Showing posts with label ஈகை. Show all posts
Showing posts with label ஈகை. Show all posts

Kaatchiyai Kandu Kavinura Ezhuthuga: Eegai Poem with Explanation | Class 10 Tamil Iyal 8

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 8

ஈகை - பிறருக்குக் கொடுத்து உதவும் காட்சி

தலைப்பு : ஈகை

அன்பே அகிலம் ஆள வேண்டும்

ஆசை நிலவாய்த் தேய வேண்டும்

இன்பம் கடலாய்ப் பெருக வேண்டும்

ஈகை என்றும் நிலைக்க வேண்டும்

உழைப்பை யாவரும் மதிக்க வேண்டும்

ஊக்கம் கொண்டு உழைக்க வேண்டும்

உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும்

கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும்

தானம், தருமம் வளர வேண்டும்

தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்.

விளக்கம்:

அன்பே அகிலம் ஆள வேண்டும்: இந்த உலகம் முழுவதும் அன்பால் நிறைந்திருக்க வேண்டும். அனைவரும் ஒருவர் பால் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும். அப்போதுதான் இல்லாதவர்க்கு இல்லாமை உண்டாகும்.

ஆசை நிலவாய்த் தேய வேண்டும்: ஆசையுள்ள மனிதர்கள் பிறருக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள். பொருளீட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள். அப்படிப்பட்ட ஆசைகள் தேய்பிறை போலத் தேய வேண்டும்.

ஈகை என்றும் நிலைக்க வேண்டும்: பிறருக்கு கொடுத்தலாகிய ஈகைப்பண்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும். அதற்காக பிறரிடம் எப்போதும் கையேந்தும் பிச்சைக்காரர்கள் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல... பிறருக்கு கொடுக்கும் குணம் உள்ளவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

ஊக்கம் கொண்டு உழைக்க வேண்டும்: மக்கள் அனைவரும் எப்போதும் ஊக்கத்துடனே உழைப்பில் ஈடுபட வேண்டும். அவ்வாறு உழைப்பை மதித்து ஊக்கத்துடன் உழைக்கும் போது நிறைய பொருள் ஈட்ட முடியும். இல்லாதவருக்கு, இயலாதவருக்குக் கொடுத்து உதவ முடியும்.

உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும்: ஊரின் நடுவே உள்ள குளம் ஊரார் அனைவரும் பயன்படும். அத்தகைய குளம்போல கொடுப்பவர் உள்ளம் இருக்க வேண்டும்.

கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும்: கொடை கொடுப்பவர்களுடைய கைகள் கொடுத்துக் கொண்டிருப்பதால் கைகள் சிவந்து விடும்.

தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்: ஈகை, கொடை கொடுப்போரைத் தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்.