Monday, October 26, 2015

ஒற்றை ரோஜா

பிரியமானவர்களிடம் எல்லாம்
விடைபெற்றுக் கொண்டேன்
ஓர் நாள்
ஒற்றை ரோஜாவோடு
உனைப் பார்க்க வந்தேன்
அந்த ரோஜா
உனக்காக மலர்ந்ததல்ல
என்று நீ மறுதலித்தாய்
வருத்தத்துடன் நான்
விடைபெற்றுச் சென்றேன்
உனது பார்வைகள் தான்
பல்கலைக்கழகத்தில்
எனைப் பட்டம் வாங்க
வைத்தது
அந்த தேவதையை வாழ்வினிலே
தொலைத்தேன்
இதயத்தைப் பறித்துக் கொண்ட
அவள்
இரக்கமற்றவளாய் இருந்தாள்
அன்று ரோஜாவை
ஏற்க மறுத்த அவள்
இன்று
மலர் வளையத்தோடு வந்து
உட்கார்ந்திருந்தாள்
என் சடலத்தின் அருகில்.

Featured Post

Complete Guide to HSC Class 12 English Writing Skills (Sets 7-10) with Solutions

📥 Download Complete Guide PDF Complete Guide to HSC Class 12 English Writing Skills (Question Sets 7-10) Target Audience: Cl...

Popular Posts