அம்மா கவிதை - Amma Kavithai in Tamil

 அம்மா கவிதை - Amma Kavithai in Tamil

அம்மா கவிதை - Amma Kavithai in Tamil


என் முகம் பார்க்கும் முன்பு

என் குரல்கேட்கும் முன்பு

என் குணம் அறியும் முன்பு

என்னை நேசித்த ஓர் இதயம் அம்மா


காலங்கள் மாறினாலும் நம்

அம்மாக்கள் நம்மிடம்

கேட்கும் கேள்விகள்

மட்டும் மாறவே மாறாது


எத்தனை முறை சண்டை

போட்டாலும் தேடிவந்து பேசும்

தெய்வம் என் தாயை தவிர

வேறேதும் உண்டோ இந்த உலகினிலே?



அன்னையர் தின வாழ்த்துக்கள் - Happy Mother's Day Wishes in Tamil

அம்மா கவிதை - Amma Kavithai in Tamil


அம்மாவின் கைக்குள்

இருந்த வரை உலகம்

அழகாகத்தான் தெரிந்தது


அம்மா என்னும்

மந்திரமே அகிலம்

யாவும் ஆள்கிறதே


நம்ம கஷ்ட படும் போதும்

அழும் போதும் கூடவே

இருந்து ஆறுதல் சொல்றது

அம்மா மட்டும் தான்


Mother's Day Kavithai in Tamil

Mother's day wishes kavithai

Kavithai for Mother

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தினம்

இவ்வுலகில் மனதளவில் கூட

துரோகம் நினைக்காத

ஒரே ஜீவன் அம்மா



Tamil mother's day wishes for whatsapp

இழந்தவன் தேடுவதும்

இருப்பவன் தொலைப்பதும்

தாயின் அன்பு


அனைத்தையும் மறந்து

அன்னை மடியில் தூங்கிய

குழந்தை பருவம் நாம்

வாழ்ந்த சொர்க்க காலங்கள்


ஒவ்வொரு நாளும் கவலை

படுவாள் ஆனால் ஒரு நாளும்

தன்னை பற்றி கவலை படமாட்டாள்


உயிரை எடுக்க ஆயிரம்

சொந்தம் உயிர் கொடுக்க

ஒரே சொந்தம் அம்மா


உலகில் உன் வளர்ச்சியைக்

கண்டு பொறாமைப்படாத

ஒரே ஜீவன் அம்மா



Mother's Day wishes in tamil

அடி முடி தேடினாலும்

அகராதியை புரட்டினாலும்

முழுமையான அர்த்தம்

அறிய முடியாத உயிர்ச்

சித்திரம் அம்மா


மூன்று எழுத்து மந்திரமே

முடிவில்லாத காவியம

என்னை ஈன்றொடுத்த தெய்வமே

என் வாழ்க்கையின் முதல்

தெய்வம் நீயே என் அம்மா


அன்பை சொல்ல ஆயிரம்

உறவு இருந்தாலும் அதை

அன்பாய் சொல்ல அம்மாவை

தவிர வேறு யாரும் இல்லை


ஆயிரம் விடுமுறை வந்தாலும்

அவள் அலுவலகத்திற்கு

மட்டும் விடுமுறையில்லை

அம்மா சமயலறை


தன் உயிரைக் கொடுத்து

மற்றொரு உயிரைக் காப்பாற்றும்

ஒரே தெய்வம் அம்மா


வயது வித்தியாசம் பார்ப்பதில்லை

அம்மாவின் கொஞ்சலில்

மட்டும் இன்னும் குழந்தையாக


மழையில் நனைந்த என்னை

முந்தானையில் அனைத்து

பாசத்தோடு தலை துவட்டும்

போது அந்த மழையும்

பொறாமை கொள்ளும் தாயே


அம்மா கவிதை - Amma Kavithai in Tamil


வலி நிறைந்தது என்பதற்காக

யாரும் விட்டு விடுவதில்லை

தாய்மை


உன் அருகில் இருக்கும் போதே

அள்ளிக்கொள் தொலைந்து

போன பின் தேடினாலும்

கிடைக்காத அன்பின்

பொக்கிஷம் "அம்மா"


