OMTEX CLASSES

Tamil Poem Comprehension Questions and Answers (TN Board)

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ்சிலம்பே ! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • அ) பாரதியார்
  • ஆ) பாரதிதாசன்
  • இ) முடியரசன்
  • ஈ) பெருஞ்சித்திரனார் ✓
2. இப்பாடல் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பின் பெயர் யாது?
  • அ) மலரும் மாலையும்
  • ஆ) பாஞ்சாலி சபதம்
  • இ) கனிச்சாறு ✓
  • ஈ) கொடி முல்லை
3. 'தென்னன் மகள்' என்பதன் பொருள் யாது?
  • அ) சேரன் மகள்
  • ஆ) சோழன் மகள்
  • இ) பல்லவன் மகள்
  • ஈ) பாண்டியன் மகள் ✓
4. பாடலில் இடம்பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை குறிப்பிடுக.
  • அ) தென்னன், இன்னறும் ✓
  • ஆ) மன்னுஞ், மணிமேகலை
  • இ) முன்னும், முடிதாழ
  • ஈ) தென்னன், திருக்குறளின்
மாற்றம் எனது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்! தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!
1. இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்?
  • அ) வாணிதாசன்
  • ஆ) கண்ணதாசன் ✓
  • இ) வண்ணதாசன்
  • ஈ) முடியரசன்
2. இப்பாடலின் தலைப்பு யாது?
  • அ) இயேசு காவியம்
  • ஆ) சேரமான் காதலி
  • இ) தைப்பாவை
  • ஈ) காலக்கணிதம் ✓
3. மானிடத்துவம் என்று எதனை ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
  • அ) வளர்ச்சி
  • ஆ) ஏற்றத்தாழ்வு
  • இ) புகழ்
  • ஈ) மாற்றம் ✓
4. பாடலில் அமைந்துள்ள அடி மோனைச் சொற்களை எழுதுக.
  • அ) மாற்றம், மாறும் ✓
  • ஆ) மானிடம், மகத்துவம்
  • இ) எவ்வெவை, ஏகுமென்
  • ஈ) மாறுவர், மாறும்
மேகங்கள் ரொம்ப அற்புதமானவை தண்ணீரும் இல்லாமல் தன்னுயிரும் போகாமல் வான் வெளியில் மிதந்து செல்லும் போது மேகங்கள் மிகவும் மென்மையானவை.
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்ற கவிதைத் தலைப்பு
  • அ) சித்தாளு
  • ஆ) தேம்பாவணி
  • இ) அக்கறை
  • ஈ) மேகம் ✓
2. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • அ) வீரமாமுனிவர்
  • ஆ) பாரதியார்
  • இ) நாகூர்ரூமி ✓
  • ஈ) கல்யாண்ஜி
3. இப்பாடலின் அடிமோனைச் சொற்கள்
  • அ) தண்ணீரும், தன்னுயிரும் ✓
  • ஆ) வான்வெளி, மிதந்து
  • இ) மேகங்கள், தண்ணீரும்
  • ஈ) மிதந்து, மேகங்கள்
4. தண்ணீரும் தன்னுயிரும் - இலக்கணக்குறிப்பு
  • அ) உம்மைத்தொகை
  • ஆ) எண்ணும்மை ✓
  • இ) உவமைத்தொகை
  • ஈ) பண்புத்தொகை
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே
1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  • அ) கீரந்தையார்
  • ஆ) பரஞ்சோதி முனிவர்
  • இ) மோசிகீரனார்
  • ஈ) அதிவீரராம பாண்டியர் ✓
2. இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
  • அ) கலித்தொகை
  • ஆ) நீதிவெண்பா
  • இ) பெரியபுராணம்
  • ஈ) காசிக்காண்டம் ✓
3. 'முகமன்' - சொல்லின் பொருள்
  • அ) விருந்தோம்பல் சொல் ✓
  • ஆ) கடுஞ்சொல்
  • இ) பழிச்சொல்
  • ஈ) தீயசொல்
4. இப்பாடலில் பயின்றுவரும் அடியெதுகைகளை எழுதுக.
  • அ) இனிது, இருத்தல், இவ்வொன்பான்
  • ஆ) விருந்து, வியத்தல், உறைத்தல், இருத்தல்
  • இ) மகிழ்வன, மற்று, முகமன், போமெனில்
  • ஈ) விருந்து, திருந்து, பொருந்து ✓
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் யாது?
  • அ) நளவெண்பா
