நயன்தாரா சர்ச்சை: படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய சுந்தர்.சி?
ஒரு காலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை நயன்தாரா, திருமணத்திற்குப் பிறகு தனது இரட்டைக் குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்தியதால், சினிமாவில் இருந்து சிறிதுகாலம் ஒதுங்கி இருந்தார்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் “மூக்குத்தி அம்மன் 2” படத்தில் நயன்தாரா மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து வரும் செய்திகள் நயன்தாரா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமீபகாலங்களாக அவர், நிகழ்வுகளுக்கு தாமதமாக வருவது, ரசிகர்களை மதிக்காமல் நடந்து கொள்வது என பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்த காரணங்களாலேயே பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நயன்தாராவை வைத்து படம் பண்ணுவதற்கு தயங்கி வருவதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்தப் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர் வழங்கிய உடையை அணிய மறுத்த நயன்தாரா, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் கடுப்பான இயக்குனர் சுந்தர்.சி படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்த இயக்குனர் திட்டமிட்டிருந்த நிலையில், தனது குழந்தைகளின் காரணமாக அங்கு வரமுடியாது என நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
நயன்தாராவின் இந்த செயல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.