நான் முதல் முறை

பார்த்த பெண்ணின்

அழகிய முக தரிசனம்

என் அம்மா


ஒரு உயிர் மற்றொரு உயிரை

சுமப்பது பார்ப்பவர்க்கு

பாரமாக இருந்தாலும்

சுமப்பவளுக்கோ

அது வரம் தான்


கடல் நீரை கடன்

வாங்கி என் கண்

கொண்டு அழுதாலும்

நான் சொல்லும் நன்றி

உனக்கு ஈடாகுமா


வெறும் எழுத்துக்கள்

ஆயின என் கவிதைகள்

ஒரு சொல்லின் முன்பு

அம்மா


தாய் மடியை காட்டிலும்

ஒரு சிறந்த தலையணை

இந்த உலகில் வேறு

எதுவும் இல்லை


அம்மா அன்பான வண்ணம்

விழாமல் இருக்கும்


எத்தனை காலங்கள் எத்தனை

ஜென்மங்கள் கடந்தாலும்

உன் அன்பு மட்டும்

என்றும் குறையுமா அம்மா


இரவு பகல் பாராமல்

ஒளிவிளக்காய் நீ இருந்தாய்

உன் நிழலிலும் என்னை

மிதிக்காமல் கண் விழித்துப்

பார்த்துக் கொண்டாள்


ஒவ்வொரு உறவுக்கும் ஒரு

எதிர்பார்ப்பு ஒன்று இருக்கும்

ஆனால் உன் உறவுக்கு

மட்டும் தான் எந்த

எதிர்பார்ப்பும் இல்லை அம்மா


ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ

ஆசைகள் நீ சுமந்த அத்தனையும்

உனக்காக அல்ல எனக்காக தானே அம்மா


நான் அழுத பொழுது

என்னை சிரிக்க வைத்த

முகம் அம்மா


தோல்வி கனம் என்னை

துரத்தும்போது என் மனம்

தேடுதே உன் மடியில்

சாய்ந்து இளைப்பாறும்

இடம் அதே அம்மா


என்றுமே என்னை வெறுக்காத

குணம் தவறுகளை மன்னிக்கும்

மனம் அளவு இல்லாத பாசம்

நேசம் உடையவள் தான் அம்மா


அம்மா கவிதை - Amma Kavithai in Tamil


எத்தனை உறவுகள் தான்

எத்திசையில் தேடி வந்தாலும்

ஏன் ஆயிரமாயிரம் அன்பை

பொழிந்தாலும் அது தாய்

அன்பிற்கு ஈடாகுமா


அழுவதற்கு கண்கள்

அணைப்பதற்கு கைகள்

சாய்ந்து கொள்ள தாயின்

மடி எப்பொழுதும் காத்திருக்கும்


நீ திட்டி நான் அழுததில்லை

நீ அடித்தும் வலித்ததில்லை

வலிக்காமல் அடிப்பதை எங்கு

தான் நீ கற்றாயோ என் மனதை

உடைக்காத ஓர் உயிரும் நீயே


தோட்டத்திற்கு அழகு பூக்கள்

என் வெற்றிக்கு அழகு அம்மா


ஆழ்கடலில் ஆழம் பெரிதா

இல்லை நீ காட்டும் பேரன்பே

பெரியது என்பேன் நான்

இவ்வுலகில் என்றும்


எனக்கு உயிர் தந்த

உன்னை என் உயிர்

உள்ளவரை மறவேனோ


சிறுவயதிலே கடைவீதியில்

உன் கரம் பிடித்து நான்

நடந்த நாட்களே உலகை

சுற்றிய நொடிப் பொலுதாய்

என் மனம் உணர்ந்ததே அம்மா


மகன்களின் இதயக்கூட்டில்

உண்மையான ராணி

அம்மா நீ மட்டும் தான்


என் பிள்ளை அழகு என்று

ஊரெல்லாம் நீ சொல்ல

கரும்புள்ளி ஒன்று என்

