Aram in Sangam Literature: One Mark Questions and Answers

சங்க இலக்கியத்தில் அறம் - ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்

சங்க இலக்கியத்தில் அறம்

ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள்

  1. தமிழர்கள் இல்வாழ்க்கையை_________ஆகக் கொண்டனர்

    விடையைக் காண்க

    அற வாழ்க்கை

  2. தமிழர் பொருள் ஈட்டி_______ செய்து இன்புற்றனர்

    விடையைக் காண்க

    அறம்

  3. சங்ககாலத்தில் எதை மனித உறவின் மையமாக கொண்டிருந்தனர்?

    விடையைக் காண்க

    அறம்

  4. உலகே பரிசாகக் கிடைத்தாலும் எச்செயல்களைச் செய்ய மறுத்தவர், தமிழர்?

    விடையைக் காண்க

    பழி தரும் செயல்களை

  5. சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் எது?

    விடையைக் காண்க

    சங்க காலம்

  6. மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு _______

    விடையைக் காண்க

    துளி

  7. மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய______  பெருகுகிறது

    விடையைக் காண்க

    மகிழ்ச்சி

  8. மனிதன் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான _______ஐ மனிதன் ஏற்க வேண்டும்.

    விடையைக் காண்க

    அறத்தை

  9. அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதி எது?

    விடையைக் காண்க

    அறம்

  10. அறநெறிக் காலம் என்பது எது?

    விடையைக் காண்க

    சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக் காலம் என்பர்.

  11. அறநெறிக் கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க இலக்கிய அறங்கள்______

    விடையைக் காண்க

    இயல்பானவை

  12. "கவிதை வாழ்க்கையின் திறனாய்வு" என்று கூறியவர் யார்?

    விடையைக் காண்க

    திறனாய்வாளர் ஆர்னால்டு

  13. சங்க அறங்கள் __________களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல

    விடையைக் காண்க

    சமயங்கள்

  14. அறம் செய்வதில்________ நோக்கம் இருக்கக் கூடாது

    விடையைக் காண்க

    வணிக

  15. அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது _______ மக்களின் கருத்தாக இருந்தது

    விடையைக் காண்க

    சங்ககால

  16. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற _______ நோக்கு கூடாது என்று கூறப்பட்டது.

    விடையைக் காண்க

    வணிக

  17. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று குறிப்பிடும் இலக்கியம் எது?

    விடையைக் காண்க

    புறநானூறு

  18. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்று பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    ஏணிச்சேரி முடமோசியார்

  19. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"-என்ற பாடல் வரிகள் உணர்த்தும் கருத்து யாது?

    விடையைக் காண்க

    நோக்கம் இன்றி அறம் செய்வதே மேன்மை தரும்

  20. மன்னர்களிடம் உள்ள செங்கோலும் வெண்கொற்றக் குடையும் எதன் குறியீடாகப் போற்றப்பட்டன?

    விடையைக் காண்க

    அறத்தின் குறியீடாகப் போற்றப்பட்டன

  21. 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', 'அறநெறி பிழையாத் திறனறி மன்னர்' என்ற பாடல் வரிகள் எதனைச் சுட்டுகின்றன?

    விடையைக் காண்க

    மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.

  22. அரசன் எதைப்போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ளவேண்டும்?

    விடையைக் காண்க

    செங்கோல்

  23. அரசனின் கடமை யாது?

    விடையைக் காண்க

    நீர்நிலை பெருக்கி நில வளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது.

  24. எதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும்?

    விடையைக் காண்க

    அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்

  25. அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று பாடிய புலவர் யார்?

    விடையைக் காண்க

    ஊன்பொதிப் பசுங்குடையார்

  26. நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் இலக்கியம் எது?

    விடையைக் காண்க

    மதுரைக்காஞ்சி

  27. "செம்மை சான்ற காவிதி மாக்கள்" என்று அமைச்சர்களைப் பாடுபவர் யார்?

    விடையைக் காண்க

    மாங்குடி மருதனார்

  28. அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தவை எவை?

