6th Standard Tamil 2nd Mid Term Exam 2024
Original Question Paper with Answer Key
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு – 2024
ஆறாம் வகுப்பு - தமிழ்
நேரம்: 1.30 மணி | மதிப்பெண்கள்: 50
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (5x1=5)
II. கோடிட்ட இடங்களை நிரப்புக (4x1=4)
III. பொருத்துக (3x1=3)
| வினா | விடை |
|---|---|
| 10. தேசம் | நாடு |
| 11. நெறி | வழி |
| 12. பண் | இசை |
IV. எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளி (5x2=10)
V. எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி (2x4=8)
- பொறியியல் கல்லூரிகள்
- மருத்துவக் கல்லூரிகள்
- கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
- ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
- பிறர் செய்யும் உதவியை மறவாதிருத்தல்.
- பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல்.
- இனிய சொற்களைப் பேசுதல்.
- எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.
- கல்வி அறிவு பெறுதல்.
- அனைவரையும் சமமாகப் பேணுதல்.
- அறிவுடையவராய் இருத்தல்.
- நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ளுதல்.
VI. அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5x2=10)
ஆ) மன்டபம் - மண்டபம்
ஆ) வகுப்பு: நான் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்.
ஆ) Library - நூலகம்
ஆ) கல்வி - கல், கவி, வில்
ஆ) சிறுவன் x பெரியவன்
VII. அடிமாறாமல் எழுதுக (1x4=4)
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
VIII. கட்டுரை வடிவில் விடையளி (1x6=6)
அ) காமராசர்
முன்னுரை:
கல்விக்கண் திறந்த காமராசர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராசர், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றி, கல்வி, தொழில், விவசாயம் எனப் பல துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமைப் பருவம்:
காமராசர் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். வறுமையின் காரணமாகத் தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.
கல்விப் பணிகள்:
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காமராசர், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். மூடப்பட்டிருந்த ஆறாயிரம் பள்ளிகளைத் திறந்தார். குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். ஏழை மாணவர்களுக்குச் சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார்.
பிற சாதனைகள்:
விவசாயிகளின் நலனுக்காகப் பல அணைகளைக் கட்டினார். தொழில் வளர்ச்சியைப் பெருக்கப் பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார். இவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி இந்திய அரசு "பாரத ரத்னா" விருதை வழங்கியது.
முடிவுரை:
தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்த கர்மவீரர் காமராசர். அவரது எளிமையும், நேர்மையும், உழைப்பும் என்றும் நமக்கு ஒரு வழிகாட்டியாகும்.
ஆ) பொங்கல் திருநாள்
முன்னுரை:
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது பழமொழி. தமிழர்களின் தலையாய பண்பாடான உழவுத் தொழிலைப் போற்றும் திருநாளே பொங்கல். உழவர்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இது தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
போகிப் பண்டிகை:
பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற அடிப்படையில், வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை எரித்து, வீட்டைச் சுத்தம் செய்வர். இது மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றுவதைக் குறிக்கிறது.
தைப்பொங்கல்:
தை மாதம் முதல் நாள் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி, புத்தாடை அணிவர். வீட்டு முற்றத்தில் புதுப் பானையில் புத்தரிசியிட்டு, வெல்லம், பால் சேர்த்துப் பொங்கல் வைப்பர். பொங்கல் பொங்கி வரும்போது "பொங்கலோ பொங்கல்" என்று கூறி மகிழ்வர். விளைச்சலுக்கு உதவிய கதிரவனுக்கும், பிற உயிர்களுக்கும் படையலிட்டு நன்றி தெரிவிப்பர்.
மாட்டுப் பொங்கல்:
அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இது. மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மாலை அணிவித்து அழகுபடுத்துவர். அவற்றுக்குப் பொங்கல் மற்றும் கரும்பு கொடுத்து வணங்குவர்.
காணும் பொங்கல்:
நான்காம் நாள் காணும் பொங்கல். இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு மகிழ்வர். பெரியோர்களிடம் ஆசி பெறுவர். சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பர்.
முடிவுரை:
பொங்கல் விழா, உழவையும், இயற்கையையும், உழைப்பையும் போற்றும் உன்னத விழா. இது தமிழர்களின் ஒற்றுமையையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் திருவிழாவாகும்.