூறும் இலக்கியம்______(சங்க இலக்கியம்)
  69. 69) தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறும் நூல் ________(திருக்குறள்)
  70. 70) கல்வியைப் போற்றுவதை _________ காலத்திலிருந்து தமிழர் தொடர்கின்றனர்(சங்க)
  71. 71) உயிருக்கு அரிய துணையாய் இருப்பது_______(கல்வி)
  72. 72) மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தருவது_______(கல்வி)
  73. 73) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்துவது_______(கல்வி)
  74. 74) வினா _____ வகைப்படும்(6)
  75. 75) தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது_______வினா(அறி)
  76. 76) தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது________வினா(அறியா)
  77. 77) ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது______வினா(ஐய)
  78. 78) தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது_______வினா(கொளல்)
  79. 79) பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது________வினா(கொடை)
  80. 80) ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுவது________வினா(ஏவல்)
  81. 81) “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் செல்லுதல்_________வினா(ஏவல்)
  82. 82) “என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்_________வினா(கொடை)
  83. 83) “ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்________வினா(கொளல்)
  84. 84) “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல்______வினா(ஐய)
  85. 85) ஆசிரியரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்______வினா(அறியா)
  86. 86) மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்______வினா(அறி)
  87. 87) விடை_____வகைப்படும்(8)
  88. 88) “கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு, “வலப்பக்கத்தில் உள்ளது” எனக் கூறல்______விடை(சுட்டு)
  89. 89) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போக மாட்டேன்” என மறுத்துக் கூறல்_____விடை(மறை)
  90. 90) “கடைக்குப் போவாயா?” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்_______விடை(நேர்)
  91. 91) “இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது_______விடை(ஏவல்)
  92. 92) “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு “வராமல் இருப்பேனா?” என்று கூறுவது_______விடை(வினா எதிர் வினாதல்)
  93. 93) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கிறது” என்று உற்றதை உரைப்பது______விடை(உற்றது உரைத்தல்)
  94. 94) “நீ விளையாட வில்லையா?” என்ற வினாவிற்கு, “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது_______விடை(உறுவது கூறல்)
  95. 95) “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது________விடை(இன மொழி)
  96. 96) பொருள்கோள்_____வகைப்படும்(8)
  97. 97) செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் __________ என்று பெயர்.(பொருள்கோள்)
  98. 98) ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால், அது __________ பொருள்கோள் ஆகும்.(ஆற்று நீர்)
  99. 99) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக அமைந்து வருவது _______ பொருள்கோள் ஆகும்.(நிரல் நிறை)
  100. 100) நிரல்நிறைப் பொருள்கோள் _____ வகைப்படும்(2)
  101. 101) செய்யுளில் எழுவாய்களை வரிசைபடுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை நிரல்நிறையாகக் கொண்டு பொருள் கொள்ளுதல் _______________(முறை நிரல் நிறை) பொருள்கோள் ஆகும்.
  102. 102) செய்யுளில் ஏழுவாய்களை வரிசைப் படுத்தி அதை ஏற்கும் பயனிலைகளைக் கொண்டு பொருள்கொள்ளுதல் _______நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்(எதிர் நிரல் நிறை)
  103. 103) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் ________________(எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்)
  104. 104) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது- இதில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்__________(முறை நிரல்நிறைப் பொருள்கோள்)
