இரண்டாம் இடைப்பருவத் தேர்வு – 2023
ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல்
நேரம்: 1.30 மணி | மதிப்பெண்கள்: 51
I. சரியான விடையைத் தேர்ந்தெடு (6x1=6)
1. ஆரியர்கள் ___________ லிருந்து வந்தனர்.
2. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் 'வாய்மையே வெல்லும்' ___________ லிருந்து எடுக்கப்பட்டது.
4. தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு
5. இந்திய விடுதலை நாளில் பறக்கப்பட்ட முதல் தேசியக்கொடி ___________ அருங்காட்சியகத்தில் உள்ளது.
6. வேளாண்மை என்பது ___________ நிலைத் தொழிலாகும்.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக (6x1=6)
7. ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
8. குருகுலம் முறையானது பண்டைய கால கல்வி கற்கும் முறையாகும்.
9. தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
10. பௌத்தத்தை நிறுவியவர் கௌதம புத்தர் ஆவார்.
11. இந்தியாவின் தேசியக் கனி மாம்பழம்.
12. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது இரண்டாம் நிலைத் தொழில் எனப்படும்.
III. பொருத்துக (4x1=4)
| 13. ஆதிச்சநல்லூர் | - தங்க ஆபரணங்கள் |
| 14. பிட்சுக்கள் | - துறவிகள் |
| 15. இயற்கை வளம் | - காடு |
| 16. ரவீந்திரநாத் தாகூர் | - தேசிய கீதம் |
IV. குறுவினா (ஏதேனும் ஏழு மட்டும்) (7x2=14)
17. வேத கால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?
18. வேத காலத்தில் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக.
19. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
1. நன்னம்பிக்கை
2. நல்லறிவு
3. நற்செயல்
20. வளங்கள் என்றால் என்ன?
21. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
22. தேசிய உறுதிமொழியை எழுதியவர் யார்?
23. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
24. வணிகம் என்றால் என்ன?
25. பண்டமாற்று முறை என்றால் என்ன?
26. பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
V. விரிவான விடையளி (எவையேனும் மூன்று மட்டும்) (3x5=15)
27. வேத கால பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
பின் வேத காலம்:
28. பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
1. நற்காட்சி (சரியான பார்வை)
2. நல்ஊக்கம் (சரியான நோக்கம்)
3. நல்வாய்மை (சரியான பேச்சு)
4. நற்செயல் (சரியான செயல்)
5. நல்வாழ்க்கை (சரியான வாழ்க்கை முறை)
6. நன்முயற்சி (சரியான முயற்சி)
7. நற்கடைப்பிடி (சரியான கவனம்)
8. நற்தியானம் (சரியான தியானம்)
29. இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
1. உயிரியல் வளங்கள்: காடுகள், பயிர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற உயிர்க்கோளத்திலிருந்து பெறப்படும் வளங்கள். எ.கா: மரம், இறைச்சி.
2. உயிரற்ற வளங்கள்: உயிரற்ற பொருட்களிலிருந்து பெறப்படும் வளங்கள். எ.கா: நிலம், நீர், தாதுக்களான இரும்பு, தாமிரம்.
3. புதுப்பிக்கத்தக்க வளம்: பயன்பாட்டிற்குப் பின் மீண்டும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் வளங்கள். இவை காலப்போக்கில் குறையாது. எ.கா: சூரிய ஆற்றல், காற்று, நீர்.
4. புதுப்பிக்க இயலாத வளம்: ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது புதுப்பிக்க பல மில்லியன் ஆண்டுகள் ஆகும் வளங்கள். எ.கா: நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
30. மூலப்பொருட்களின் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகளை வகைப்படுத்தப்படுகின்றன?
1. வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள்: வேளாண்மையிலிருந்து கிடைக்கும் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துபவை. எ.கா: பருத்தி ஆலைகள், சர்க்கரை ஆலைகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்.
2. கனிம அடிப்படைத் தொழிற்சாலைகள்: கனிமங்களைத் தாதுக்களாகப் பிரித்தெடுத்து மூலப்பொருளாகப் பயன்படுத்துபவை. எ.கா: சிமெண்ட் தொழிற்சாலை, இரும்பு எஃகு தொழிற்சாலை, அலுமினிய தொழிற்சாலை.
3. கடல்சார் அடிப்படைத் தொழிற்சாலைகள்: கடல் மற்றும் பெருங்கடல்களிலிருந்து கிடைக்கும் பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டவை. எ.கா: மீன் எண்ணெய் தயாரிப்பு, கடல் உணவு பதப்படுத்துதல்.
4. வன அடிப்படைத் தொழிற்சாலைகள்: காடுகளிலிருந்து கிடைக்கும் பொருட்களை மூலப்பொருட்களாகக் கொண்டவை. எ.கா: காகிதத் தொழிற்சாலை, மரச்சாமான்கள் தயாரிப்பு, மருந்துப் பொருட்கள் தயாரித்தல்.
VI. வரைபட பயிற்சி (5x1=5)
31. இந்திய வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.