2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் | 2nd EVS Environmental Science: Term 3 Unit 4: Day and Night
நீங்கள் கற்க இருப்பவை
* பகல் மற்றும் இரவு நேர வானம்
* பகல், இரவு கால ஒழுங்குமுறை
* திசைகள்
படத்தை உற்றுநோக்குங்கள். அதில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?
பகல் வானம்
சூரியன்
சூரியன் நமக்கு ஒளியையும், வெப்பத்தையும் கொடுக்கிறது. இது தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சூரியன் நாம் வாழும் பூமியைவிட மிகப் பெரியது. ஆனால், அது பூமியில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது. சூரியன் இல்லையெனில், பூமியில் உயிர்கள் வாழ முடியாது.
உங்களுக்குத் தெரியுமா?
சூரிய ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள் ஆகிறது.
நிழல்
ஒரு பொருள் தன் வழியே ஒளியைக் கடக்க அனுமதிக்காதபோது, அங்கு ஓர் இருட்டான பகுதி உருவாகிறது. இது 'நிழல்' என்று அழைக்கப்படுகிறது.
சூரிய ஒளி உனது பின் பகுதியில் விழுமாறு நின்றுகொள். இப்போது உனக்கு முன்னால் தரையைப் பார். நீ பார்ப்பது தான் உனது நிழல். உனது நிழல் உன்னுடன் நகர்கிறதா என்பதைக் கவனி.
* உன்னைச் சுற்றி உள்ள பொருள்களில் எந்தெந்தப் பொருள்களின் நிழல்களை நீ பார்க்கிறாய் என்பதைப் பற்றி கலந்துரையாடுக.
உனது நிழலின் அளவு மாறுபடுவதைக் கவனித்திருக்கிறாயா? காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் உனது நிழலை உற்றுநோக்கி அதனை அட்டவணைப்படுத்துக.
இரவு வானம்
கலந்துரையாடுவோமா!
நாம் இருளில் பொருள்களைப் பார்க்க முடியுமா? அவற்றைப் பார்ப்பதற்கு நமக்கு ஒளி (வெளிச்சம்) தேவைப்படுகிறது. கீழ்க்காணும் படங்களை உற்றுநோக்கு. இரவு வானம் எவ்வாறு பகல் வானத்திலிருந்து வேறுபடுகிறது?
நிலா
நாம் இரவு வானத்தில் நிலா, நட்சத்திரங்கள் மற்றும் மேகங்களைப் பார்க்கலாம். நிலா தானாக ஒளிர்வதில்லை. அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ஒளிர்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நிலவின் பல்வேறு நிலைகள்
கலந்துரையாடுவோமா!
தொடர்ந்து 15 நாள்கள் நிலவை உற்றுநோக்கி, நிலா எல்லா இரவிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறதா என்பதைக் குறித்துக் கலந்துரையாடுக.
நிலாவின் வடிவம் ஒவ்வொரு இரவும் வேறுபடுவதுபோல காணப்படும். நிலா தனது முழுமையான வடிவத்துடன் காணப்படுவதை முழு நிலவு (பௌர்ணமி) என்றோம். இரவில் நிலவை காணமுடியாத (வானம் தெளிவாக காணப்படும் பொழுதும்) நாளை அமாவாசை என்கிறோம்.
நிலவின் நிலையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. (எ.கா.) ஈகைத் திருநாள், மகாளய அமாவாசை.
உங்களுக்குத் தெரியுமா?
நிலவில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.
நட்சத்திரங்கள்
வானத்தில் எண்ணமுடியாத அளவுக்கு நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. சூரியன், நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம் ஆகும். நட்சத்திரங்கள் பகலிலும் மின்னுகின்றன. ஆனால், சூரிய ஒளி நட்சத்திரங்களின் ஒளியைவிட மிகவும் பிரகாசமாக இருப்பதால் பகலில் நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியவில்லை. இரவு வானில் நட்சத்திரக் குழுக்கள் சில குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவற்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
உங்களுக்குத் தெரியுமா?
நட்சத்திரக் குழுக்களின் இருப்பிடத்தை வைத்தே நம் முன்னோர்கள் பயிரிடும் காலம், அறுவடைக் காலத்தைக் கண்டறிவர். மேலும், பயணத்தின் போதும் திசைக்காட்டியாகவும் இவற்றைப் பயன்படுத்தினர்.