  105. 105) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு –இப்பாடலில் இடம்பெற்றுள்ள பொருள்கோள்________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
  106. 106) ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடு ஒன்று கூட்டிப் பொருள் கொள்வது____________(கொண்டுகூட்டுப் பொருள்கோள்)
  107. 107) “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”-இது எவ்வகை வினா?(அறியா வினா)
  108. 108) “இந்த வழியாகச் செல்லுங்கள்”-இது எவ்வகை விடை?(சுட்டு விடை)
  109. 109) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(வினா எதிர் வினாதல் விடை)
  110. 110) “ஆதிரை, ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?”-எவ்வகை வினா?(அறியா வினா)
  111. 111) “கவி அரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்”-எவ்வகை விடை?(நேர் விடை)
  112. 112) “நீங்கள் கவி அரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?”- எவ்வகை வினா?(ஐய வினா)
  113. 113) “இங்கு நகரப் பேருந்துகள் நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது எவ்வகை வினா?(அறியா வினா)
  114. 114) “அதோ, அங்கே பேருந்து நிற்கும்” என்று விடை அளிப்பது எவ்வகை விடை?(சுட்டு விடை)
  115. 115) ‘அருந்துணை’ என்பதைப் பிரித்து எழுதுக(அருமை+ துணை)
  116. 116) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”-என்ற பாடல் வரியில் குறிப்பிடப்படுவது எது?(கல்வி)
  117. 117) “மின்விளக்கின் சொடுக்கு எந்தப் பக்கம் இருக்கிறது?”-எவ்வகை வினா?(அறியா வினா)
  118. 118) “சொடுக்கிய போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?”-எவ்வகை வினா?(ஐய வினா)
  119. 119) முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்-இதில் அமைந்துள்ள பொருள்கோள்________(ஆற்றுநீர்ப் பொருள்கோள்)
  120. 120) Lute music-கலைச்சொல் தருக(யாழிசை)
  121. 121) Chamber-கலைச்சொல் தருக(அறை)
  122. 122) To look up-கலைச்சொல் தருக(எட்டிப் பார்)
  123. 123) Grand-daughter-கலைச்சொல் தருக(பேத்தி)
  124. 124) Rote-கலைச்சொல் தருக(நெட்டுரு)
  125. 125) Didactic compilation-கலைச்சொல் தருக(நீதி நூல் திரட்டு)
  126. 126) “அருணா பாடினாள்” என்பதைப் பெயரெச்சத்தொடராக்கு(பாடிய அருணா)
  127. 127) ‘ஓடிய அருணா' என்பதை வினையெச்சத் தொடராக்கு.(ஓடி வந்தாள்)
  128. 128) ‘ஓடிய அருணா' என்பதை விளித்தொடராக்கு(அருணா, ஓடு)
  129. 129) “அம்மா சொன்னார்” என்பதை பெயரெச்சத் தொடராக்கு(சொன்ன அம்மா)
  130. 130) “அம்மா சொன்னார்” என்பதை விளித்தொடராக்கு(அம்மா, சொல்)
  131. 131) ‘தா' என்னும் வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி எழுவாய்த் தொடர் அமைக்க.(முருகன் தந்தான்)
  132. 132) “துளிர் பார்த்தாள்” என்பதைப் பெயரெச்சத் தொடராக்கு
  133. 133) “குழந்தை வந்தது” என்பதை வினையெச்சத் தொடராக்கு.
  134. 134) “மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்”- இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமைமை செய்க.
  135. 135) “கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
  136. 136) “வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களை கற்றுத் தருகிறது”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
  137. 137) “ மாணவர்கள் அனைவரும் தனித்தனியே எழுதித் தரவேண்டும்”-இத்தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க
  138. 138) “தார் போன்ற நிறமுண்டு. கரியுமில்லை. பார்முழுதும் பரந்து திரிவேன் மேகமும் இல்லை” -நான் யார்?(காகம்)
  139. 139) மன்றல்-பொருள் தருக(திருமணம்)
  140. 140) அடிச்சுவடு-பொருள் தருக(நடந்து வந்த காலடித்தடம்)
  141. 141) அகராதி-பொருள் தருக(அகரமுதலி)
  142. 142) தூவல்-பொருள் தருக(பேனா)
  143. 143) மருள்-பொருள் தருக(மயக்கம்)
  144. 144) Emblem-கலைச்சொல் தருக(சின்னம்)
  145. 145) Thesis-கலைச்சொல் தருக(ஆய்வேடு)
  146. 146) Intellectual-கலைச்சொல் தருக(அறிவாளர்)
  147. 147) Symbolism-கலைச்சொல் தருக(குறியீட்டியல்)
  148. 148) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது______(கவிதை)
