கேள்விகள் மற்றும் பதில்கள்
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
கற்கண்டு: இயல் நான்கு - வல்லினம் மிகா இடங்கள்
பாடநூல் வினாக்கள்
சிறுவினா
1. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை :
செடிகொடி என்பதற்கும் செடிக்கொடி என்பதற்கும் வேறுபாடு உண்டு.
செடிகொடி என்னும் தொடருக்கு செடியும் கொடியும் என்பது பொருள்.
செடிக்கொடி என்னும் தொடரானது செடியில் ஏறியுள்ள கொடி என்றே பொருள்.
செடி கொடி என்று எழுதும் போது செடி + உம் கொடி + உம் எனப் பிரித்து எழுதுவது 'உம்' என்ற சொல் தொக்கி வருவதால் உம்மைத்தொகை எனப்படும்.
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
. எழுத்துக்கள் - எழுத்துக்கள் - இவற்றில் எது சரி?
இதே போல கருத்துக்கள், வாக்குக்கள், வாழ்த்துக்கள் விளக்குக்கள் இவற்றில் வரும் வல்லினம் மிகுமா?
விகுதிப் புணர்ச்சியில், கருத்து + கள் (விகுதி) வல்லெழுத்துக்குப்பின் வரும் வலி மிகுவதற்கு இலக்கணத்தில் எந்த விதியும் இல்லை.
. வல்லெழுத்து (க்,ச்,த்,ப்) ஏன் மிக வேண்டும் ?
பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும் தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.
கற்பவை கற்றபின்
1. வல்லினம் வருமா?
விடை :
- அ. தோழி கூற்று - நிலைமொழி உயர்தினையாய் இருந்தால் வல்லினம் மிகா.
- ஆ. பெரிய தம்பி - குறிப்புப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.
- இ. சிறிய பறவை - குறிப்புப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.
- ஈ. பழகு தமிழ் - வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
- உ. இது கேள் - இது என்னும் சுட்டுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
- ஊ. எலி கடிக்கும் - எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
- எ. ஓடிய குதிரை - பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.
- ஏ. தரும்படி சொன்னார் - “படி” என முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.
- ஐ. வாழ்க தலைவர் - வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
- ஒ. கார் காலம் - காலப் பெயர்ச்சொல் எனவே வல்லினம் மிகாது.
2. வல்லினம் இடலாமா?
விடை :
- 1. வாழ்த்துகள் - 'கள்' என்னும் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் இடக்கூடாது.
- 2. எழுத்துகள் - "கள்" என்னும் பன்மை விகுதி சேரும் போது வல்லினம் இடுதல் கூடாது.
- 3. திருநிறை செல்வன் - “திருநிறை” ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடரில் வல்லினம் இடுதல் வேண்டும்.
- 4. திருவளர்செல்வி - “வளர்செல்வி” - வினைத்தொகையில் வல்லினம் இடுதல் கூடாது.
3. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
விடை :
- அ. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (தவறு). அண்ணாமலை பல்கலைக் கழகம் என்பது தான் (சரி) - “அண்ணாமலை” என்னும் பெயரை அடுத்து வல்லினம் இடுதல் கூடாது. இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும் எனவே பல்கலைக்கழகம் என்பதில் வல்லினம் இட்டு எழுதுவது சரியே!
- ஆ. அத்தனைச் சிறிய (தவறு). அத்தனை சிறிய (சரி) - 'அத்தனை' என்ற சொல்லின் பின் வல்லினம் இடுதல் கூடாது.
- இ. ஆத்திச்சூடி (சரி) - ஆத்தி - அகர ஈறு, இகர ஈறு புணரும்போது வல்லினம் மிகும்.
- ஈ. எடுத்துக்காட்டுகள் (சரி) - வன்தொடர் குற்றியலுகரத்தில் வல்லினம் இட்டு எழுத வேண்டும்.
- உ. கீழ்பக்கம் (தவறு). கீழ்ப்பக்கம் (சரி) - இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.
- ஊ. சான்றோர் பேரவை (சரி) - நிலைமொழியில் உயர்திணை வரும்போது வல்லினம் இடுதல் கூடாது.
- எ. சென்னைப் பல்கலைக்கழகம் (சரி) - இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் இடுதல் வேண்டும்.
- ஏ. தயிர்ச்சோறு (சரி) - இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் இடுதல் வேண்டும்.
4. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
விடை :
- அ. வங்கிக்கடன் (வல்லினம் மிகும்) - இகர ஈற்றில் வல்லினம் மிகும் (வினையாக வந்தாலும் பெயராக வந்தாலும் வல்லினம் மிகும்).
- ஆ. பழங்களைப்பறிக்காதீர்கள் (வல்லினம் மிகும்) - 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர் அதனால் வல்லினம் மிகும்.
- இ. திட்ட குழு (வல்லினம் மிகாது) - பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.
- ஈ. அரசு ஆணை பிறப்பித்தது (வல்லினம் மிகாது) - ஆணை பிறப்பித்தது என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை எனவே வல்லினம் மிகாது.
- உ. மருந்துக்கடை (வல்லினம் மிகும்) - 1. மென் தொடர் குற்றியலுகரத்தின் பின்னும் வலிமிகும். 2. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும். (குறிப்பு: மென்தொடர் குற்றியலுகரம் எச்சப் பொருளில் வந்தால் வல்லினம் மிகாது. இச்சொல்லில் “மருந்து” பின் வல்லினம் மிகும்.)
- ஊ. வேலையில்லாப் பட்டதாரி (வல்லினம் மிகும்) - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.
- எ. சிறப்புப் பரிசு (வல்லினம் மிகும்) - வன்தொடர் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகும்.