Showing posts with label பொருள்செயல்வகை. Show all posts
Showing posts with label பொருள்செயல்வகை. Show all posts

Comparing Modern Poetry (Puthukkavithai) and Thirukkural | Iyal 6 | Class 10 Tamil

இயல் 6, கற்பவை கற்றபின்

புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.

புதுக்கவிதை

தக்காளியையும் வெண்டைக்காயும் 

தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில் 

தள்ளி நிற்கும் பிள்ளை 

அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை 

எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும் 

"அத்தனை காய்களையும் விற்றால்தான் 

மீதி ஐநூறாவது மிஞ்சும்; என்ன செய்ய? "

காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாக கொடுத்த 

இரண்டாயிரம் ரூபாயைக்

கூப்பிட்டுத் தந்துவிட்டு

பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம் 

என்பதை அடுத்த படி யோசிக்கும் அவர் மனம்!

குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 

புல்லார் புரள விடல்.

பொருள்செயல்வகை

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் முதற்பாவலரின் குறள்கருத்து புதுக்கவிதையில் மிளிர்கிறது. அருளும் அன்பும் கலவாத, நேர்மையற்ற வழியில் வரும் செல்வத்தை நல்லோர் மருத்துவிடுவர் என்ற குறளின் கருத்தைத் தள்ளுவண்டிக்காரர் பிரதிபலிக்கிறார். 

ஏழ்மைச் சூழலிலும், தன் குழந்தைக்கு அவசியமாய் ஆயிரம் ரூபாய் தேவைப்படும் சூழலிலும், யாரிடம் உதவி கேட்கலாம் என்று சிந்திக்கும் நல்ல மனிதராகத் திகழ்கிறார்; காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைக் கூப்பிட்டுத் தருகிறார்.  திருக்குறளில் அறிவுரையாக வழங்கப்பட்ட கருத்து, புதுக்கவிதையில் அனுபவமாக வழங்கப்பட்டுள்ளது.