கன்னத்தில் நீ வைத்தாயே

கர்வத்தில் சிரித்தேனே நான்

அழகு என்று என்னை எண்ணி


அன்பு என்ற சொல்லுக்கு

அர்த்தம் நீயே பாசம் என்ற

சொல்லுக்கு பொருளும் நீயே


வேகமும் விவேகமும் கற்று

நீ தந்தாயே உன்னாலே

நடந்தேனே உன்னாலே

நான் இன்று பயின்றேனே

தாய் தமிழை நன்று


கருவறையில் வளர்ந்துக்

கொண்டிருக்கிறது என

சொல்லி சிரித்தாள் வளர்

பிறையாய் உன் கருவில்

வளரும்போதே முழுநிலவாய்

நீ என்னை தொட்டு ரசித்தாய்


பாலூட்டி சீராட்டி பசி

மறந்து என்னை காத்தாயே

அம்மா என நான்

அழைக்கும் ஒரு சொல்லுக்கு


பிறக்கும் முன்னே உன் வலி

கொண்டு உலகை கண்டேன்

இறந்த பின்னே உன் எதிர்நின்று

என் உலகை காண்கிறேன் அம்மா


பிறக்கும் போது உன்

வலியை உணர்ந்து தான்

அழுது நான் பிறந்தேனோ தாயே


தோல் சாய்ந்து நீ

என்னைத் தாலாட்டு

பாடும்போது சொர்க்கத்தில்

இருப்பது போல ஆனந்தம்

கொண்டேன் அம்மா


உருவம் அறியா கருவிலும்

என்னை காதல் செய்தவளே

உன்னைப் பற்றி எழுதாமல்

நான் எழுதும் எழுத்துக்கள்

தான் கவிதை ஆகுமா


கருவறையில் இருந்த உணர்வை

உன் மடியில் உணருகிறேன் அம்மா


நிகரில்லா என் சுவாசம்

நீயே என் மனம் தினம்

ஏங்கும் அன்பும் நீயே அம்மா


ஆயிரம் கவிதைகள் உனக்காக

எழுதினேன் ஆனால் நீயோ

அம்மா என்ற ஒரு வார்த்தை

கவிதைக்குள் அனைத்தையும்

அடக்கி கொண்டாய்


கடவுள் தந்த உயிர் என்று

சொல்லவா இல்லை

கடவுள்களிலும் உள்ள

உயிர் என்று சொல்லவா


நிலா காட்டி சோறு

ஊட்டும்போது தெரியாது

அம்மா என்னையே சுற்றி

வந்த நிலா நீ தான் என்று


நீ உன் பிறவியை எனக்காக

தியாகம் செய்யத் துணிந்து

விட்டாய் உனக்காக நான்

என்ன செய்யப் போகிறேன் அம்மா


இவ்வுலகில் அன்பை மட்டுமே

எதிர்பார்க்கும் ஒரு உறவு

நீ மட்டுமே அம்மா


நான் எத்தனை முறை

கீழே விழுந்தாலும் என்னை

தூக்கி விட ஓடோடி வருபவள்

நீ மட்டும் தானே அம்மா


கருவில் சுமந்த உன்னை

என் வாழ்நாள் வரை மனதில்

சுமந்து கொண்டிருக்கிறேன்

ஏனெனில் உன் கடமைக்கு

அல்ல உன் பாசத்திற்கு அம்மா


ஆயிரம் சாமிகள் என்

கண்ணுக்கு தெரிந்தாலும்

என் முதல் சாமி

நீ தானே அம்மா


நான் கடவுளிடம் மனதார

வேண்டுகிறேன் மீண்டும்

நீயே என்னை கருவில் சுமக்க


நான் நோய் என்று படுத்து

விட்டால் அந்த நோய்க்கே

சாபம் விட்டவள் அம்மா


என்ன தவம் செய்தேன்

உனக்கு நான் மகனாய்

பிறக்க அடுத்த பிறவியிலும்