  • ஆ) முத்தொள்ளாயிரம் ✓
  • இ) ஏலாதி
  • ஈ) இன்னிலை
2. இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி யாது?
  • அ) உவமையணி
  • ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
  • இ) வஞ்சப்புகழ்ச்சி அணி
  • ஈ) தற்குறிப்பேற்ற அணி ✓
3. அள்ளல் என்பதன் பொருள்
  • அ) இசை
  • ஆ) சேறு ✓
  • இ) அஞ்சுதல்
  • ஈ) கூவுதல்
4. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
  • அ) அள்ளல் - அரக்காம்பல்
  • ஆ) அள்ளல் - வெள்ளம் ✓
  • இ) நச்சிலை - கோக்கோதை
  • ஈ) கைச்சிறகால் - கவ்வை
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்.
1. 'பெரும்பாண்' என்பதன் பொருள்
  • அ) புலவர்
  • ஆ) பாணர் ✓
  • இ) அமைச்சர்
  • ஈ) அந்தணர்
2. பாடலில் இடம்பெறும் அடிஎதுகைகள்
  • அ) பழுதுஇல், வழுவின்றி ✓
  • ஆ) வழுவின்றி, வழித்திறம்
  • இ) குழலினும், குரல்முதல்
  • ஈ) அரும்பெறல், பெரும்பாண்
3. 'வழு' என்பதன் பொருள்
  • அ) குற்றம் ✓
  • ஆ) சரி
  • இ) பொய்
  • ஈ) ஏமாற்றுதல்
4. இப்பாடலின் ஆசிரியர்
  • அ) திருத்தக்க தேவர்
  • ஆ) சீத்தலைச் சாத்தனார்
  • இ) கம்பர்
  • ஈ) இளங்கோவடிகள் ✓
விரிந்தன கொம்பில் கொய்த வீயென உள்ளம் வாட எரிந்தன நுதிநச்சு அம்புண்டு இரும்புழைப் புண்போல் நோகப் பிரிந்தன புள்ளின் கானில் பெரிதழுது இரங்கித் தேம்பச் சரிந்தன அசும்பில் செல்லும் தடவிலா தனித்தேன் அந்தோ!
1. இப்பாடல் இடம்பெற்ற நூல்
  • அ) இரட்சணிய யாத்திரிகம்
  • ஆ) பெத்லகேம் குறவஞ்சி
  • இ) தேம்பாவணி ✓
  • ஈ) சீறாப்புராணம்
2. இப்பாடலில் இடம்பெறும் அடியெதுகைகள்
  • அ) விரிந்தன, எரிந்தன, பிரிந்தன, சரிந்தன ✓
  • ஆ) விரிந்தன, வீயென
  • இ) பிரிந்தன, புண்போல்
  • ஈ) பிரிந்தன, புள்ளின்
3. "அசும்பு" என்பதன் பொருள்
  • அ) நிலம் ✓
  • ஆ) வானம்
  • இ) கடல்
  • ஈ) மேகம்
4. "கொம்பு" என்பதன் பொருள்
  • அ) கிளை ✓
  • ஆ) கொடி
  • இ) தண்டு
  • ஈ) வேர்
செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்.......
1. இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
  • அ) கலித்தொகை
  • ஆ) பெரியபுராணம்
  • இ) பரிபாடல் ✓
  • ஈ) முல்லைப்பாட்டு
2. 'செந்தீ' என்பதன் இலக்கணக் குறிப்பு
  • அ) பண்புத் தொகை ✓
  • ஆ) உவமைத் தொகை
  • இ) உம்மைத் தொகை
  • ஈ) வேற்றுமைத் தொகை
3. 'தண்பெயல்' என்பதன் பொருள்
  • அ) இனிய ஓசை
  • ஆ) வறண்ட வயல்
  • இ) குளிர்ந்த மழை ✓
  • ஈ) தணிந்த குடை
4. இப்பாடலின் ஆசிரியர்
  • அ) ஓதலாந்தையார்
  • ஆ) அம்மூவனார்
  • இ) கபிலர்
  • ஈ) கீரந்தையார் ✓
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்; உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
1. 'ஊழ் ஊழ்' என்பதன் இலக்கணக்குறிப்பு
  • அ) இரட்டைக்கிளவி
  • ஆ) பண்புத்தொகை
  • இ) அடுக்குத்தொடர் ✓
  • ஈ) வினைத்தொகை
2. இப்பாடலின் ஆசிரியர்
  • அ) ஓதலாந்தையார்
  • ஆ) அம்மூவனார்
  • இ) கபிலர்
  • ஈ) கீரந்தையார் ✓
3. பாடலில் உணர்த்தப்படும் கருத்து
  • அ) தத்துவக்கருத்து
  • ஆ) அறிவியல் செய்தி ✓
  • இ) நிலையாமை
  • ஈ) அரசியல் அறம்
4. விசும்பு, இசை, ஊழி - பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
  • அ) காற்று, ஓசை, கடல்
  • ஆ) மேகம், இடி, ஆழம்
  • இ) வானம், பேரொலி, யுகம் ✓
  • ஈ) வானம், காற்று, கலம்

No comments:

Post a Comment