OMTEX AD 2

3rd Grade Tamil Lesson: Kannan Seitha Uthavi (Kannan's Help) | Term 1 Chapter 2

3 ஆம் வகுப்பு தமிழ் - கண்ணன் செய்த உதவி | Term 1 Chapter 2

கண்ணன் செய்த உதவி

3 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 1 | இயல் 2

2. கண்ணன் செய்த உதவி

கண்ணன் பள்ளிக்கு செல்லும் காட்சி

கதிரவனின் ஒளி எங்கும் படர்ந்திருந்தது. பறவைகள் ஒலியெழுப்பிப் பறந்தன. காலை வேளையில் கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான். அவன் செல்லும் வழியில் ஒரு பெரியவரைப் பார்த்தான். அந்தப் பெரியவர் “சாலையைக் கடக்க உதவ வேண்டும்" என்று அவனிடம் கேட்டார்.

"வாருங்கள் போகலாம்" என்று கூறிய கண்ணன், அவரது கையைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக எதிர்ப்புறத்தில் விடுவதற்குச் சென்றான். அப்போது எதிரே ஒரு பேருந்து வேகமாக வந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது. உடனே கண்ணன் கத்தினான்.

பேருந்து மரத்தில் மோதும் விபத்துக் காட்சி

அறிந்த தகவல்களையும், செய்திகளையும் சரியான ஒலிப்புடன் தங்கு தடையின்றிக் கலவைத் தொடரில் பேசுதல்.

என்ன செய்வது என்று தெரியாமல் "ஐயோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என்று உரக்கக் கத்தினான், உடனே அந்தப் பெரியவர் தன் பையிலிருந்து செல்பேசியை எடுத்தார். பின் 108 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேசினார். அடுத்த சிறிதுநேரத்தில் அவசர ஊர்தி வந்தது. காவலர்களும் வந்தனர். பேருந்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவசர ஊர்தி மற்றும் காவலர்கள் வரும் காட்சி

இதனைப் பார்த்த கண்ணன் பேருந்தில் இருந்தவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான். அதன்பிறகு பள்ளிக்குச் சென்றான். ஆசிரியர் கண்ணனைப் பார்த்து “ஏன் தாமதமாக வருகிறாய்?" எனக் கேட்டார்.

கண்ணன் ஆசிரியரிடம் பேசுதல்

கண்ணன் நடந்தவற்றைத் தெளிவாகக் கூறினான். ஆசிரியர் அவனைப் பாராட்டினார். கண்ணன் மகிழ்ச்சியடைந்தான்.

"மாணவர்களே! நீங்களும் உங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். அதுவே மகிழ்ச்சியைத் தரும்" என்றார். மாணவர்கள் அனைவரும் கையைத் தட்டி கண்ணனுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.