OMTEX AD 2

பத்தாம் வகுப்பு தமிழ்: மாதிரி வினாத்தாள் (திறன் அறிவோம் பகுதி) (10th Standard Tamil: Model Question Paper (Thiran Arivom Section))

மாதிரி வினாத்தாள்

மாதிரி வினாத்தாள்

பிரிவு - அ (சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக)

(மதிப்பெண்கள்: 5 x 1 = 5)

  1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
    • அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
    • ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
    • இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
    • ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
  2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -
    • அ) இலையும் சருகும்
    • ஆ) தோகையும் சண்டும்
    • இ) தாளும் ஓலையும்
    • ஈ) சருகும் சண்டும்
  3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் -
    • அ) எந் + தமிழ் + நா
    • ஆ) எந்த + தமிழ் + நா
    • இ) எம் + தமிழ் + நா
    • ஈ) எந்தம் + தமிழ் + நா
  4. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -
    • அ) பாடிய; கேட்டவர்
    • ஆ) பாடல்; பாடிய
    • இ) கேட்டவர்; பாடிய
    • ஈ) பாடல்; கேட்டவர்
  5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -
    • அ) குலைப்பெயர் வகை
    • ஆ) மணிப்பெயர் வகை
    • இ) கிளைப்பெயர் வகை
    • ஈ) இலைப்பெயர் வகை

பிரிவு - ஆ (குறுவினா)

(மதிப்பெண்கள்: 5 x 2 = 10)

  1. 'பலகை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
  2. "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
  3. கீழ்க்கண்ட தொடர்களில் சரியான தொடரைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
    • - ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
    • - ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
    • - ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
  4. "கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது" - பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
  5. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

பிரிவு - இ (சிறுவினா)

(மதிப்பெண்கள்: 1 x 5 = 5) - எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.

  1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
  2. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.' இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
  3. `அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' - இவை அனைத்தையும் யாம் அறிவோம். இக்கூற்றில் அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

பிரிவு - ஈ (நெடுவினா)

(மதிப்பெண்கள்: 1 x 10 = 10) - எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.

  1. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
  2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
    "கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக!"

    - கண்ணதாசன்

  3. 'புயலிலே ஒரு தோணி' கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?