  149. 149) “கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்” என்று பெருமைப்படுபவர்________(பாரதியார்)
  150. 150) ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பல இடங்களில் பாயும் ஆறு _______(சரயு ஆறு)
  151. 151) கொடை இல்லாத நாடு எது?(கோசலை)
  152. 152) “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா” என்று பாடியவர்__________(பாரதியார்)
  153. 153) ஏழைமை வேடன் யார்?(குகன்)
  154. 154) வேழ நெடும்படை கொண்டவர் யார்?(பரதன்)
  155. 155) தோழமை என்று சொன்னவர் யார்?(இராமன்)
  156. 156) கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி________ எனப் பெயரிட்டார்(இராமாவதாரம்)
  157. 157) இராமாயணம் ____ காண்டங்களை உடையது(6)
  158. 158) இராமாயணப் பாடல்கள் _____ நயம் மிக்கவை.(சந்த)
  159. 159) கம்பரின் ஊர்________(திருவழுந்தூர்)
  160. 160) கம்பரை ஆதரித்த வள்ளல்___________(சடையப்ப வள்ளல்)
  161. 161) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தும்________ஐந்திணை(அன்பின்)
  162. 162) அகத் திணை எத்தனை வகைப்படும்?(7)
  163. 163) முதற்பொருள் என்பது_______,_________(நிலமும் பொழுதும்)
  164. 164) பொழுது எத்தனை வகைப்படும்?(2)
  165. 165) சிறுபொழுது எத்தனை வகைப்படும்?(6)
  166. 166) பெரும்பொழுது எத்தனை வகைப்படும்?(6)
  167. 167) கார் காலம் என்பது_______,______மாதங்கள்(ஆவணி புரட்டாசி)
  168. 168) குளிர்காலம் என்பது______&_________(ஐப்பசி கார்த்திகை)
  169. 169) முன்பனிக்காலம் என்பது________&________( மார்கழி தை)
  170. 170) பின்பனிக் காலம் என்பது______&______(மாசி பங்குனி)
  171. 171) இளவேனில் காலம் என்பது________&_______(சித்திரை வைகாசி)
  172. 172) முதுவேனில் காலம் என்பது______&_______(ஆனி ஆடி)
  173. 173) காலை என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 6 மணி முதல் 10 மணி வரை)
  174. 174) நண்பகல் என்பது_____மணி முதல்____மணி வரை(காலை 10 மணி முதல் 2 மணி வரை)
  175. 175) எற்பாடு என்பது_____மணி முதல்____மணி வரை(பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை)
  176. 176) மாலை என்பது_____மணி முதல்____மணி வரை(மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை)
  177. 177) யாமம் என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை)
  178. 178) வைகறை என்பது_____மணி முதல்____மணி வரை(இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை)
  179. 179) குறிஞ்சித் திணைக்கு உரிய சிறுபொழுது______(யாமம்)
  180. 180) முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது ___________(மாலை)
  181. 181) மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது__________(வைகறை)
  182. 182) நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது ____________(எற்பாடு)
  183. 183) பாலைத் திணைக்குரிய சிறுபொழுது_________(நண்பகல்)
  184. 184) ஆறு பெரும் பொழுதுகளும் வரக்கூடிய திணை______,_________(மருதம் நெய்தல்)
  185. 185) குறிஞ்சித் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________,_________(குளிர்காலம் முன்பனிக்காலம்)
  186. 186) பாலைத் திணைக்குரிய பெரும் பொழுதுகள்________&_______(இளவேனில் முதுவேனில் பின்பனி)
  187. 187) முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது___________ (கார்காலம்)
  188. 188) ஒரு நிலத்தின் தெய்வம் மக்கள் தொழில் விலங்கு இவையெல்லாம்____________(கருப்பொருள்கள்)
  189. 189) குறிஞ்சித் திணைக்குரிய தெய்வம்_____(முருகன்)
  190. 190) முல்லைத் திணைக்குரிய தெய்வம்________(திருமால்)
  191. 191) மருதத் திணைக்குரிய தெய்வம்_________(இந்திரன்)
  192. 192) நெய்தல் திணைக்குரிய தெய்வம்________(வருணன்)
  193. 193) பாலைத் திணைக்குரிய தெய்வம் _________(கொற்றவை)
  194. 194) குறிஞ்சித் திணைக்குரிய பறை_______(தொண்டகப் பறை)
  195. 195) முல்லைத் திணைக்குரிய பறை________(ஏறுகோட்பறை)
  196. 196) மருதத் திணைக்குரிய பறை______&_______(மணமுழா, நெல்லரிகிணை)
  197. 197) பாலைத் திணைக்குரிய பறை_______(துடி)
  198. 198) நெய்தல் திணைக்குரிய பறை_________(மீன்கோட்பறை)