பொருத்துக
அ) சூரியன் - என்னுடன் பயணம் செய்யும் இருட்டான பகுதி
ஆ) நட்சத்திரங்கள் - தானாக ஒளிர்வதில்லை
இ) நிலா - குறிப்பிட்ட அமைப்பை உருவாக்கும்
ஈ) நிழல் - தாவர வளர்ச்சிக்கு உதவும்
விடையைக் காண இங்கே சொடுக்கவும்
அ) சூரியன் – தாவர வளர்ச்சிக்கு உதவும்
ஆ) நட்சத்திரங்கள் - குறிப்பிட்ட அமைப்பை உருவாக்கும்
இ) நிலா - தானாக ஒளிர்வதில்லை
ஈ) நிழல் - என்னுடன் பயணம் செய்யும் இருட்டான பகுதி
பகல், இரவு கால ஒழுங்குமுறை
பகலும், இரவும் மாறி மாறி வருகின்றன. பெரும்பாலான விலங்குகளும், தாவரங்களும் பகலில் செயல்பட்டும் இரவில் தூங்கவும் செய்கின்றன. சில தாவரங்கள், மாலை நேரங்களில் இலைகளை மூடிக் கொள்கின்றன. எ.கா. தூங்குமூஞ்சி மரம். இருப்பினும் சில விலங்குகள் இரவில் விழிப்புடன் செயல்படுகின்றன. வௌவால், ஆந்தை, காட்டுப்பூனை, எலி, ஓநாய், கரப்பான்பூச்சி மற்றும் மின்மினிப் பூச்சி போன்றவை இரவில் செயல்படும் சில விலங்குகளாகும்.
* வௌவால் ஒலி அலைகளைப் பயன்படுத்தி பறக்கவும் வேட்டையாடவும் செய்கிறது.
* ஆந்தை தனது தலையை கிட்டத்தட்ட முக்கால் பங்கு அளவிற்கு சுற்றி தனக்குப் பின்னால் இருப்பவற்றைக் காண்கிறது.
பெரும்பாலான பூக்கள் காலையில் மலர்கின்றன. இருப்பினும், சில மலர்கள் இரவில் மலர்கின்றன. எ.கா. மல்லிகை, அல்லி, சம்பங்கி, சப்பாத்திக்கள்ளி, ஊமத்தம்பூ. மலர்களில் பெரும்பாலானவை நறுமணமிக்கதாகவே உள்ளன. இவற்றுள் சில கண்களைக் கவரும் வண்ணங்களில் காணப்பட்டாலும், பெரும்பாலானவை வெண்மையாகவே காணப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
நிஷகாந்தி மலரானது இரவில் மலரும் மலர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.
இரவில் செயல்படும் விலங்குகளைக் கண்டறிந்து (✓) குறியிடுக.
திசைகள்
பொருள்களின் அமைவிடத்தை விளக்கக் குறிப்பிட்ட ஒன்றை அடிப்படையாகக் கொண்டு முன், பின், வலது மற்றும் இடது பக்கம் என பயன்படுத்துகிறோம். இடங்களும் பொருள்களும் உள்ள இடத்தை விளக்க சூரியனின் அமைவு நிலையின் அடிப்படையில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எனக்குறிப்பிடுகிறோம். இவையே திசைகள் எனப்படும். திசைகள் நம்மைச் செல்ல வேண்டிய இடத்திற்கு மாறாமல் சென்றடைய உதவுகின்றன.
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக நமக்குத் தோன்றுகிறது. காலை வேளையில் சூரியனை நோக்கி நின்று கொள் (கிழக்கு). உனக்குப் பின்னால் இருப்பது மேற்கு, உனக்கு வலப்பக்கம் இருப்பது தெற்கு, உனக்கு இடப்பக்கம் இருப்பது வடக்கு திசையாகும்.
கீழ்க்காணும் படத்தை உற்றுநோக்குங்கள். நடுவில் இருப்பது மீரா. அவளுக்கு தெற்கில் இருப்பது பூந்தொட்டிகள், வடக்கில் இருப்பது பாறைகள், கிழக்கில் இருப்பது மலர் வண்டி, மேற்கில் இருப்பது மரக்கட்டை.
