பத்தாம் வகுப்பு - தமிழ் - எளிய வழிகாட்டி
மெல்லக் கற்பவர் தேர்ச்சிக்கு...
| வ.எண் | தலைப்பு | மதிப்பெண்கள் |
|---|---|---|
| 1 | சரியான விடையைத் தேர்வு செய்க (38) | 8 மதிப்பெண்கள் |
| 2 | விடைக்கேற்ற வினா அமைக்க | 2 மதிப்பெண்கள் |
| 3 | உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக | 3 மதிப்பெண்கள் |
| 4 | காட்சியைக் கண்டு கவினுற எழுதுக (1) | 5 மதிப்பெண்கள் |
| 5 | படிவம் நிரப்புக (2) | 5 மதிப்பெண்கள் |
| 6 | திருக்குறள் பாடல்கள் (10) | 2 மதிப்பெண்கள் |
| 7 | அலகிடுதல் | 3 மதிப்பெண்கள் |
| 8 | கடிதங்கள் (5) | 5 மதிப்பெண்கள் |
| 9 | நிற்க அதற்குத் தக (9) | 5 மதிப்பெண்கள் |
| 10 | மோனை-எதுகை கண்டறிதல் | 1-2 மதிப்பெண்கள் |
| 11 | நூலும் நூலாசிரியர் பெயரும் | 1-2 மதிப்பெண்கள் |
| மொத்தம் | 40 மதிப்பெண்கள் | |
முயன்று கற்பவருக்கு...
| வ.எண் | தலைப்பு | மதிப்பெண்கள் |
|---|---|---|
| 12 | செய்யுள், உரைநடை குறுவினாக்கள் (34) | 6 மதிப்பெண்கள் |
| 13 | இலக்கணம் குறுவினாக்கள் (21) | 6 மதிப்பெண்கள் |
| 14 | பகுபத உறுப்பிலக்கணம் (11) | 2 மதிப்பெண்கள் |
| 15 | உரைநடை சிறுவினாக்கள் (13) | 3 மதிப்பெண்கள் |
| 16 | செய்யுள் சிறுவினாக்கள் (18) | 3 மதிப்பெண்கள் |
| 17 | இலக்கணம் சிறுவினாக்கள் (10) | 3 மதிப்பெண்கள் |
| 18 | விரிவானம் நெடுவினாக்கள் (8) | 6 மதிப்பெண்கள் |
| 19 | உரைநடை நெடுவினாக்கள் (6) | 6 மதிப்பெண்கள் |
| 20 | செய்யுள் நெடுவினாக்கள் (8) | 5 மதிப்பெண்கள் |
| மொத்தம் | 80 மதிப்பெண்கள் | |
சரியான விடையைத் தேர்வு செய்க
சரியான விடையைத் தேர்வு செய்க என்ற இப்பகுதியை இருவர் இருவராகச் சேர்ந்து பயிற்சி செய்க. (ஒருவர் வினா கேட்கவும், மற்றொருவர் பதிலளிக்கவும்) இப்பகுதியில் மொத்தம் 11 வினாக்கள் கேட்கப்படும். 20% வினாக்கள் பாடப்புத்தகத்தின் உள்பகுதியிலிருந்து கேட்கப்படும் என்பதால் இதிலிருந்து எட்டு வினாக்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
-
மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது...
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
-
காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது...
சருகும் சண்டும்
-
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்...
எம்+தமிழ்+நா
-
‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' -தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே...
பாடல், கேட்டவர்
-
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை...
மணி வகை
-
“உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
மோனை, எதுகை
-
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
1. ஒவ்வோர்ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
2. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே3. காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
செய்தி 1, 3 ஆகியன சரி -
"பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
-
'பெரிய மீசை' சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அன்மொழித்தொகை
-
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
கொண்டல்-கிழக்கு, கோடை-மேற்கு, வாடை-வடக்கு, தென்றல்-தெற்கு
-
பின்வருவனவற்றுள் முறையான தொடர்...
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
-
“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது...
சிற்றூர்
-
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது...
வேற்றுமை உருபு
-
காசிக்காண்டம் என்பது...
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
-
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டு சீறியாழை பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு”. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை...
இன்மையிலும் விருந்து
-
‘உனதருளே பார்ப்பன் அடியேனே'-யாரிடம் யார் கூறியது?
இறைவனிடம் குலசேகராழ்வார்
-
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பதுதலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. -
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
வானத்தையும் பேரொலியையும்
-
குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே...
பால் வழுவமைதி, திணை வழுவமைதி
-
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
இலா
-
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி...
சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
-
அருந்துணை என்பதைப் பிரித்தால்...
அருமை+துணை
-
“இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது அறியா வினா.
“அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது சுட்டு விடை -
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
கல்வி
-
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்...
மன்னன் இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் இறைவன் -
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்...
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
-
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
-
மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
தளரப் பிணைத்தால்
-
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?
-
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அங்கு வறுமை இல்லாததால்
-
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க
உழவு, ஏர், மண், மாடு
-
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-
திருப்பதியும் திருத்தணியும்
-
‘தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-
நெறியோடு நின்று காவல் காப்பவர்
-
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்...
வலிமையை நிலைநாட்டல்
-
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது..
சிலப்பதிகாரம்
-
மேன்மை தரும் அறம் என்பது..
கைமாறு கருதாமல் அறம் செய்வது
-
‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது.
இடையறாது அறப்பணி செய்தலை
-
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்...
அதியன், பெருஞ்சாத்தன்
-
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்...
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
-
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்...
அகவற்பா
-
“இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்..”-இவ்வடிகளில் கற்காலம் என்பது
தலையில் கல் சுமப்பது
-
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
-
பூக்கையைக் குவித்து பூவே புரிவொடு காக்க என்று.. வேண்டினார்
கருணையன் எலிசபெத்துக்காக
-
வாய்மையே மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி
உருவகம்
-
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
எந்தக் காட்சி கொடுக்கப்பட்டாலும் இந்த ஒரே கவிதை போதும். பிழையின்றி எழுதும் பட்சத்தில் ஐந்து மதிப்பெண்களை உறுதியாகப் பெறலாம்.
கவிதை
கண்ணில் தோன்றும் இக்காட்சி-மனக்
கண்ணில் நீளுது அதன்நீட்சி !
என்னைக் கவர்ந்த இக்காட்சி -என்னை
என்னவோ செய்யுது ஆட்சி !
எண்ணங்கள் பலவாய் விரியுது-என்றன்
எழுத்துகள் கவியாய் மலருது !
உண்மையை உள்ளம் உணருது-உள்ளம்
உரக்கச் சொல்லத் துடிக்குது !!