நமது சுற்றுச்சூழல் | 3 ஆம் வகுப்பு அறிவியல் | அலகு 1
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நமது சுற்றுச்சூழல் ______________ ஆல் சூழப்பட்டது.
விடை : இ. உயிர் மற்றும் உயிரற்ற காரணி
2. பின்வருவனவற்றுள் உயிர்க் காரணி எது?
விடை : ஆ. ஆடு
3. மனிதர்கள் தங்கள் உணவிற்காக ______________ச் சார்ந்துள்ளனர்.
விடை : அ. தாவரங்கள்
4. முதன்மை உற்பத்தியாளர்கள் எவை?
விடை : ஆ.பசுந்தாவரங்கள்
5. சிதைப்பவைக்கு எடுத்துக்காட்டு எது?
விடை : ஆ. பாக்டீரியா
6. பூமியில் பசுந்தாவரங்கள் இல்லையெனில், பின்வரும் எந்தெந்த உயிர்க் காரணிகள் அழிந்துவிடும்?
விடை : ஈ) அ, ஆ, இ மற்றும் ஈ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. _________ (பசு / மண்) ஒரு நுகர்வோர்.
விடை : பசு
2. இளந்தாவரங்கள் _________ (மரம் / மரக்கன்று) எனப்படும்.
விடை : மரக்கன்று
3. மரம் நடுதலால் நமக்கு _________ (ஆக்ஸிஜன் / நிலம்) கிைடக்கும்.
விடை : ஆக்ஸிஜன்
4. உலகச் சுற்றுச்சூழல் தினம் _________ (ஜூன் 15 / ஜூன் 5) அன்று கொண்டாடப்படுகிறது.
விடை : ஜூன் 5
5. _________ (சிதைப்பவை / உற்பத்தியாளர்கள்) என்பது இறந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உணைவப் பெறுகின்றன.
விடை : சிதைப்பவை
III. பொருத்துக
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்த முயற்சி செய்யுங்கள். சரியான விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பிரிவு அ
1. கல்
2. பாக்டீரியா
3. தாவரம்
4. எருமை
பிரிவு ஆ
அ. நுகர்வோர்
ஆ. உயிரற்ற காரணி
இ. சிதைப்பவை
ஈ. உற்பத்தியாளர்
விடைகள்
1. கல் - உயிரற்ற காரணி
2. பாக்டீரியா - சிதைப்பவை
3. தாவரம் - உற்பத்தியாளர்
4. எருமை - நுகர்வோர்
IV. சரியா? தவறா? எனக் கூறுக.
1. உயிர்க் காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் அவசியமாகிறது. (சரி)
2. நதி உயிர்க் காரணிக்கு எடுத்துக்காட்டு ஆகும். (தவறு)
3. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் வாரம் 'வன மேகாத்சவம்’ கொண்டாடப்படுகிறது. (சரி)
4. தாவரங்கள் என்பவை நுகர்வோர்கள். (தவறு)
5. தாவரங்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவும் இருப்பிடமும் தருகின்றன. (சரி)
V. விடையளி.
1. விஜய் ’P’ மற்றும் ’R’ என்ற இரண்டு காரணிகைள (ஒன்று உயிருள்ளது, மற்றொன்று உயிரற்றது) தனித்தனி கூண்டுகளில் வைத்து உணவும் நீரும் கொடுத்து அவற்றின் மாற்றத்தைக் கவனித்து வந்தான்.
அ) இரண்டில் உயிருள்ள பொருள் எது? உனது விடைக்கான காரணத்தை எழுதுக.
P உயிருள்ள பொருள் ஆகும். ஏனென்றால் P-யின் எடை முதல் வாரத்தை விட நான்காவது வாரம் அதிகமா உள்ளது.
ஆ) ஆறாம் வாரத்தில் உயிருள்ள பொருளின் எடை என்னவாக இருக்கும்?
12- கிகி இருக்கும்.
2. உயிர்க் காரணி, உயிரற்ற காரணிக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
உயிர்க் காரணி : தாவரங்கள், மனிதன்
உயிரற்ற காரணி : நீர், சூரியன்
3. உயிருள்ளைவ மற்றும் உயிரற்றைவக்கு இடையேயான ஏதேனும் மூன்று வேறுபாடுகைள எழுதுக.
உயிர்க் காரணிகள் (உயிருள்ளவை)
இவை சுவாசிக்கவும் வளரவும் செய்யும்
இவை உயிர் வாழ உணவு தேவை
இவற்றிற்கு உணர்ச்சி உண்டு
இளம் உயிரிகளை உருவாக்கும்
உயிரற்ற காரணிகள் (உயிரற்றவை)
இவை சுவாசிக்கவும், வளரவும் செய்யா.