உனது பள்ளியில் சூரியன் தோன்றும் கிழக்கு திசையை அடையாளம் காண ஆசிரியரின் உதவியைக் கேள். பிறகு பின்வருபவை எந்தெந்த திசைகளில் உள்ளன எனக் காண்க. நீர்த்தேக்கத் தொட்டி, கொடிமரம், விளையாட்டுத் திடல், கழிப்பறை, சமையலறை, வாயிற் கதவு மற்றும் குடிநீர்க் குழாய். உனது விடையை அட்டவணைப்படுத்துக.
The Sun gives us light and heat. It helps plants grow. The Sun is much bigger than the earth where we live. The Sun looks small because it is far away from the earth. There will be no life on earth if there is no Sun.
Do you know?
The sunlight takes around 8 minutes to reach the earth.
Shadow
When an object does not allow light to pass through it, a dark area is formed. This is called a shadow.
Stand with your back to Sun. Look at the ground in front of you. What you see is your shadow. Find out if your shadow moves with you.
* Observe the things around you that make shadows and share it with your friends.
Have you noticed that the size of your shadow changes? Observe your shadow in the morning, afternoon and evening and find out its size.
Night Sky
Let Us Discuss
Can we see in the dark? We need light to see things. Observe the pictures. How is the night sky different from the day sky?
The Moon
In the night sky, we can see the moon, many stars and clouds too. As you know, the moon does not have light of its own. It gets its light from the Sun.
Phases of the Moon
Let Us Discuss
Does the moon look the same every day? Observe the moon in the sky every night for fifteen days and find out.
The moon appears to change shape every night. On the night when we see it in its complete form, it is called the full moon (Pournami).
On the night when we cannot see the moon at all (even when the sky is clear), it is called the new moon (Amavasai).
Many festivals are celebrated based on the phases of the moon - e.g., Eid, Mahalaya Amavasai.
Do you know?
Neil Armstrong was the first man to step on the moon.
The Stars
There are countless stars in the sky. The Sun is the nearest star. The stars shine during the day too, but we cannot see their light because the Sun is much brighter than the other stars. We see that a group of stars appears to form a pattern in the sky. Have you seen any star patterns?
Do you know?
The position of the pattern of stars helped people to know when to sow and harvest crops. They also helped to people find directions during travel.
Match the following
a) Sun
- a dark area that travels with me
b) Stars
- does not have its own light
c) Moon
- form patterns
d) Shadow
- helps plants grow
Click to see the answer
a) Sun - helps plants grow
b) Stars - form patterns
c) Moon - does not have its own light
d) Shadow - a dark area that travels with me
Rhythms of Day and Night
Day and night follow each other in a rhythmic way. Most animals and plants are active during the day and sleep at night. Some plants close their leaves by evening, e.g., Rain tree (Thoongu-Moonji Maram). However, some animals are active at night. The bat, owl, wild big cat, mouse, wolf, cockroach and firefly are examples of animals that are active at night.
They are active at night to:
Catch other animals wandering at night for their food
Avoid animals that eat them during the day
Avoid the heat of the day
They have:
Big eyes (owl, cat)
A sharp sense of smell (mouse, dog)
Good hearing (bat)
Do you know?
Bats use sound waves to fly and hunt. Owls can see what is behind them by rotating their heads almost fully.
Most flowers bloom in the morning. However some flowers bloom at night. Examples are Jasmine, Water lilies, Tuberose, Cactus flower, Datura flower. Many of them have a lovely fragrance. Many are white in colour though some have attractive colours.
Do you know?
The Bethlehem Lily (Nishagandhi) is called the “Queen” of the flowers that bloom at night.
Identify and tick (✓) the animals that are active at night.
Directions
Front, back, right and left tell us where things are, based on a reference point. North, South, East and West tell us where places and things are, based on the position of the Sun. They are called directions. Directions help us reach a place without getting lost.
The Sun appears to rise in the East and set in the West. Now stand facing the Sun in the morning (i.e. East). Behind you is West. To your right is South. To your left is North.
Observe the picture given below. In the centre is Meera. To her South are the flower pots, to her North are the rocks, to her East is the flower cart and to her West is the tree trunk.
