OMTEX CLASSES

எனக்கு நயன்தாரா வேணும்.. முதல்வர் நிறைவேற்றுவாரா? முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் நடிகை நயன்தாராவை குறிப்பிட்டு பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டு, தங்களது தீவிர தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இதற்கிடையே, தேர்தல் பறக்கும் படையினரும் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டாலினை விமர்சிக்க நயன்தாராவை இழுத்த சி.வி. சண்முகம்

சமீபத்தில் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் புகழ்பெற்ற தத்துவமான "கனவு காணுங்கள்" என்பதை மேற்கோள் காட்டி, அதனை முதல்வரின் பிரச்சாரத்தோடு ஒப்பிட்டு கேலியாகப் பேசினார்.

"அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார், இவர் ஒருபடி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுவோம் என்கிறார். ஆமாம் எனக்கு நயன்தாரா வேணும் னா கனவை நிறைவேற்றுவாரா, நயன்தாராவை கல்யாணம் செய்து வை என்று கேட்டாலே கனவை நிறைவேற்றுவாரா?"

முதலமைச்சரின் வாக்குறுதியை விமர்சிப்பதற்காக, எந்த சம்பந்தமும் இல்லாமல் முன்னணி திரைநட்சத்திரத்தின் பெயரைப் பொது மேடையில் இவ்வாறாகப் பயன்படுத்தியது, தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

No comments:

Post a Comment