3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கல்வி கண் போன்றது
வாங்க பேசலாம்
படிக்கத் தெரியாதவர் ஒருவர் தன்னுடைய ஊரிலிருந்து வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் நகரப்பேருந்து நிலையம் வருகின்றார்.
பேருந்து நிலையத்தில் அவர் செல்ல வேண்டிய பேருந்து எது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
மற்றவர்களிடம் அது பற்றிக் கேட்கவும் அவருக்கு மிகவும் தயக்கம்.
எனவே, ஏதோ ஒரு பேருந்தில் ஏறிவிட்டார்.
நடத்துனர் சில கிலோமீட்டர் தூரம் சென்றபோது பயணச்சீட்டு வழங்கும்போது எந்த ஊர் என்று கேட்டார்.
படிக்கத் தெரியாதவர் செல்லும் ஊருக்கு அந்தப் பேருந்து செல்லாததால் இடைவழியிலேயே இறக்கிவிடப்பட்டார்.
மீண்டும் நகரப் பேருந்து நிலையத்திற்கு வந்து, பின்னர் மற்றொருவரின் உதவியுடன் தான் செல்ல வேண்டிய ஊருக்குச் சென்றார்.
படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
வினாக்களுக்கு விடையளி
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக
1. ஆவல் - ஆசை
2. தபால் - அஞ்சல்
3. தண்டோரா - முரசறைந்து செய்தி தெரிவித்தல்
4. நெறிப்படுத்துதல் - வழிகாட்டுதல்
சரியான சொல்லால் நிரப்புக
எதனை, எங்கே செய்வோம்?
கல்வி கற்கச் செல்வோம்
பாதுகாப்பு தேடிச் செல்வோம்
மருத்துவம் பார்க்கச் செல்வோம்
அஞ்சல்தலை வாங்கச் செல்வோம்
பயணம் செய்யச் செல்வோம்
மருத்துவமனை
காவல் நிலையம்
பள்ளிக்கூடம்
பேருந்து நிலையம்
அஞ்சல் நிலையம்
விடையைக் காண்க
கல்வி கற்கச் செல்வோம் - பள்ளிக்கூடம்
பாதுகாப்பு தேடிச் செல்வோம் - காவல் நிலையம்
மருத்துவம் பார்க்கச் செல்வோம் - மருத்துவமனை
அஞ்சல்தலை வாங்கச் செல்வோம் - அஞ்சல் நிலையம்
பயணம் செய்யச் செல்வோம் - பேருந்து நிலையம்
உன்னை அறிந்துகொள்
சொல் விளையாட்டு
1. சுற்றம்
2. தோற்றம்
3. மாற்றம்
4. ஏற்றம்
5. சீற்றம்
6. முற்றம்
பாடி மகிழ்வோம்
பனங்காய் வண்டி
ஒத்தையடிப் பாதையிலும்
ஓரம் போகும் வண்டி
புகையில்லா வண்டி
புழுதி தரா வண்டி
எண்ணெய் இல்லா வண்டி
ஏறிக் கோடா பாண்டி
உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்
சிந்திக்கலாமா
வளர்மதியும் பொன்மணியும் நல்ல தோழிகள். பொன்மணி சொற்களைத் தெளிவாகவும் அழகாகவும் எழுதுவாள். வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவாள்.
இதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
அழகாகவும் தெளிவாகவும் எழுதும்போது முகத்தைப் பார்க்காமலே அவர்கள் மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும்.
அழகான கையெழுத்து என்பது படிப்பவரைக் கவரும் ஒரு தனிக்கலை.
அழகான கையெழுத்துள்ள மாணவருக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.
அழகாக எழுதும்போது மனம் ஒரு நிலைப்படும்
தெளிவான எழுத்துகள் உற்சாகத்தைக் கொடுக்கும்.
அழகாக எழுதுவோரின் தாள்களில் ஒழுங்கு இருக்கும்.