உணவு தேவைப்படாது
இவற்றிற்கு உணர்ச்சி இல்லை
இளம் உயிரிகளை உருவாக்காது
4. பூச்சிகளுக்குத் தேவையான உயிரற்ற காரணிகைளப் பட்டியலிடுக.
காற்று, மண்
5. சுற்றுச்சூழல் சமநிைலக்குத் தேவையான உயிர்க் காரணிகள் யாவை?
உற்பத்தியாளர்கள், நுகர்வோர், சிதைப்பவர்
6. 'தாவரங்களை முதன்மை உற்பத்தியாளர்கள் எனக் கூறுகிேறாம்'. ஏன்?
தாவரங்கள், தமக்குத் தேவையான உணைவ ஒளிச்சேர்க்கை மூலம் தாமே உற்பத்தி செய்கின்றன. எனேவ, பசுந்தாவரங்கள் முதன்மை உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றன.
7. தாவரத்தின் எவையேனும் நான்கு பயன்களை எழுதுக.
❖ சுவாசிக்க உயிர்வளியைத் (ஆக்சிஜன்) தரும்
❖ உயிரினங்களுக்கு நிழைலயும், உணைவயும் தரும்
❖ சுற்றுப்புறத்தில் உள்ள தீமை விளைவிக்கும் வாயுக்கைளயும் புகையயையும் உறிஞ்சிக் கொள்ளும்.
❖ மழைப் பொழிவைத் தரும்
VI. செயல்திட்டம்
உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகளின் படங்கைளச் சேகரித்துப் படத்தொகுப்பு தயார் செய்க.
பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக.
1. பறவைகள் : நீர் , காற்று , சூரிய ஒளி, மண்.
2. பூச்சிகள் : நீர், காற்று , சூரிய ஒளி, மண்.
3. மனிதன் : நீர், காற்று , சூரிய ஒளி, மண்.
விவாதிப்போம்
1. பூங்காவில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. குரங்குகளும் பறவைகளும் அந்த ஆலமரத்தை வாழிடமாகக் கொண்டுள்ளன. அம்மரத்தின் கீழே மனிதர்களும் ஓய்வெடுப்பதுண்டு. அம்மரமும், குரங்குகளும், பறவைகளும், மனிதர்களும் எவ்வாறு ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர் என உனது நண்பர்களுடன் கலந்துரையாடுக.
2. 'தாவரம் முக்கியமான ஓர் உயிர்க் காரணி' ஏன்?
• தாவரம் தாமே பச்சையம் மூலம் உணவுத் தயாரிக்கிறது.
• பிற உயிர் வாழ காய்கனிகள் தருகின்றன.
3. உயிர்க் காரணிகளும், உயிரற்ற காரணிகளும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன என்பதைக் குழுவில் கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்க.
முயல்வோம்
1. பின்வரும் உயிர்க் காரணிகள் வாழ்வதற்குத் தேவையான உயிரற்ற காரணிகளை எழுதுக. (காற்று, நீர், சூரிய ஒளி, மண், நிலம், கோதுமை, பழங்கள், புல், கோழி)
அ. விலங்குகள் : காற்று, நீர், சூரிய ஒளி.
ஆ. தாவரங்கள் : காற்று, நீர், சூரிய ஒளி, மண்.
இ. மனிதன் : காற்று, நீர், சூரிய ஒளி, நிலம், பழங்கள், கோதுமை.
2. பின்வருவனவற்றிற்கு உதாரணம் தருக.
அ. காற்றில் பறக்கும் விலங்கு : வௌவால்
ஆ. நீரில் வாழும் விலங்கு : திமிங்கலம்
இ. நிலத்தில் நகரும் விலங்கு : ஆமை
ஈ. தாவரத்தை மட்டும் உண்ணும் விலங்கு : ஆடு
பின்வரும் உயிர்க் காரணிகளை வகைப்படுத்துக. (துளசி, பூஞ்சை , மாமரம், முதலை, கழுகு, பூனை, நாய், வெள்ளரித் தாவரம், மனிதன், முயல், பாக்டீரியா)
உற்பத்தியாளர்கள் : மாமரம், வெள்ளரித் தாவரம், துளசி.
நுகர்வோர்கள் : மனிதன், முயல், பூனை, நாய், கழுகு.
சிதைப்பவை : பாக்டீரியா, பூஞ்சை
சிந்தித்து விடையளி
அ. ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைகிறது. அது உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா?
உயிரற்றது.
ஆ. உயிருள்ள மரத்திலிருந்து மரக்கட்டைகளைப் பெறுகிறோம். அம்மரக்கட்டைகளிலிருந்து நாற்காலி செய்கிறோம். அந்த நாற்காலி உயிருள்ளதா? அல்லது உயிரற்றதா?
உயிரற்றது.