இதே வரம் பெற்றிட

இறைவனிடம் வேண்டுகிறேன்


நான் வாழ்க்கையில் தோற்றுக்

கொண்டே இருந்தாலும்

என்ன நீ ஜெயிக்க வைத்துக் கொண்டே

தான் இருப்பாய் என் அம்மா


அம்மாவுக்கு என்று தனியாக

கவிதை வேண்டாம்

அன்பாக பழகிப் பார்

அம்மாவே கவிதை தான்


உலகத்துல தாய விட

பெரிய சக்தி

எதுவுமே இல்ல


நூறு சாமிகள் இருந்தாலும்

அம்மா உன்னைப் போல்

ஆகிடுமா கோடி கோடியாய்

கொடுத்தாலும் நீ தந்த

அன்பு கிடைத்திடுமா


இந்த உலகில் பெற்ற

தாயை தவிர யாருடைய

அன்புக்கும் அடிமை

ஆகிவிடாதீர்கள்

ஏமாற்றி விடுவார்கள்


அம்மா ஒவ்வொரு நாளும்

கவலைப் படுவாள்

ஆனால் ஒரு நாளும்

அவளைப் பற்றி

கவலைப்பட்டிருக்க மாட்டாள்


அனலில் இருக்கும்

அம்மாவை பற்றிக்

கொண்டது ஐஸ்கட்டி


ஒவ்வொரு முறை மனம்

தளரும் போது மயிலிறகாய்

மனம் வருடுவது அம்மாவின்

வார்த்தைகள் மட்டுமே


சரியான பாதையில்

சரியாகப் போனாலும்

தாய் சொல்வாள்

பார்த்துப் போ


தெய்வத்தை கைபிடித்து

கோவிலுக்கு அழைத்து

சென்றதுண்டு - அம்மா


மறு பிறவி இருந்தால்

செருப்பாக பிறக்க

வேண்டும் என் அம்மா

காலில் மிதிபட அல்ல

என்னை சுமந்த அவளை

ஒருமுறை நான் சுமப்பதற்காக


தாய்மொழி அறிந்தவர்கள்

தடுமாறுவதில்லை

தாயின் வலி உணர்ந்தவர்கள்

தடம் மாறுவதில்லை


இன்பம் துன்பம் எது

வந்த போதிலும் தன்

அருகில் வைத்து அனைத்து

கொள்கிறது தாய்மை


வார்த்தைகளே இல்லாத வடிவம்

அளவுகோலே இல்லாத அன்பு

சுயநலமே இல்லாத இதயம்

வெறுப்பை காட்டாத முகம்


தனக்கு மிக பிடித்த

ஒன்றை என் கணவருக்கு

பிடிக்காது என் பிள்ளைக்கு

பிடிக்காது என்று சொல்லி

செய்யாமல் விட்டு விடும்

தேவதையின் சாயல் அம்மா


எலும்புகள் உடையும் அளவு

மரண வலி பிரசவ வலி

அதை தாங்கிய தாயால்

தன் பிள்ளையின் ஒரு துளி

கண்ணீரை தாங்க முடிவதில்லை


அம்மா கவிதை - Amma Kavithai in Tamil


தாய் நம்மிடம் எதிர்பார்ப்பது

பணத்தையல்ல தன்னுடைய

வளர்ப்பை பிறர் குறை

சொல்லாதவாறு உள்ள

நல்ல குணத்தை


உள்ளத்தில் நஞ்சு வைத்து

உதட்டினிலே கொஞ்சி

பேசும் தந்திரத்தை

அறியாத ஓர் உயிர்

அன்னை மட்டும் தான்


தன்னலம் விரும்பி

வாழும் உலகில்

என் நலம் விரும்பி

வாழும் ஓர்

உயிர் அம்மா


கோபம், வெறுப்பு, பிடிவாதம்

என தன் பிள்ளைகள் எதை

காட்டினாலும் உன் மீது

அன்பு மட்டுமே செலுத்தும்

ஒரே ஜீவன் அம்மா


உழைப்பு சுரண்டலையும்

