Silappathikaram: Important One Mark Questions and Answers | சிலப்பதிகாரம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

Silappathikaram: Important One Mark Questions and Answers | சிலப்பதிகாரம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

சிலப்பதிகாரம்: ஒரு மதிப்பெண் வினா-விடைகள்

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விடை: இளங்கோவடிகள்

தண் நறுஞ் சாந்தம் பொருள் தருக.

விடை: குளிர்ந்த மணம் மிக்க சந்தனம்

மேவிய விரை பொருள் தருக.

விடை: எழுந்து பரவுகின்ற நறுமணம்

பகர்வனர் பொருள் தருக.

விடை: விற்பனை செய்பவர்

காருகர் பொருள் தருக.

விடை: நெசவாளர்

தூசு பொருள் தருக.

விடை: பட்டு

துகிர் பொருள் தருக.

விடை: பவளம்

ஆரம் பொருள் தருக.

விடை: சந்தனம்

அருங்கல வெறுக்கை பொருள் தருக.

விடை: பலவகையான செல்வம்

நனந்தலை மறுகு பொருள் தருக.

விடை: அகன்ற வீதி

பால்வகை பொருள் தருக.

விடை: பலவகை

கூலம் பொருள் தருக.

விடை: தானியம்

காழியர் பொருள் தருக.

விடை: பிட்டு வணிகர்

கூவியர் பொருள் தருக.

விடை: அப்பம் சுடுபவர்

கல்நொடை ஆட்டியர்-பொருள் தருக.

விடை: வலைச்சியர்

பகருநர் பொருள் தருக.

விடை: விற்பவர்

பாசவர் பொருள் தருக

விடை: வெற்றிலை விற்பவர்

வாசவர் பொருள் தருக.

விடை: நறுமண பொருட்கள் விற்பவர்

பல் நிண விலைஞர்-பொருள் தருக.

விடை: பலவகையான இறைச்சி விற்பவர்

ஓசுநர்-பொருள் தருக.

விடை: எண்ணெய் விற்பவர்

கஞ்ச காரர்-பொருள் தருக

விடை: வெண்கலப் பாத்திரம் செய்பவர்

கருங்கைக் கொல்லர்-பொருள் தருக.

விடை: இரும்பினால் கருவிகள் செய்பவர்

கண்ணுள் வினைஞர் -பொருள் தருக.

விடை: ஓவியர்

மண்ணீட்டு ஆளர்-பொருள் தருக.

விடை: சிற்பி

நன்கலம் தருநர்-பொருள் தருக.

விடை: இரத்தின வேலை செய்பவர்

துன்ன காரர் -பொருள் தருக.

விடை: தையல் தைப்பவர்

தோலின் துன்னர்-பொருள் தருக.

விடை: தோல்பொருள் தைப்பவர்

கிழி-பொருள் தருக.

விடை: துணி

கிடை -பொருள் தருக.

விடை: கட்டை

பால்கெழு மாக்கள்- பொருள் தருக.

விடை: பலவகைத் தொழில் செய்யும் மக்கள்

குரல் முதல் 7 எவை?

விடை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

மறு இன்றி -பொருள் தருக.

விடை: குற்றமின்றி

ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணியை முதலில் வைத்து பாடும் நூல் எது?

விடை: திருத்தணிகையுலா

வண்ணமும் சுண்ணமும்- இலக்கணக்குறிப்பு தருக.

விடை: எண்ணும்மை

பயில்தொழில் -இலக்கணக்குறிப்பு தருக.

விடை: வினைத்தொகை

சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் நந்தா வளையாபதி தருவான் வாசகனுக்கு ஈந்தான் திளையாத குண்டலகேசிக்கும்-என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

விடை: திருத்தணிகை உலா

கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் எந்தப் பாதையில் அழைத்துச் சென்றார்?

விடை: இடைப்பட்ட வழி

தென்னவன் சிறுமலையின் இடப்பக்கம் வழியாகச் சென்றால்__________வழியாக மதுரை செல்லலாம்.

விடை: திருமால் குன்றம்

நெடுவேள் குன்றம் என்று அழைக்கப்படும் மலை எது?

விடை: சுருளிமலை

கண்ணகி, சுருளி மலையில் எந்த இடத்தை அடைந்தாள்?

விடை: வேங்கைக் கானல்

கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்துச் சென்றவர் யார்?

விடை: கவுந்தி அடிகள்

கொடும்பாளூர் என்னும் இடத்தில் இருந்து மதுரைக்குச் செல்லும் வழிகள் எத்தனை?

விடை: 3

காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து கொடும்பாளூர் செல்லும் வழி யாது?

விடை: உறையூர்- திருவரங்கம்

சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை எது?

விடை: உரைப்பாட்டு மடை

உரைப்பாட்டு மடை என்பதன் பொருள் யாது?

விடை: உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு

மடை என்பது யாது?

விடை: வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை

உரை என்பது யாது?

விடை: பேசும் மொழியின் ஓட்டம்

சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை?

விடை: முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?

விடை: 3

சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை?

விடை: 30

இரட்டைக் காப்பியங்கள் எனப்படுபவை எவை?

விடை: சிலப்பதிகாரம், மணிமேகலை

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

விடை: இளங்கோவடிகள்

மணிமேகலையின் ஆசிரியர் யார்?

விடை: சீத்தலைச்சாத்தனார்

கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக' என்றவர் யார்?

விடை: சீத்தலைச்சாத்தனார்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என்றவர் யார்?

விடை: இளங்கோவடிகள்

சிலப்பதிகாரத்தில் உள்ள மூன்று காண்டங்கள் எவை?

விடை: புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்