தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறையில் வேலை – 10வது போதும் || மாதம் ரூ. 35100 சம்பளம்! Chengalpattu Village Assistant Recruitment 2025

தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறையில் வேலை – 10வது போதும் || மாதம் ரூ. 35,100 சம்பளம்!

Chengalpattu Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு மற்றும் சம்பளம் போன்ற முழு விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.

Chengalpattu Recruitment 2025 - ஒரு பார்வை

விவரம் (Description) தகவல் (Details)
வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை 2025
துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
பணிகள் கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்கள் 41
பணியிடம் செங்கல்பட்டு – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம் (Offline)
கடைசி தேதி 05.08.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் chengalpattu.nic.in

காலிப்பணியிடங்கள் விவரம்

செங்கல்பட்டு வருவாய் துறையில் கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்கு மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாலுகா வாரியான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • செய்யூர்: 09
  • மதுராந்தகம்: 23
  • திருக்கழுக்குன்றம்: 01
  • தாம்பரம்: 02
  • வண்டலூர்: 06

கல்வித் தகுதி

இந்த கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் வட்டத்தைச் சேர்ந்தவராகவும், அங்கு நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்: 21 முதல் 37 வயது வரை.
  • மாற்றுத்திறனாளிகள்: 21 முதல் 42 வயது வரை.
  • இதர வகுப்பினர்: 21 முதல் 32 வயது வரை.

சம்பள விவரங்கள்

செங்கல்பட்டு வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின்படி, கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

கிராம உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • வாசித்தல் மற்றும் எழுதும் திறன்: தமிழ் மொழியில் வாசித்தல் மற்றும் எழுதும் திறமை சோதிக்கப்படும்.
  • திறன் தேர்வு: மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் சோதிக்கப்படும்.
  • நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் பதவிக்குரிய தகுதிகள் மதிப்பீடு செய்யப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு: சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அசல் ஆவணங்களும் சரிபார்க்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025
  • எழுத்துத் தேர்வு தேதி: 05.09.2025
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 முதல் 26.09.2025 வரை

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.