Monday, October 26, 2015

காதல் அடிமையாய் .......

என் ஆசைக்காதலனே தினமும்
விடியும் பொழுதுகளில் உனக்கு
முன் நான் எழுந்து குளித்து பொட்டு
வைத்து எந்தன் நெற்றி பொட்டு
உந்தன் நெற்றியில் பிறை சந்திரனாய்
பதிந்து விட அழுத்தியே உனக்கு 
நான் முத்தமிட்டு உன்னை எழுப்பிட
வேண்டும் நீயும் ஆனந்தத்தில்
என்னை அணைத்திட வேண்டும் ♥ 

உனக்கு நான் உணவூட்டிட வேண்டும்
உன் எச்சில் பட்ட உணவை நானும்
உண்டு பசி ஆறிட வேண்டும் ........
வெளியே செல்லும் உனக்கு
உன் வழித்துணையாய்
என் இதழ் முத்தம் தந்து
அனுப்பிட வேண்டும் ♥ 

நீ இன்றி நான் தனித்திருக்கும்
நிமிடங்கள் உந்தன் நினைவால்
எனக்கு சுட்டிட வேண்டும்
நீ வந்ததும் உன்னை வந்து
கட்டி அணைத்திட வேண்டும்♥) 

மாலை நேரம் உன்னுடன் தேநீர்
சுவைத்திட வேண்டும் ..என்
தோள்களிலே உன்னை அணைத்து
உந்தன் உஷ்ணகாற்று எந்தன்
காதோரம் கதை பேச பதிலுக்கு
உந்தன் கழுத்தோரம் நான்
என் இதழ் பதித்திட வேண்டும் .... ♥

இப்படியே உன்மீது பித்துக்கொண்டு
நான் வாழ்ந்திட வேண்டும்
வாழும் காலம் வரை உனக்கு
சேவை செய்திடும் உந்தன்
காதல் அடிமையாய் .......♥

Featured Post

Complete Guide to HSC Class 12 English Writing Skills (Sets 7-10) with Solutions

📥 Download Complete Guide PDF Complete Guide to HSC Class 12 English Writing Skills (Question Sets 7-10) Target Audience: Cl...

Popular Posts