In your school, identify the eastern direction by finding out where the Sun rises. Ask your teacher to help you. Then find the direction in which the following are situated - water tank, flag post, playground, toilet, kitchen, gate and water tap. Tabulate your answer.
விடியலைத் தொடர்ந்து வருவது காலை. காலை வேளையில் பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டபின் பள்ளிக்கு கிளம்ப வேண்டும்.
மதிய உணவு உண்ணும் வேளை நண்பகல். அதைத் தொடர்ந்து வரும் நேரம் பிற்பகல்.
சூரியன் மறையும் நேரமே மாலை நேரம். அந்நேரத்தில் குழந்தைகள் விளையாடுவர்.
மாலை நேரச் செயல்பாடுகள்
பறவைகள் கூட்டிற்கு திரும்புதல்
பசுக்கள் கொட்டகைக்குத் திரும்புதல்
குழந்தைகள் வெளியில் விளையாடுதல்
சூரியன் மறைந்து இரவு துவங்குவதற்கு முன் உள்ள நேரமே அந்திப்பொழுது. விடியலுக்கும் சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட நேரத்தையும் கூட அந்திப்பொழுது என்கிறோம்.
காலைச் செயல்பாடுகளுக்கு "கா" எனவும் மாலைச் செயல்பாடுகளுக்கு "மா" எனவும் எழுதுவோமா!
இரவு
அம்மா: இது அழகிய குளிர்ந்த இரவு நேரம்.
இந்த நேரத்தில் வெளியில் அமர்ந்து நிலவொளியில் இரவு உணவை உண்போமா!
சொற்களஞ்சியம்: நிலா (சந்திரன்), விண்மீன் (நட்சத்திரம்), குளிர்ச்சி, இரவு
கண்ணன்: சூரியனைப் போல் நிலா வெளிச்சமாக இல்லையே ஏன் அம்மா?
கண்மணி: ஏன் என்று எனக்குத் தெரியும். சூரியனைப் போல் நிலவிற்கு சுய ஒளி (வெளிச்சம்) இல்லை. அது சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகிறது. நிலாவிற்கு சந்திரன் என்ற பெயரும் உண்டு.
கண்ணன்: அங்கே பார். வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் (விண்மீன்) தெரிகின்றன. விண்மீனிற்கு சுய ஒளி உள்ளதால் இரவில் மின்னுகிறது. இது அளவில் பெரியதாக இருந்தாலும் வெகு தொலைவில் இருப்பதால் சிறியதாகத் தெரிகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஆந்தை மற்றும் வௌவால் இரவில் செயல்படும் விலங்குகள்.
அம்மா : வாருங்கள் நேரமாகிறது அனைவரும் சென்று தூங்கலாம். நேரத்தோடு தூங்கி எழுவது நல்ல பழக்கம்.
பொருந்தாதைக் கண்டுபிடித்து.(✔) குறியிடுவோமா!;
மழை, இடி, மின்னல்
சொற்களஞ்சியம்: மழை, மழை மேகங்கள், மின்னல், இடி, வானவில்
கண்ணனுக்கும் கண்மணிக்கும் வானத்தைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும்.
கண்மணி: இன்று வானம் முழுவதும் மழை மேகங்களாகத் தெரிகிறதே!
கண்ணன்: மழை வர ஆரம்பிக்கிறது.
இருவரும் திடீரென வானத்தில் தோன்றிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதைத் தொடர்து வந்த பெருத்த சத்தத்தையும் கேட்டு, அது என்ன அம்மா? என்றனர்.
அம்மா : அதுவா! இடி மற்றும் மின்னல் இவை. இரண்டும் மழைக்காலத்தில் தோன்றும்.
மழை நின்ற சிறிது நேரத்திற்குப் பின் கண்ணன், கண்மணி இருவரும் அழகான வானவில்லைக் கண்டனர்.
இடி மற்றும் மின்னலின் போது,
❖ மரங்கள், மின் கம்பிகளின் கீழே நிற்கக் கூடாது.
❖ அறுந்து தொங்கும் மின் கம்பிகளைத் தொடக்கூடாது.
❖ 'மின் செருகிகளைத் தொடக்கூடாது.
மழையின் போது செய்யக்கூடாத செயல்களை (X) குறியிட்டுக் காட்டுக.