6 ஆம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் இடைப் பருவத்தேர்வு 2024 - விடைகளுடன்
அசல் வினாத்தாள்
விடைகள்
பகுதி - அ : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5 x 1 = 5)
பகுதி - ஆ : எவையேனும் ஐந்தனுக்கு மட்டும் விடையளிக்க. (5 × 2 = 10)
பகுதி - இ : எவையேனும் இரண்டனுக்கு விடையளி. (2 x 3 = 6)
- 1. பிறர் கூறும் கடுஞ்சொல்லைப் பொறுத்தல்
- 2. பிறர் பொருளை விரும்பாதிருத்தல்
- 3. பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல்
- 4. பிறரைப் பற்றிப் புறங்கூறாதிருத்தல்
- 5. நல்ல அறிஞர்களுடன் நட்புக் கொள்ளுதல்
- 6. நன்றி மறவாதிருத்தல்
- 7. பிறர் மனம் வருந்தும்படிப் பேசாதிருத்தல்
- 8. இன்சொல் பேசுதல்
- • காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
- • மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
- • மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
- • பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
- • பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகளை நடத்தினார்.
பகுதி - ஈ : அடிமாறாமல் எழுதுக. (1 x 3 = 3)
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
- ஔவையார்
பகுதி - உ : கட்டுரை எழுதுக. (1 x 6 = 6)
(முன்னுரை - இளமைக்காலம் - கல்விப்பணி - நிறைவேற்றிய பிறதிட்டங்கள் - முடிவுரை)
காமராசர்
முன்னுரை:
'கல்விக்கண் திறந்த காமராசர்' என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்த அந்த மாமனிதரின் பணிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமைக்காலம்:
காமராசர் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இளமையிலேயே நேர்மையும், துணிவும், நாட்டுப்பற்றும் மிக்கவராகத் திகழ்ந்தார்.
கல்விப்பணி:
காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த பள்ளிகளைத் திறந்தார். குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வர சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால் கல்விப் புரட்சி ஏற்பட்டது.
பிற திட்டங்கள்:
விவசாயிகளின் நலனுக்காகப் பல அணைகளைக் கட்டினார். நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகப் பல தொழிற்சாலைகளைத் திறந்தார். இதனால் நாடும், நாட்டு மக்களும் வளர்ச்சி அடைந்தனர்.
முடிவுரை:
தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசரின் வழியில் நாமும் நடந்து, நேர்மையுடனும், நாட்டுப்பற்றுடனும் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்வோம்.
- 1) காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள்
- 2) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் - ஆசிரியர் நாள்
- 3) சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் - தேசிய ஒற்றுமை தினம்
- 4) அப்துல்கலாம் பிறந்தநாள் - மாணவர் நாள்
- 5) விவேகானந்தர் பிறந்தநாள் - தேசிய இளைஞர் நாள்
- 6) ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் - குழந்தைகள் நாள்