தமிழ்நாடு அரசு ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலை – 10வது போதும் || ரூ. 35100 சம்பளம்! Ranipet Village Assistant Recruitment 2025

தமிழ்நாடு அரசு ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலை – 10வது போதும் || ரூ. 35100 சம்பளம்!

தமிழ்நாடு அரசு ராணிப்பேட்டை மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 43 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைவாய்ப்பு குறித்த கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்களையும் கீழே தெளிவாகக் காணலாம்.

📋 ஆட்சேர்ப்பு சுருக்கம்

விவரம் தகவல்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
துறைவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
பணிகிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்கள்43
பணியிடம்ராணிப்பேட்டை – தமிழ்நாடு
சம்பளம்ரூ. 11,100 - ரூ. 35,100
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம் (Offline)
கடைசி தேதி06.08.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்ranipet.nic.in

📍 தாலுகா வாரியான காலிப்பணியிடங்கள்

ராணிப்பேட்டை வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணிக்கு மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் உள்ளன. தாலுகா வாரியான விவரங்கள்:

  • அரக்கோணம் – 06
  • ஆற்காடு – 07
  • கலவை – 12
  • நெமிலி – 05
  • சோளிங்கர் – 03
  • வாலாஜா – 10

🎓 கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் வட்டத்தைச் சேர்ந்தவராகவும், நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

👤 வயது வரம்பு

01.07.2025 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்:

  • பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர்: 21 முதல் 37 வயது வரை.
  • மாற்றுத்திறனாளிகள்: 21 முதல் 42 வயது வரை.
  • இதர வகுப்பினர்: 21 முதல் 32 வயது வரை.

💰 சம்பள விவரங்கள்

கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை (Level - 1) வழங்கப்படும்.

🏅 தேர்வு செயல்முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • திறன் தேர்வுகள்: மிதிவண்டி ஓட்டும் திறன் மற்றும் தமிழில் வாசித்தல்/எழுதும் திறன் சோதிக்கப்படும்.
  • நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் தகுதிகள் மதிப்பீடு செய்யப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு: சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அசல் ஆவணங்களும் சரிபார்க்கப்படும்.

🗓️ முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: 07.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2025
  • எழுத்து தேர்வு தேதி: 05.09.2025
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 முதல் 26.09.2025 வரை

✍️ விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியான விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் 06.08.2025 தேதிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.