முதல் இடைப் பருவத் தேர்வு - 2024
9 ஆம் வகுப்பு - தமிழ் வினாத்தாள்
பகுதி - I (மதிப்பெண்கள்: 10)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (10 x 1 = 10)
- அ. வினைத்தொகை
- ஆ. பண்புத்தொகை
- இ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ஈ. வேற்றுமைத்தொகை
- அ. சிற்றிலக்கியம்
- ஆ. தனிப்பாடல்
- இ. தொடர்நிலைச் செய்யுள்
- ஈ. புதுக்கவிதை
- அ. இசை
- ஆ. வசை
- இ. கீழே
- ஈ. மேலே
- அ. மறுமை
- ஆ. பெரிய
- இ. பூவரசு மரம்
- ஈ. வளம்
- அ. தன்வினை
- ஆ. பிறவினை
- இ. செய்வினை
- ஈ. செயப்பாட்டு வினை
- அ. இளங்கோவடிகள்
- ஆ. மீனாட்சி சுந்தரனார்
- இ. சேக்கிழார்
- ஈ. தமிழ் ஒளி
- அ. வெ. இறையன்பு
- ஆ. மா. கிருஷ்ணன்
- இ. வைரமுத்து
- ஈ. பாவேந்தர் பாரதிதாசன்
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே!"
- அ. பெரியபுராணம்
- ஆ. பட்ட மரம்
- இ. தமிழோவியம்
- ஈ. புறநானூறு
- அ. குடபுலவியனார்
- ஆ. சேக்கிழார்
- இ. தமிழ் ஒளி
- ஈ. ஈரோடு தமிழன்பன்
- அ. வினைத்தொகை
- ஆ. பண்புத்தொகை
- இ. உவமைத்தொகை
- ஈ. எண்ணும்மை
பகுதி - II (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் நான்கனுக்கு விடையளிக்க. (4 x 2 = 8)
- கண்ணி என்பதன் விளக்கம் யாது?
- 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' - குறிப்புத் தருக.
- உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைக் குறிப்பிடுக.
- 'கூவல்' என்று அழைக்கப்படுவது எது?
- கலைச் சொற்களை மொழிபெயர்க்க: அ. Water Management, ஆ. Lexicon
பகுதி - III (மதிப்பெண்கள்: 6)
எவையேனும் மூன்றனுக்கு விடையளிக்க. (3 x 2 = 6)
- பொருத்தமான வினையடைகளைத் தேர்வு செய்க. (அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)
அ. ஊர்தி ________ ஓடுகிறது.
ஆ. காலம் ________ ஓடுகிறது. - தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.
அ. இளமையில் கல்வி _________
ஆ. கற்றோர்க்குச் சென்ற _________ - சொல்லுக்குள் சொல் தேடுக.
அ. பாய்மரக்கப்பல் ஆ. எட்டுக்கால் பூச்சி - பிழை நீக்கி எழுதுக.
அ. சர் ஆர்தர் காட்டன் கல்லனையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அனையை கட்டியது.
ஆ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழ பெருந்துணை புரிகின்றன.
பகுதி - IV (மதிப்பெண்கள்: 12)
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி. (3 x 4 = 12)
- காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
- நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
- பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
- தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.
- அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
பகுதி - V (மதிப்பெண்கள்: 8)
எவையேனும் ஒன்றனுக்கு விடையளிக்க. (1 x 8 = 8)
- (அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
(ஆ) உங்களின் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
பகுதி - VI (மதிப்பெண்கள்: 6)
அடிபிறழாமல் எழுதுக. (3 + 3 = 6)
- அ) "தித்திக்கும் தெள்ளமுதாய்..." எனத் தொடங்கும் தமிழ்விடு தூது பாடலை எழுதுக.
- ஆ) "காடெல்லாம்..." எனத் தொடங்கும் பெரிய புராணப் பாடலை எழுதுக.
விடைக்குறிப்பு
பகுதி - I
பகுதி - II
பகுதி - III
அ. சர் ஆர்தர் காட்டன், கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் தௌலீசுவரம் அணையைக் கட்டினார்.
ஆ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.
பகுதி - IV
பிறவினை: எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை. (எ.கா: பந்தை உருட்ட வைத்தான்.)
பகுதி - V
காவிரி நீர் புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அந்தப் பூக்களில் உள்ள தேனைக் குடிக்க வரும் வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர் கால்வாய்களில் பரவி எங்கும் ஓடுகிறது. காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன. சோலைகளில் மலர் அரும்புகள் உள்ளன. பக்கங்களில் எல்லாம் கரிய குவளை மலர்கள் பூத்துள்ளன. கரைகளில் இளைய அன்னங்கள் உலவுகின்றன. நீர்நிலைகளில் எருமைகள் மூழ்கிக் கிடக்கின்றன. அதனால் அங்குள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகிலுள்ள பாக்கு மரங்களில் பாய்கின்றன. இக்காட்சி வானவில்லைப் போன்று விளங்குகிறது.
(ஆ) கடிதம் (கால் முளைத்த கதைகள்):
(மாணவர்கள் கடித வடிவத்தில் எழுத வேண்டும். கீழே கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.)
அன்புள்ள நண்பா/நண்பி,
நலம், நலமறிய ஆவல். நீ பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எஸ். ராமகிருஷ்ணனின் "கால் முளைத்த கதைகள்" என்ற நூல் கிடைத்தது. மிக்க நன்றி. முப்பது பழங்குடியினர் கூறிய கதைகளின் தொகுப்பே இந்த நூல். கொசு ஏன் கடிக்கிறது? பூனையை எலி ஏன் துரத்துகிறது? போன்ற பல விடைதெரியாத கேள்விகளுக்கு இக்கதைகளில் விடை உள்ளது. இது போன்ற நல்ல நூல்களைத் தொடர்ந்து படிப்போம்.
பகுதி - VI
அ) தமிழ்விடு தூது:
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படுந்தேனே உன்னோடு உவந்துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்.
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்.
தயாரிப்பு
எஸ். ஜெயசெல்வன்,
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
பாணாதுறை மேல்நிலைப்பள்ளி,
கும்பகோணம்.