பாடலின் தெளிவுரை

தமிழ், காலம் தோன்றுவதற்கு முன்பே பிறந்தது. எல்லாக் காலங்களிலும் நிலைத்திருப்பதும் தமிழே!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

பாடலின் தெளிவுரை

தமிழ், காலம் தோன்றுவதற்கு முன்பே பிறந்தது. எல்லாக் காலங்களிலும் நிலைத்திருப்பதும் தமிழே! அகப்பொருள், புறப்பொருள் சார்ந்த இலக்கியங்களும், அவற்றை விளக்கிச் சொல்லும் இலக்கண நூல்களும், பிற மொழிகளுக்கு ஈடு இணையற்ற காப்பியங்களும் தமிழில் அமைந்துள்ளன. இவற்றை நினைத்து நெஞ்சம் மகிழ்ச்சியில் ஊர்வலம் கொள்ளட்டும்.

இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலத்தை ஏன் இருண்ட காலம் என்று கேட்கிறீர்கள்? அது நீதியை ஏந்திய தீபமாய்ப் பாட்டுக்கள் தோன்றிய காலம். மேலும், மானிட மேன்மையை நிலைநாட்டத் திருக்குறள் ஒன்றே போதும். அதைப் படித்து, அதன்படி வாழ்தல் வேண்டும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயங்கள் தமிழை வளர்த்தன; தமிழும் சமயங்களை வளர்த்தது. தாயும் சேயும் போல தமிழும் சமயங்களும் இணைந்திருந்தன.

சித்தர்களின் மரபில் வந்தவர்கள் பகுத்தறிவு ஒளியை இந்நிலத்தில் பாய்ச்சினர்.

விரலை மடக்கிக்கொண்டு, ‘இந்த அழகிய வீணையில் இசை எழவில்லையே’ என்று சொல்வது போல, குறைகளைக் களைந்துவிட்டு, தமிழ் புதுக்கோலம் புனைந்து வளரட்டும். நாளும் நற்றமிழை வளர்ப்போம்.

Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View