Advertisement

உன் பிறந்த நாள்...!

சுழல்கின்ற பூமியினுள்

சுழலாத சூறாவளியாய்

உன் அன்பு,

சுழற்றி அடிக்கிறது என்னை...!



உன் கண்களின் ஒருநிமிட

சந்திப்பில் என் ஒட்டுமொத்த

உணர்சிக் குருவிகளெல்லாம்

சிறகு முளைத்துப்

பறக்கத் துவங்குகின்றன....!



என் உணர்வுகள்

ஒருங்கிணைந்து

உருவான,

குழந்தை நீ ...!



இன்று,

நீ மகிழ்ந்தால்

உன் பற்களாய் பிறவியுற்று

பிரகாசமாய்ப் புன்னகைப்பேன்...!


துன்பத்தில் உழன்றால் ,

உன் கண்ணீராய்க்

கரைபுரண்டோடி

கவலைகளைக் கரைத்திடுவேன்...!


உன் பிறந்தநாள்

பந்தங்களிடையே

பழகிப்போனாலும்,


ஏனோ

இன்று எனக்கு மட்டும்

புதிதாய்ப் பிறந்த நீ...!