தன் தியாகத்தையும்

குடும்பத்திற்காக

எளிமையாக கடந்து

செல்பவள் தாய்


கனவு, ஆசை, இலட்சியம்

ஆகியவற்றை கலைத்து

தன் குடும்பத்திற்காக

வாழும் அனைத்து

தாய்மார்களுக்கும்

அன்னையர் தின வாழ்த்துக்கள்


பூமி நம்மை தாங்கும்

முன்னே கருவில் நம்மை

தாங்கியவள் அன்னை


அன்பின் முழு

வடிவமே அன்னை


ஓயாமல் உழைக்கும்

அன்னைகளுக்கு

அன்னையர் தின வாழ்த்துக்கள்


உழைப்பு என்னும் கூராயுதத்தால்

உலகை சீராக்கும் அன்னைகளுக்கு

அன்னையர் தின வாழ்த்துக்கள்


உதிரத்தை உணவாக்கி

உழைப்பை மூலதனமாக்கும்

தந்தையுமான தாய்களுக்கு

அன்னையர் தின வாழ்த்துக்கள்


உலகின் முதல் அறிமுகம்

அறிவின் முழு உருவம்

அன்பின் ஆதி ஊற்று

காத்தலின் கடவுள் நீ

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்


வரம் கேட்டு கடவுளிடம்

போனேன் வீட்டிற்க்கு சென்று

வணங்க சொன்னது விழிபிதுங்கி

வீட்டிற்கு போனேன் வழிமேல்

விழிவைத்து வீட்டில் காத்திருந்தது

என் கடவுள் அம்மா

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்


பொன்னும் பொருளும்

அருளும் அறிவும்

அழகும் அரியனையும்

கிடைத்தாலும் பிரசவித்தவளின்

அன்பு போல் வருமா

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்


அடுப்பாங்கரை தொடங்கி

அனைத்து துறைகளிலும்

வாழ்வதற்கான போராட்டத்தில்

போராட்டமே வாழ்வாய்

எதிர்நீச்சல் போட்டு

கொண்டிருக்கும் அனைத்து

அன்னைகளுக்கும் வாழ்த்துக்கள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்


தாய்மையின் வலி என்னவென்று

எனக்கு தெரியும் அதனால் தான்

அம்மாவுடன் சேர்ந்து நானும்

அழுதேன் நான் பிறக்கையில்

அன்னையர் தின வாழ்த்துக்கள்


இறைவன் எனக்கு தந்த

முதல் முகவரி

உன் முகம் தான் அம்மா


இந்த உலகத்திற்கு

நான் வருவதற்கு

முன்பாகவே என்னை

காதலித்தவள்

நீ மட்டுமே அம்மா


காதல் என்ற மூன்றெழுத்தில் உள்ள அன்பு

அம்மா என்ற மூன்றெழுத்திலிருந்து தான் உருவாகிறது


என் அம்மா என்னை அடிக்கும் போது

இருந்த கோபத்தை விட

நான் அழுத பின்

கட்டியணைக்கும் பாசம்

தான் பெரிது



Collection of Best amma kavithai in Tamil, amma kavithai WhatsApp, Mother's Day wishes quotes, Mother's Day wishes kavithai

Mother's Day Wishes in Tamil

Annaiyar thina kavithai

Amma whatsapp kavithai

Kavithai for Amma in Tamil