    விடையைக் காண்க

    அறம் கூறும் மன்றங்கள்

  29. அறம் கூறு அவையம் பற்றி "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்" என்று பாடும் இலக்கியம் எது?

    விடையைக் காண்க

    புறநானூறு

  30. மதுரையில் இருந்த அற அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

    விடையைக் காண்க

    மதுரைக்காஞ்சி

  31. தனிச்சிறப்பு பெற்ற அற அவையம் எது?

    விடையைக் காண்க

    உறையூர் அற அவையம்

  32. துலாக்கோல் போல நடுநிலை மிக்க அற அவையம் எது?

    விடையைக் காண்க

    மதுரை அற அவையம்

  33. போர் அறம் என்பது யாது?

    விடையைக் காண்க

    வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையே போர் அறம் ஆகும்

  34. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று கூறும் நூல் எது?

    விடையைக் காண்க

    புறநானூறு

  35. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்று பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    ஆவூர் மூலங்கிழார்

  36. "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடும் இலக்கியம் எது?

    விடையைக் காண்க

    புறநானூறு

  37. "எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்" என்று பாடிய புலவர் யார்?

    விடையைக் காண்க

    ஆவூர் மூலங்கிழார்

  38. உண்மையான மகிழ்ச்சி எது?

    விடையைக் காண்க

    தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி.

  39. ___________யை மறப்பது தான் மகிழ்ச்சி

    விடையைக் காண்க

    தன் மகிழ்ச்சி

  40. "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடிய புலவர் யார்?

    விடையைக் காண்க

    மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

  41. "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று பாடும் நூல் எது?

    விடையைக் காண்க

    புறநானூறு

  42. கொடையின் சிறப்பால் போற்றப்படும் வள்ளல்கள் எத்தனை பேர்?

    விடையைக் காண்க

    7

  43. வள்ளல்களின் கொடைப் பெருமையைப் பாடும் இலக்கியங்கள் எவை?

    விடையைக் காண்க

    சிறுபாணாற்றுப்படை, பெருஞ்சித்திரனார் பாடல்

  44. ஆற்றுப்படை இலக்கியங்கள் _________இலக்கியங்களாகவே உள்ளன

    விடையைக் காண்க

    கொடை

  45. பதிற்றுப்பத்து_______ அரசர்களில் கொடைப் பதிவாகவே உள்ளது

    விடையைக் காண்க

    சேர

  46. "இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன்" என்று போற்றப்படுபவர் யாவர்?

    விடையைக் காண்க

    வள்ளல்கள்

  47. வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் வள்ளல் யார்?

    விடையைக் காண்க

    பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்

  48. பிடவூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாராட்டுபவர் யார்?

    விடையைக் காண்க

    நக்கீரர்

  49. "வள்ளலின் பொருள் இரவலனின் பொருள். வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை" என்று குறிப்பிடுவர் யார்?

    விடையைக் காண்க

    பெரும்பதுமனார்

  50. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?

    விடையைக் காண்க

    அதியமான்

  51. "உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன்" என்று பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    அவ்வையார்

  52. இரவலர் தேடி வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் யாருடைய இயல்பு?

    விடையைக் காண்க

    ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

  53. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய புலவர் யார்?

    விடையைக் காண்க

    நச்செள்ளையார்

  54. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் யார்?

    விடையைக் காண்க

    பேகன்

  55. "மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் பேகன்" என்று பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    பரணர்

  56. "தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திருப்புவது தன் நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்துன்பம் தருகிறது" என்று வருந்தியவர் யார்?

    விடையைக் காண்க

    பெருந்தலைச் சாத்தனார்

  57. பெருந்தலைச் சாத்தனாரைப் பாடிய புலவர் யார்?

    விடையைக் காண்க

    குமணன்

  58. எல்லாவற்றையும் கொடுப்பவன் யார்?

    விடையைக் காண்க

    மலையமான் திருமுடிக்காரி

  59. "எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி" என்று பாடிய புலவர் யார்?