  199. 199) நெய்தல் திணைக்குரிய பண்_________(செவ்வழிப்பண்)
  200. 200) பாலைத் திணைக்குரிய பண்________(பஞ்சுரப்பண்)
  201. 201) குறிஞ்சித் திணைக்குரிய தொழில்கள்________&________(தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல்)
  202. 202) முல்லைத் திணைக்குரிய தொழில்கள்________&________(ஏறுதழுவுதல் நிரை மேய்த்தல்)
  203. 203) மருதத் திணைக்கு உரிய தொழில்கள்________&________(நெல்லரிதல் களை பறித்தல்)
  204. 204) நெய்தல் திணைக்குரிய தொழில்கள்________&_______(மீன்பிடித்தல் உப்பு விளைத்தல்)
  205. 205) பாலைத் திணைக்கு உரிய தொழில்கள்________&_______(வழிப்பறி, நிரை கவர்தல்)
  206. 206) குறிஞ்சித் திணைக்குரிய மக்கள்_______&________&_______(வெற்பன் குறவர் குறத்தி)
  207. 207) முல்லைத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(தோன்றல் ஆயர் ஆய்ச்சியர்)
  208. 208) மருதத் திணைக்குரிய மக்கள்______&_____&_____(ஊரன் உழவர் உழத்தியர்)
  209. 209) நெய்தல் திணைக்குரிய மக்கள்______&_____&______(சேர்ப்பன் பரதர் பரத்தியர்)
  210. 210) பாலைத் திணைக்குரிய மக்கள்______&______(எயினர் எயிற்றியர்)
  211. 211) குறிஞ்சித் திணைக்குரிய உணவு______&_____(மலைநெல், தினை)
  212. 212) முல்லைத் திணைக்குரிய உணவு_____&______(வரகு, சாமை)
  213. 213) மருதத் திணைக்குரிய உணவு______&_____(செந்நெல், வெண்ணெல்)
  214. 214) நெய்தல் திணைக்கு உரிய உணவு_____&_______(மீன் உப்புக்குப் பெற்ற பொருள்)
  215. 215) பாலைத் திணைக்குரிய உணவு____________(சூறையாடலால் வரும் பொருள்)
  216. 216) குரவம், பாதிரி ஆகியவை எந்தத் திணைக்குரிய பூக்கள்?(பாலை)
  217. 217) தாழை -எந்த திணைக்குரிய பூ?(நெய்தல்)
  218. 218) செங்கழுநீர் -எந்த திணைக்குரிய பூ?(மருதம்)
  219. 219) தோன்றி- எந்த திணைக்குரிய பூ?(முல்லை)
  220. 220) காந்தள்-எந்த திணைக்குரிய பூ?(குறிஞ்சி)
  221. 221) நீர்நாய் எந்த திணைக்குரிய விலங்கு?(மருதம்)
  222. 222) வலியிழந்த யானை எந்த திணைக்குரிய விலங்கு?(பாலை)
  223. 223) புன்னை ஞாழல் எந்த திணைக்குரிய மரங்கள்?(நெய்தல்)
  224. 224) இலுப்பை எந்த நிலத்திற்குரிய மரம்?(பாலை)
  225. 225) காஞ்சி எந்த நிலத்திற்குரிய மரம்?(மருதம்)
  226. 226) கொன்றை காயா எந்த நிலத்திற்குரிய மரங்கள்?(முல்லை)
  227. 227) அகில், வேங்கை எந்த நிலத்திற்குரிய மரம்?(குறிஞ்சி)
  228. 228) புறா எந்த நிலத்திற்குரிய பறவை?(பாலை)
  229. 229) குறும்பு எந்த நிலத்திற்குரிய ஊர்?(பாலை)
  230. 230) பாடி சேரி எந்த நிலத்திற்குரிய ஊர்கள்?(நெய்தல்)
  231. 231) சிறுகுடி எந்த நிலத்திற்குரிய ஊர்?(குறிஞ்சி)
  232. 232) பொய்கை எந்த நிலத்திற்குரிய நீர்?(மருதம்)
  233. 233) குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்_______&______&________(குறிஞ்சி மருதம் நெய்தல்)
  234. 234) கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?(வறுமை இல்லாமையால்)
  235. 235) தால்-பொருள் தருக(நாக்கு)
  236. 236) உழுவை-பொருள் தருக(புலி)
  237. 237) அகவுதல்-பொருள் தருக(அழைத்தல்)
  238. 238) ஏந்தெழில்-பொருள் தருக(மிகுந்த அழகு)
  239. 239) அணிமை-பொருள் தருக(அருகில்)
  240. 240) Aesthetics-கலைச்சொல் தருக(அழகியல்)
  241. 241) Artifacts-கலைச்சொல் தருக(கலைப்படைப்புகள்)
  242. 242) Terminology-கலைச்சொல் தருக(கலைச்சொல்)
  243. 243) Myth-கலைச்சொல் தருக.(தொன்மம்)
  244. 244) சிறந்த அமைச்சருக்கு உரிய இயல்புகள் எத்தனை?(5)
  245. 245) பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
  246. 246) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)
  247. 247) இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(சொற்பொருள் பின்வருநிலையணி)
  248. 248) மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்-இதில் வந்துள்ள அணி______(உவமை அணி)
  249. 249) தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்-இதில் வந்துள்ள அணி யாது?(வஞ்சப்புகழ்ச்சி அணி)
  250. 250) சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்-இதில் பயின்று வந்துள்ள அணி யாது?(உவமை அணி)