3rd Grade Tamil Textbook Answers - Term 2 Chapter 8 - Natpe Uyarvu Solutions

3rd Grade Tamil Textbook Answers - Term 2 Chapter 8 - Natpe Uyarvu Solutions

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 8 : நட்பே உயர்வு

நட்பே உயர்வு: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 8 : நட்பே உயர்வு: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பயிற்சி

வாங்க பேசலாம்

* உமக்குத் தெரிந்த புதிர் / விடுகதைகளை வகுப்பறையில் கலந்துரையாடுக.

1. ஒரு பொருளின் எல்லா பக்கமும் ஓட்டை. ஆனாலும் அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது அது என்ன?

விடை : பஞ்சு

2. கிழக்குத் திசையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் மின்சார ரயில் 100 கி.மீ வேகத்தில் செல்கிறது. அது வெளியிடும் புகை எந்தத் திசையில் செல்லும்?

விடை : மின்சார ரயிலில் புகை வராது.

3. ஆங்கில எழுத்துகளில் இரண்டு எழுத்துகள் எப்போதும் ஒன்றாகவே வரும். அவை யாவை?

விடை : QU

4. ஒரு டன் தங்கம், ஒரு டன் பஞ்சு இரண்டில் எது அதிக கனமானது?

விடை : இரண்டும் சமம்

5. பதினொன்றோடு இரண்டைச் சேர்த்தால் ஒன்றாகும் எப்படி?

விடை : 11 மணி + 2 மணி = 1 மணி


* அன்பை மறவா முயல் கதையை உமது சொந்த நடையில் கூறுக.

அடர்ந்த காட்டில் முயலும் மானும் நெடுநாள் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். மானை வேட்டையாட விரும்பிய நரி ஒரு சூழ்ச்சிசெய்தது. மானை அழைத்து நீ முயல் மீது அன்பு வைத்திருக்கிறாய், ஆனால் முயல் உன்னைவிட அழகு என்று எல்லோரிடமும் கூறி வருகிறது என்றது. முயல் உன்னை ஒரு நாள் பெரிய ஆபத்தில் மாட்டிவிடும் என்று மானிடம் நரி கூறியது. பின் மானைக் வேட்டையாட நினைத்து தந்திரமாக அழைத்துச் சென்றது. நெடுநேரம் மானை காணாத முயல் அதனைத் தேடிச் சென்றது. நரியின் சூழ்ச்சியை அறிந்த முயல் மானை மீட்க முயன்றது. நரியின் புதிர்களுக்கு சரியான விடையைக் கூறி மானை, முயல் மீட்டுச் சென்றது. இதுவே உண்மையான நட்பின் அடையாளம் ஆகும்.

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. ‘இரை' என்ற சொல்லின் பொருள் _______.

அ) உணவு

ஆ) இருப்பிடம்

இ) மலை

ஈ) இறைவன்

விடை : அ) உணவு

2. ‘மகிழ்ச்சியுடன்’ - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) மகிழ்ச்சி + யுடன்

ஆ) மகிழ்ச்சி + உடன்

இ) மகிழ் + உடன்

ஈ) மகிழ்ச் + சியுடன்

விடை : ஆ) மகிழ்ச்சி + உடன்

3. சொல்லி + கொண்டு - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________.

அ) சொல்லிக்கொண்டு

ஆ) சொல்கொண்டு

இ) சொல்லக்கொண்டு

ஈ) சொல்லிகொண்டு

விடை : அ) சொல்லிக்கொண்டு

4. 'முதுமை' என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________.

அ) தீமை

ஆ) சிறுமை

இ) பெருமை

ஈ) இளமை

விடை : ஈ) இளமை

5. ‘சூழ்ச்சி' என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு _____________.

அ) மான்

ஆ) முயல்

இ) நரி

ஈ) சிங்கம்

விடை : இ) நரி

வினாக்களுக்கு விடையளி

1. முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?

முயல் மானுடன் நண்பனாகப் பழகியது.

2. மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?

மானை விட்டுவிடுவதற்காக நரி முயலுக்கு புதிர்கள் சொல்லியது.

3. மான் எதனால் மாட்டிக்கொண்டது?

மான் நரியின் சூழ்ச்சியை அறிந்துகொள்ளாததால் மாட்டிக் கொண்டது.

4. மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்தன?

நரி தந்திரத்தால் மற்ற விலங்குகளைத் துன்புறுத்துவதால் மற்ற விலங்குகள் நரியிடம் நட்புக் கொள்வதைத் தவிர்த்தன.

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

கீழே உள்ள புதிர்களைப் படித்து, விடை என்னவாக இருக்கும் என்று சிந்தியுங்கள். பின்பு விடையைக் காணுங்கள்.

  1. உயரப் பறப்பேன்; ஆனால் நான் பறவை அல்ல. நான் யார்?
  2. கையுண்டு; கால் இல்லை. ஆனால் நான் இடம் பெயர்வேன். நான் யார்?
  3. காலுண்டு; தலையில்லை. உடல் உண்டு; உயிர் இல்லை. நான் யார்?
விடையைக் காண இங்கே சொடுக்கவும் புதிர்களுக்கான விடைகள்

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி எழுதுக

1. செல்லலாம் இரைதேடச் புல்வெளியில்

விடை : புல்வெளியில் இரை தேடச் செல்லலாம்.

2. அழைத்துச் நண்பனை செல்கிறாய் எங்கு

விடை : நண்பனை எங்கு அழைத்துச் செல்கிறாய்?

3. கட்டை முதுமையில் உயரம் இளமையில்

விடை : இளமையில் உயரம் முதுமையில் கட்டை

மொழி விளையாட்டு

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒரு குழுவிலிருந்து மாணவர்கள் இருவரை அழைத்து அதில் ஒருவரின் காதில் அவருக்கு மட்டும் கேட்கும்படியாக மெதுவாக ஒரு சொற்றொடரைக் கூறுக. இப்பொழுது அந்தமாணவர், சொல்லப்பட்ட சொற்றொடருக்கு ஏற்றாற்போல் எதிரே உள்ள மற்றொரு மாணவரிடம் நடித்துக்காட்ட வேண்டும். அதனை, அந்த மாணவன் கண்டுபிடிக்கவேண்டும். இவ்வாறு தொடர்ந்து விளையாடி மகிழச் செய்க.

நெடிலைக் குறில் ஆக்குக.

1. கானல் - கனல்

2. வாடை - வடை

3. ஆடை – அடை

4. தோடு - தொடு

5. கோடு - கொடு

6. பால் – பல்

மீண்டும் மீண்டும் சொல்லிப்பழகுவோம்

1. விண்ணுக்கும் மண்ணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்கும் டண்ணனகரம்

2. உளி கொண்டு சிலையொன்று வடித்தான். உலகின் தலைசிறந்த கலையென்று மலைத்தான்.

3. குட்டை மரமும் நெட்டைமரமும் மொட்டைத்தலையைத் தடவிக்கொண்டன.

ஒரு சொல் பல பொருள் அறிக.

ஒரு சொல் பல பொருள்

கலையும் கைவண்ணமும்

விரல் பூக்கள் செய்வோமா

உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை ஆள்காட்டி விரலால் தொட்டு வையுங்கள். ஒரே ஒரு கோடு நடுவில் போடுங்கள். பூச்செடி தயார்.

விரல் பூக்கள்

செயல் திட்டம்

எவையேனும் பத்து விடுகதைகளை எழுதி, அவற்றிற்குப் பொருத்தமான படங்களை வரைந்து வருக.

1. கீழே வரும் ஆனால் மேலே போகாது. அது என்ன?

மழை

மழை

2. அடிப்பாதை இருக்கும். கால் இருக்காது. அது என்ன?

நத்தை

நத்தை

3. இளமையில் உயரம். முதுமையில் கட்டை. அது என்ன?

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி

4. உலகம் முழுவதும் சுற்றும். ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும். அது என்ன?

முத்திரை

முத்திரை

5. கைகள் இருக்கும். ஆனால் தட்ட முடியாது? அது என்ன?

கடிகாரம்

கடிகாரம்

6. கண் உண்டு. ஆனால் பார்க்க முடியாது. அது என்ன?

ஊசி

ஊசி

7. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?

வெண்டை

வெண்டை

8. தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம். அது என்ன?

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

9. கை இல்லாமல் நீந்துவான். கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

படகு

படகு

10. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?

பாய்

பாய்