    விடையைக் காண்க

    கபிலர்

  60. "ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டு விடுதல் மேலானது" என்று பாடும் நூல் எது?

    விடையைக் காண்க

    கலித்தொகை

  61. தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கிய புலவர் யார்?

    விடையைக் காண்க

    பெருஞ்சித்திரனார்

  62. தாம் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளத்தைப் பலப்படுத்தும் இலக்கியம் எது?

    விடையைக் காண்க

    புறநானூறு

  63. உதவி செய்தலை ஈழத்துப் பூதன்தேவனார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

    விடையைக் காண்க

    உதவியாண்மை

  64. "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று கூறும் இலக்கியம் எது?

    விடையைக் காண்க

    கலித்தொகை

  65. கலித்தொகையை பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    நல்லந்துவனார்

  66. "பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    நல்லந்துவனார்

  67. "உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்" என்று பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    நல்வேட்டனார்

  68. சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே என்று பாடும் இலக்கியம் எது?

    விடையைக் காண்க

    நற்றிணை

  69. "உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும்" என்று பாடியவர் யார்?

    விடையைக் காண்க

    பெருங்கடுங்கோ

  70. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு___________

    விடையைக் காண்க

    நிறைவு

  71. நிறைவடைகிறவனே செல்வன் என்று கூறுவது எது?

    விடையைக் காண்க

    சீன நாட்டுத் தாவோவியம்

  72. பிறருக்கு உதவாமல் மனிதத்திற்குக் கொடும்பாவி கட்டுவது _____காலத்தில் இல்லை.

    விடையைக் காண்க

    சங்க

  73. ______________ சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

    விடையைக் காண்க

    வாய்மையை

  74. வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை வலியுறுத்தும் வரிகள் யாவை?

    விடையைக் காண்க

    பொய்யா செந்நா, பொய்படுபறியா வயங்கு செந்நா

  75. _______ ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்

    விடையைக் காண்க

    நாக்கு

  76. இன்பத்தின் கதவைத் திறப்பதும் துன்பத்தின் கதவைத் திறப்பதும் எது?

    விடையைக் காண்க

    நாக்கு

  77. ______ பேசும் நா மனிதனை உயர்த்துகிறது.

    விடையைக் காண்க

    மெய்

  78. ______ பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது

    விடையைக் காண்க

    பொய்

  79. 'பிழையா நன்மொழி' என்று வாய்மை பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

    விடையைக் காண்க

    நற்றிணை

  80. நிலம் புடை பெயர்ந்தாலும் ____ சொல்லக்கூடாது

    விடையைக் காண்க

    பொய்

  81. தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம்  _______தரமானது

    விடையைக் காண்க

    மூன்றாம்

  82. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்  _______தரமானது

    விடையைக் காண்க

    இரண்டாம்

  83. இயல்பாக அறியும் அறம்  ______தரமானது

    விடையைக் காண்க

    முதல்

  84. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான _______ தரமான அறங்கள்.

    விடையைக் காண்க

    முதல்

  85. போதிதர்மர் எந்த நூற்றாண்டில் சீனாவிற்குச் சென்றார்?

    விடையைக் காண்க

    6

  86. போதிதர்மர் சீனாவில் எந்தத் தத்துவத்தைப் போதித்தார்?

    விடையைக் காண்க

    பவுத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவு

  87. ஜென் தத்துவம் உருவாகக் காரணமானவர் யார்?

    விடையைக் காண்க

    போதிதர்மர்

  88. போதிதர்மர் யார்?

    விடையைக் காண்க

    கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர்

  89. போதி தர்மருக்கு சீனர்கள் செய்த கைம்மாறு என்ன?

    விடையைக் காண்க

    போதி தர்மருக்குச் சீனர்கள் கோவில் கட்டிச் சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருகின்றனர்.

  90. ஜென் தத்துவம் எதிலிருந்து உருவானது?

    விடையைக் காண்க

    போதி தர்மரின் தத்துவப் போதனையில் இருந்து