6th Tamil - 2nd Mid Term Exam 2024 - Original Question Paper | Krishnagiri District

6th Standard Tamil 2nd Mid Term Exam Official Original Question Paper and Answer Key 2024

6 ஆம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் இடைப் பருவத்தேர்வு 2024 - விடைகளுடன்

அசல் வினாத்தாள்

6th Standard Tamil 2nd Mid Term Question Paper 6th Standard Tamil 2nd Mid Term Question Paper 6th Standard Tamil 2nd Mid Term Question Paper

விடைகள்

பகுதி - அ : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5 x 1 = 5)

1. மாணவர்கள் நூல்களை _____ கற்க வேண்டும்.
விடை: ஆ) மாசற
2. நாம் _____ சொல்படி நடக்க வேண்டும்.
விடை: இ) மூத்தோர்
3. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
விடை: அ) பசி + இன்றி
4. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _____ ஆகும்.
விடை: ஈ) பொறை
5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் _____.
விடை: அ) மறைந்த

பகுதி - ஆ : எவையேனும் ஐந்தனுக்கு மட்டும் விடையளிக்க. (5 × 2 = 10)

6. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
மன்னனையும் கல்வி கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால், மன்னனை விடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவருக்கோ, சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டு.
7. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
நாம் நேர்மையுடனும், ஊக்கத்துடனும் உழைத்து வாழ்வில் உயர்ந்தால் பெருமை பெறலாம். பிறருக்கு உதவும் நல்ல குணத்துடன் வாழ்ந்தாலும் பெருமை பெறலாம்.
8. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
காமராசர் காலத்தில் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் எனப் பல புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
9. நாம் யாருடன் சேரக் கூடாது?
தீய ஒழுக்கம் மற்றும் தீய குணம் கொண்டவர்களுடன் நாம் சேரக் கூடாது.
10. இனஎழுத்துகள் என்றால் என்ன?
ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இனஎழுத்துகள் எனப்படும். (எ.கா: க் - ங், ச் - ஞ், ட் - ண்)
11. எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது எது?
நாம் எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது. பிற உயிர்களின் மேல் அன்பு செலுத்தி வாழ வேண்டும்.
12. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
நமது வீட்டிற்கு வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, குளிர்ந்த நீரும், இன்சொற்களும் பேசி உபசரிக்க வேண்டும் என்று நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது.

பகுதி - இ : எவையேனும் இரண்டனுக்கு விடையளி. (2 x 3 = 6)

13. தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?
தாய் தன் குழந்தையைத் தமிழ்ச்சோலையில் பூத்த பூவே, தமிழ்ப் பண்ணில் விளைந்த தேனே என்றும், கண்ணே, மணியே என்றும் கூறிப் பாராட்டுகிறாள்.
14. ஆசாரக்கோவை கூறும் எட்டுவித்துகள் யாவை?
ஆசாரக்கோவை கூறும் எட்டு நல்லொழுக்க விதைகள்:
  • 1. பிறர் கூறும் கடுஞ்சொல்லைப் பொறுத்தல்
  • 2. பிறர் பொருளை விரும்பாதிருத்தல்
  • 3. பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல்
  • 4. பிறரைப் பற்றிப் புறங்கூறாதிருத்தல்
  • 5. நல்ல அறிஞர்களுடன் நட்புக் கொள்ளுதல்
  • 6. நன்றி மறவாதிருத்தல்
  • 7. பிறர் மனம் வருந்தும்படிப் பேசாதிருத்தல்
  • 8. இன்சொல் பேசுதல்
15. நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
நான் படித்து ஆசிரியர் ஆக விரும்புகிறேன். ஏனெனில், மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், சிறந்த கல்வியையும் கற்றுத் தந்து, அவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்குவதே என் இலட்சியம். (இது ஒரு பதில். மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பதில் அளிக்கலாம்.)
16. காமராசரின் கல்விப் பணிகள் குறித்து எழுதுக.
  • • காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
  • • மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
  • • மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • • பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • • பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகளை நடத்தினார்.

பகுதி - ஈ : அடிமாறாமல் எழுதுக. (1 x 3 = 3)

17. “மன்னனும் மாசற” எனத் துவங்கும் மூதுரைப் பாடலை அடி மாறாமல் எழுதுக.

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

- ஔவையார்

பகுதி - உ : கட்டுரை எழுதுக. (1 x 6 = 6)

18. காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க் காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
(முன்னுரை - இளமைக்காலம் - கல்விப்பணி - நிறைவேற்றிய பிறதிட்டங்கள் - முடிவுரை)

காமராசர்

முன்னுரை:
'கல்விக்கண் திறந்த காமராசர்' என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்த அந்த மாமனிதரின் பணிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமைக்காலம்:
காமராசர் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இளமையிலேயே நேர்மையும், துணிவும், நாட்டுப்பற்றும் மிக்கவராகத் திகழ்ந்தார்.

கல்விப்பணி:
காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த பள்ளிகளைத் திறந்தார். குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வர சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால் கல்விப் புரட்சி ஏற்பட்டது.

பிற திட்டங்கள்:
விவசாயிகளின் நலனுக்காகப் பல அணைகளைக் கட்டினார். நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகப் பல தொழிற்சாலைகளைத் திறந்தார். இதனால் நாடும், நாட்டு மக்களும் வளர்ச்சி அடைந்தனர்.

முடிவுரை:
தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசரின் வழியில் நாமும் நடந்து, நேர்மையுடனும், நாட்டுப்பற்றுடனும் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்வோம்.

19. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
  • 1) காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள்
  • 2) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் - ஆசிரியர் நாள்
  • 3) சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் - தேசிய ஒற்றுமை தினம்
  • 4) அப்துல்கலாம் பிறந்தநாள் - மாணவர் நாள்
  • 5) விவேகானந்தர் பிறந்தநாள் - தேசிய இளைஞர் நாள்
  • 6) ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் - குழந்தைகள் நாள்